Quotes from விஷ்ணுபுரம்
புழுதியே அனைத்தையும் உண்ணும் பெரும்பசி கொண்ட மகாபிருத்வியின் சிறகு என்பார் தாத்தா.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
மத்யமத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆயிரம் வைகரியின் எடை, ஆயிரம் மடங்கு அழுத்தம். பஸ்யந்தியோ ஆயிரம் மத்யமத்திற்குச் சமம். அங்கே கீழே...
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
பேச்சு நான்கு வகை என்று சாஸ்திரம். பிரம்ம வடிவமான ‘பரா‘வை ரிஷிகள் நாதப்பிரம்மம் என்கிறார்கள். பின்பு தொடக்கம், நடு, முடிவு இல்லாத பிரவாகமான ‘பஸ்யந்தி’. அதிலிருந்து எண்ணங்களாக மனதில் ஓடும் ‘மத்யமம்’. அந்த நதியிலிருந்து நாவும் தொண்டையும் மொண்டு எடுக்கும் ‘வைகரி’.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
ஏனெனில், நீ உன் மனதைக் கூர்ந்து பார்க்கும்போது மனம் மனதைப் பார்க்கிறது. மனம் இரண்டாகப் பிளந்துவிடுகிறது. பரஸ்பரம் விழுங்கும் பாம்புகள் போல. ஒன்றின் நோக்கங்களுக்கு ஏற்ப பிறிது காட்சிதரும். யோகம் மனதை நோக்கங்களிலிருந்து விடுவிக்கிறது.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
நமது ஞானம் எங்கோ முளைத்து மரங்களாகிய காடாகிறது. நாம் விதைக்கும் விஷயங்கள் மட்கிவிடுகின்றன. தவறுதலாக உதிர்ந்தவை பிற்பாடு பெரும் விருட்சமாகக் காட்சிதருகின்றன.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
யோகம் மனதை அஞ்சுவதை நிறுத்து என்கிறது. செயல்களிலிருந்து துண்டித்துக்கொள் என்கிறது. நீ ஓடுவது நின்ற உடனே மனமும் நின்று விடும். அதன் பிறகு அது எண்ண அலைகளாக இருக்காது.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
யானையின் உடலில் மனிதர்கள் உருவாக்கிய வீட்டுமிருகம். மணியோசையின் தருக்கத்தால் அழுத்தப்பட்ட அசைவுகள் அதனுடையவை. அதில் தெரிந்த அழகுகள் யானையின் அழகுகளல்ல, மனித அழகுகள் அவை.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
காண்பதும், நூல்களிலிருந்து புரிந்துகொள்ளப்படுவதும் ஆன விஷயங்களில் விருப்பமற்றுப்போகும் வசீகரம் என்ற மேன்மையான போதமே வைராக்யம் என்பது’ பதஞ்சலி யோகசூத்திரம்
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
எண்ணங்களினாலானது மனம் என்றால் எண்ணங்களை எப்படிப் பார்க்க முடிகிறது?
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
ஆனால் அடியில் சொற்களற்ற ஒரு மவுனம் அவற்றை உற்றுக் கவனிக்கிறதே, அது என்ன?
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'