Quotes from நீதிதேவன் மயக்கம்

கம்:​​கணிகை காண் கைகேசி
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
ஆவுமழுதவ கன்றழுதவன் றலர்ந்த ​​பூவுமழுத புனற்புள்ளழுத கள்ளொழுகுங் ​​காவுமழுத களிறழுத கால்வயப்போர் ​​மாவுமழுதன வம்மன்னவனை மானவே'' ​​என்றும் பாடியிருக்கிறேன்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
தொண்டையைக் கனைத்துக் கொண்டு) ​கேளும் கம்பரே! துரோணாச்சாரியாரே! நீரும் கேளும் லோகமாதாவாம் அன்னை ஜானகியை இலங்கேஸ்வரனாகிய இராவணன் அவளின் கூந்தலைப் பிடித்து, இழுத்து அவளைத் தன் மார்போடு அணைத்துத் துடையில் கை கொடுத்துத் தூக்கிக் கொண்டு சென்றான் என்று நான் எழுதினேன்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
கம்: விந்தையல்ல முனிபுங்கவரே! விளக்க உரை தந்தேன். சீதையின் சிறப்பியல்புகளைத் தமிழ்ப் பண்போடு இணைந்துரைத்தேன். இராமனின் பராக்கிரமத்தைப் பாரெல்லாம் புகழ, பண் அமைத்துப் பாடினேன். இராவணனின் வீரம், வலிமை, தவம் அனைத்தும் அகிலமெல்லாம் அறியச் செய்தேன்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
வால்: வினாசகாலே விபரீதபுத்தி கம்பருக்கு ஏன் இந்த வம்பு. மூலத்தைத் திருத்திக் கூறிப் புகார் மனு கொடுத்தால், விசாரணையின்போது இராவணன் அழிந்து படுவான் என்று எண்ணினார் போலும்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
சாய்ந்த தராசு! தேய்ந்த படிக்கற்கள்! முதன்முறையாக இம்மன்றத்தின் முன் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
அதற்கு அஞ்சி, காலச் சுமை வீழ்ந்து, வீழ்ந்து சாய்ந்து போன துலாக்கோலில், தேய்ந்துபோன படிக்கற்களைப் போட்டு, நிறை பார்ப்பது நீதியாகுமா
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
அவர் தம்மிடம் தரப்பட்டுள்ள துலாக்கோலையும் படிக்கற்களையும் தூக்கி எறிந்துவிட்டு வழக்கின் சகல அம்சங்களையும் தாமாகச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இதற்கு நீதி தேவனுக்கு நல்லெண்ணம் இருந்தால் மட்டும் போதாது- உள்ளத்தில் உரம் வேண்டும்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
நீதிதேவனும் ஏற்கெனவே தயாரிக்கப் பட்ட ஏதோ ஓர் கட்டுத் திட்டத்துக்கு உட்பட்டே, வேலை செய்பவர். அவரிடம் உள்ள துலாக்கோல் அவர் செய்தது அல்ல! படிக்கற்கள் அவருக்குத் தரப்பட்டவை! இவைகளின் துணை கொண்ட நீதிதேவன், நிறை பார்க்கிறார். நான், அவருடைய நிறை பார்க்கும் குணத்தைச் சந்தேகிக்க வில்லை. அந்தத் துலாக்கோலையே சந்தேகிக்கிறேன். படிக்கற்களையே சந்தேகிக்கிறேன்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இரா:​ இரக்கம் என்ற ஒரு பொருள்
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'