Quotes from விஷ்ணுபுரம்
கண்மணிகள் மனமெனும் பட்டத்திலகட்டப்பட்ட நூல்கள். கண்மணிகள் அசையாத நிலையே மனம் அமைதியடையும் நிலை.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
வீட்டுப் பசுக்களுக்கு மரணமில்லை. குட்டிகளை அவை தங்களிடத்தில் நிறுத்திவிடுகின்றன. தொழுவில் மாறாத இளமையுடன், ஒரே பசு தலைமுறைகள்தோறும் நின்றபடி இருக்கிறது.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
புலி பற்றிய ஞானமே புலியைப் பற்றிய அச்சத்தைப் போக்கும் வழி.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
தியானம் என்பது இருபது விதமான சத்காய திருஷ்டிகளை நீக்கி மனம் முழுமையடைவது.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
காமத்தில் அதிருப்தி கொள்ள ஆரம்பித்த பிறகுதான் மனிதன் கலைகளையும் இலக்கியத்தையும் படைத்தான் என்று. கவிஞனுக்கு பூமிமீது பெண்ணே இல்லை என்பார். பெண் அறிமுகமாவதற்கு முன்பே ஆயிரம் வருடங்களாக மனம் பெண் பற்றி உருவாக்கிய கனவுகள் அறிமுகமாகி விடுகின்றன.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
காளிதாச காவியத்திலே சர்க்கத்துக்கு ஒரு தேவதை கட்டுண்டு இருப்பதாகக் கூறுவார்கள். முதல் வாசிப்புக்கு நமக்கு அதன் பொருள் மட்டுமே தெரியும். மீண்டும் வாசித்தால் லயம் கூடிவிடும். தேவதை சன்னதமாகும். பித்துப் பிடித்தது போல அந்த சர்க்கத்தையே படிப்போம்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
சங்கீதம் எப்போதும் பூரணத்திற்கு ஒரு மாத்திரை குறைவாகத்தான் இருக்க வேண்டும். நாதம் முழுமை பெற்றால் அதற்குரிய யட்சி கண்விழித்து விடும்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'