Quotes from மோகமுள்

நீர் பரம பாக்கியசாலி அய்யா. மந்த்ர ஷட்ஜமத்திலே போய் இப்படி மதயானை மாதிரி எவ்வளவு தீர்மானமாக நிற்க முடிகிறது! எப்பேர்ப்பட்ட சாரீரம்! எவ்வளவு சாதகம் வேண்டும் இதற்கு!
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
தன்னைப் பற்றிய நினைவே ஒழிந்தது போன்ற ஒரு தூய்மையின் பிரகாசம் அந்த சாய்விலும் கம்பீர வடிவத்திலும் ஒளிர்வது போலிருந்தது.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
ஆண்களோடு சேர்ந்து சேர்ந்து, போட்டிப் போட்டுப் போட்டு இவர்களுக்கும் ஆண்தன்மை வந்துவிட்டதோ என்னவோ? அரும்பு மீசையும் வீச்சு நடையுமாகப் போகிற பெண்களைப் பார்க்கும்போது . . . இது என்ன இழவு? . . . பெண்மைக்கும் சுருதிக்கும் எவ்வளவு நகச் சதை உறவு! அதனால்தான் பெண்மையோடு அதுவும் போய்க்கொண்டிருக்கிறேதோ என்னவோ?
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
ஆமாம்! நல்லதா ஒண்ணை அனுபவிச்சதுக்கப்பறம் உசிரோட இருக்கலாமா? மறுபடியும் மண்ணிலேதானே வந்து புரள வேண்டியிருக்கு.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'