Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
காடு
Kaadu
- பக்கங்கள்
- 474
- வடிவம்
- Hardcover
- பதிப்பகம்
- தமிழினி
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- First Edition
- ASIN
- B00H6ZU8H2
அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்த நாவல். இயற்கை அன்னையின் மடியில் தவழும் குறிஞ்சி நிலக் காடுகளின் அழகையும், அது எவ்விதம் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் விரிவாகக் கூறுகிறது.
மனித உறவுகளின் நுட்பமான உணர்வுகளையும், காமத்தின் பலவிதமான வண்ண பேதங்களையும் இக்கதை ஆராய்கிறது. தேர்ந்த வாசகர்களுக்கு மட்டுமே எட்டும் வகைய…
Quotes
சிமிண்ட் குழைவதைப் பார்க்கையில் ஓர் இதம். மென்மையான குழைவுகள். மண்வெட்டியால் அரியப்படும்போது உருவாகும் சிறு சமப்பரப்புகள். நீர் ஊற்றப்படும்போது நுரைக்கும் கொழும்பால். கருங்கற்கள் அடுக்கப்படுவதைச் சலிப்பின்றிப் பார்த்து நிற்கலாம். தனித்தனியாகக் கிடக்கையில் எவ்வித வடிவமும் இல்லாத சாம்பல் நீலமொத்தைகள். ஒரு கல் மீது ஒரு கல்லைத் தூக்கி கொத்தன் சிவனாண்டி வைக்கும்போது ஒன்றின் புடைப்பு பிறிதின் குழிவில் கச்சிதமாகப் போய் அமர்கிறது. ஒன்று பிறிதை நிரப்பி இணைந்து ஒற்றைக் கற்சுவராக மாறுகின்றன. கொத்தனாரின் கண்களுக்கு மட்டும் அவை தனிக்கற்கள் அல்ல. கட்டப்படாத ஒரு சுவரிலிருந்து பிரிந்து கிடப்பவை. குண்டு தொங்கும் நூல், ரசமட்டம், மரச்சட்டம். மெல்ல மெல்ல அவற்றினால் வகுக்கப்பட்டு சீரான, நேரான வடிவங்கள் எழுந்து வருகின்றன. சுற்றிலும் சீரற்ற பூமி. மண்ணின் வடிவ ஒழுங்கற்ற அலைகள். நடுவே அந்தச் சீரான வடிவம் மனிதனின் இச்சைபோல. மனிதன், அவனால் முடிந்தால் பூமியை முழுக்க இப்படிச் சீரான வடிவங்களாக மாற்றி விடுவான். அதற்கான ஒரு தொடக்கம் இந்தச் சுவர். இந்தக் கல்வெர்ட். இந்த ஓடைக்கரை. அப்பால் பிரம்மாண்டமாக எழுந்த சிற்றாறு அணை.
வாழ்க்கை என்பது ஒரு மலையேற்றம். மலை ஏற ஏற ஒவ்வொன்றும் சிறியதாகி அற்பமாகி பார்வையை விட்டு மறைந்தபடியே உள்ளன. ஏறி ஏறி உச்சியில் கால் வைத்ததும் மலையே அற்பமாகி மறைந்துவிடுகிறது. ஏறும்போதெல்லாம் நான் நான் என்று நாம் உணர்ந்த சுயமும் அற்பமாகிவிடுகிறது. எல்லாவற்றையும் அற்பமாக்கிவிடும் வானம் மட்டுமே எஞ்சுகிறது.
ஆனால் தொலைவில் ஓங்கி எழுந்து நிற்கின்றன மலைகள். அவற்றின் பச்சைப்பசும் குவியல் மீது குளிர்ந்த கரிய பாறை முகடுகள். அவற்றின் மௌனம் தனக்குள் சிரித்துக்கொள்வது போலிருக்கிறது. மலைமுகடுகளைப் பார்க்கும்போது மனதில் ஓடும் எண்ணங்கள் வேகம் குறைந்து கனத்து அசைய ஆரம்பித்துவிடும். சில கணங்களில் காட்டையும் மலைச்சரிவுகளையும் அம்மலை முகடு மீதிருந்து பார்ப்பதுபோல ஒட்டு மொத்தமாகப் பார்க்க முடியும். அந்த விரிவில் காடு ஒன்றுமே நிகழாத வெளியாக விரிந்து கிடக்கும். மரங்கள் குலுங்குகின்றன. தொலைவில் ஒரு புள்ளிமான் மட்டும் குனிந்து மேய்கிறது. கல்வெர்ட் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் ஒன்றுமே நிகழவில்லை. சிறிய அசைவுகள். அசையாது படுத்திருக்கும் பசு மீது உண்ணிகள் நகர்வதுபோல. வேலை என்று ஒன்றுமில்லை. மலைகளின் அடியில் அப்படி சும்மா இருப்பது சாதாரண விஷயமல்ல. ஒரு தருணம் மலையளவு பெருத்து விரிந்தும், மறுதருணம் மலைகளுக்கு முன் தூசியாக உணர்ந்தும் மனம் அங்குமிங்கும் பெருகி ஓடிக்கொண்டே இருக்கிறது. ஏராளமான சொற்கள். எல்லாச் சொற்களும் சற்று அசைந்தால் கூட கைபட்ட தடாகத்து மீன்கள்போல மறைந்துவிடுகின்றன.
Shelves
More like this
அறம்
அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆன்…
முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதி…
ரப்பர்
தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காடுகள் அழிந்து ரப்பர் தோட்டங்களாக மாறிய சூழலை மையமாகக் கொண்டு விரியும் இந்நாவல், வணிகமயமாதலும் சுற்றுச்சூழல் அழிவும் ஒரு நில…
ஏழாம் உலகம்
சமூகத்தின் மிக அடித்தளத்தில், நாகரிகம் என்னும் மாயத்திரைக்குக் கீழே வாழும் விளிம்புநிலை மனிதர்களின் இருண்ட உலகத்தை நுட்பமாகச் சித்தரிக்கும் நாவல் இது. உடல் ஊனமுற்ற பிச்சைக்க…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
தண்ணீர் தேசம்
இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்
எல்லாச் சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தொடங்கியவைதாம். எந்த வனாந்தரத்தை அழிக்கும் நெருப்பும் ஒரு பொறியிலிருந்து புறப்பட்டதுதான். எல்லாக் கலைகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு …
பிரயாகை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதம் நாவல் வரிசையின் ஐந்தாவது நூல் பிரயாகை. மகாபாரதத்தின் பல்வேறு கதை மாந்தர்களும் ஜெயமோகனின் எழுத்தில் மீள் உருவாக்கம் கண்டு புதிய துலக்கம் ப…
வெள்ளி நிலம் (சிறார் நாவல்)
வீட்டுப்பாடம், டியூஷன், சிறப்பு வகுப்புகள், கராத்தே வகுப்பு என, பெரியவர்களைப் போலவே சிறுவர்களும் தங்களைப் பரபரப்பாக வைத்திருப்பதால், அவர்களும் ‘ஸ்ட்ரெஸ்’க்குள்ளாகின்றனர். பாட…
நூறு நிலங்களின் மலை
ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புத…
குகைகளின் வழியே
ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அனுபவம். இவற்றில் பெலும் குகை ஓரளவு வசதி செய்யப்பட்டுள்ளது.சட்டிஸ்கர் குகைகள் முழுமையாக கைவிடப்பட்டவை. பல குகைகளில் இருளில் சேற்றில் தவழ்ந்தும் ந…