Quotes from மோகமுள்
அவர் சாமான்யமான ஆசாமி இல்லை, பெரிய வித்வானென்று சொல்லிக்கொள்ளவும் இல்லை. மற்றவர்களுக்கு அளித்த ஸ்தானம் தனக்குக் கொடுக்கப்படவில்லையே என்று அழவும் இல்லை. எதையும் எதிர்பார்க்காமல் பாடிக்கொண்டிருந்தார். அந்த மனிதனின் முகத்திலும் நெஞ்சுரப்பும் அழுத்தமும் உறுதியும் அசைக்க முடியாதபடி வேரூன்றிக் கிடந்தன. அதனால் அவருக்குக் கோபமே வரவில்லை போலிருக்கிறது. நிதானம் இழக்காமல் எதற்கும் புன்சிரிப்புப் பூக்க முடிகிறது அவரால்.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
ஓரிரண்டு இடத்தில் நாலைந்து மத்தாப்புக்கள் பிசுபிசுவென்று எரிந்துகொண்டிருந்தன. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஊர் இப்படி இராது. காது செவிடுபடும். இப்போது தெருக்களை அதிரவைக்கும் இடிகள் யுத்தகளத்துக்குப் போய்விட்டன. இங்கிலாந்தின் குழந்தைகள்மீதும் கட்டிடங்கள்மீதும் மனிதர்கள்மீதும் விழுந்துகொண்டிருந்தன.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
ஊரெங்கிலும் இருட்டு. மின்சார விளக்குகளைச் சுற்றிக் கறுப்பு போட்டிருந்தது. யுத்த காலத்து இருள். எங்கு பார்த்தாலும் போர்வை போர்த்திக் கழுத்தை நெறிப்பது போல விளக்குகளைக் கறுப்பு அமுக்கிக்கொண்டிருந்தது.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
அவரோடு பழகியதிலிருந்து இந்தக் குணம் பாபுவையும் பற்றிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். சின்ன சின்ன பொருட்கள், நிகழ்ச்சிகள் எதைப் பார்த்தாலும் அவருக்கு வியப்பாகத்தானிருக்கும். மழைக் காலத்தில் கொல்லை வாழைகள் மீது டப்டப்பென்று மழை சொட்டும் ஒலியை மெய்மறந்து கேட்டுக்கொண்டு நிற்பார். இலை நுனியிலிருந்து நின்று நின்று நழுவி விழும் பளிங்கு போன்ற தீர்த்துளியை. இலையிலிருந்து தரை வரை பார்த்துக்கொண்டே நிற்பார். வாழை மரத்தின் அடியில் ஊரத் தொடங்கிவிட்ட மரவட்டைகளைப் பார்த்துக்கொண்டே நிற்பார்.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
பாபு, இதைப் பார்த்தியாடா? . . . இதைப் பாரேன். என்னமோ தம்புரா, வீணைங்கிறானேடா இந்தச் சோற்றிலே இருக்கிற துவாரத்தைப் பாரு. லக்ஷக்கணக்கிலே இருக்கும் போலிருக்கு, எங்கேயாவது ஒரு கோணல் மாணல் இருக்கா பாத்தியா? பத்து வாத்தியத்தைச் சுருதி சேர்த்துண்டு, ஒருத்தனே ஏகக்காலத்திலே வாசிக்கிறப்பல இருக்கு . . . இத்தனை அழகாக ஒரு பாட்டுப் பாட முடிஞ்சாப் போரும். இல்லாட்டா இந்த மாதிரி ஒரு வாத்யம் எங்கேயாவது தேவலோகத்திலே இருக்குமோன்னு தோண்றது.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
பாபுவுக்கு இந்த அடைசல் வேண்டியிருந்தது, பயமில்லாத பத்திரமான காப்பில் இருப்பது போலிருந்தது. இங்கு இந்த வீட்டுக்கு வந்தது முதலே அந்த விடுதலையை உணரமுடிந்தது
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
காலேஜிலே பிள்ளைகளைப் படிக்கவைக்கிறவர்கள், உயர்ந்த மனுஷனாக ஆக்கணும்கறத்துக்காக வைக்கலெ. நாலு காசு கூடச் சம்பாதிக்கிறதுக்கு அஸ்திவாரமாயிருக்கும்னு செய்யறா, அவ்வளவுதான்
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
வேறு சிந்தனையின்றி நாதத்தையே பரம் பொருளாக எண்ணி, அதன் அருவியின் கீழ் ஓயாமல் நனைந்து கொண்டிருப்பவரின் உணர்வும் அறிவும் குளிர்ந்திடாமல் எப்படியிருக்கும்?
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
ரங்கண்ணா மனதையே, உடலையே சங்கீத மயமாக ஆக்கிக் கொண்டிருந்தார். தம்புராவை மீட்டிக்கொண்டே இருக்கும்போது, கிழவி உள்ளே அண்டாவில் நீர் எடுக்கச் செம்பால் மொள்ளும்போது ஞண் என்று ஒலித்தால், "என்னடா ஸ்வரம் அது!
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
உள்ளே எப்போதும் நிலவிக்கொண்டிருக்கும் ஆதார சுருதிக்கு உலகத்து ஒலியெல்லாம் ஸ்தாயிகளாகவும் ஸ்வரங்களாகவும் கேட்கின்றன
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'