Quotes from மோகமுள்

ஆற்று வெள்ளத்தின் பச்சை கலந்த காவி, மாலை வெயில், ஒரு சொட்டு மேகம் இன்றி ஒரே நீலமாகக் கவிந்திருந்த வானம், அதில் அங்குமிங்கும் உயரத் திரிந்த கழுகுப் புள்ளிகள், ஆற்றோரத்து அடர்ந்த பச்சை - எல்லாம் இருவரையும் சிறிது நேரம் பேச்சோயச் செய்தன.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
நீ கெட்டிக்கார ராஸ்கல்டா, பி.ஏ. பெயில் ஆனதும் சட்டசபையைப் பார்க்கத் தொலை
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
சுந்தரபெருமாள்கோயில் போவற்குள்ளேயே தலைவலி வந்துவிட்டது. உத்தானி ரயில்வே லெவல் கிராஸ்ஸிங் சாத்தியிருந்தது
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
போயிட்டு வரேம்பா." "வா. மங்களானி பவந்து
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
ஆகாரம்தான் மனதை உருவாக்குறது. ஆகாரத்திற்குத் தகுந்தாற்போல் மனதும் மாறும்.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
நமக்கும் ஹிருதயத்திலே எப்பொழுதும் ஒரு தீபம் வேணும். சமயத்துக்கு அது அந்தகாரத்தை நீக்கி வழிகாட்டும். அருள் கிடைக்கிற பாதையைக் காட்டும். தைரியம் கொடுக்கும். தெம்பு கொடுக்கும். ஒவ்வொரு க்ஷணமும் அந்தச் சக்தி நம்மை ஆதாரமாகத் தாங்கிக்கொண்டிருக்கும்
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
ரவிவர்மாவின் லக்ஷ்மி சரஸ்வதிகூட மனித அழகுதான்! அவற்றையெல்லாம்விட ஒரு தனித்தன்மை ஒரு தெய்வத்தின் முகத்திற்கு இருக்கத்தான் வேண்டும்.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
குருகுல வாசம் செய்கிற வித்தை, காலம் மாறிவிட்டது. பள்ளிக்கூடம் வைத்துவிட்டார்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் மற்ற பள்ளிக்கூடம் மாதிரியே இதையும் பண்ணிவிட்டான்களே.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
சாமி கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் குரு கவனிக்க வேண்டும், பரம நாஸ்திகனும்கூட குருவை விடமாட்டான்
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
இந்த மந்த்ர ஷட்ஜமத்தைப் பிடித்து உலுக்குவதானால் சரீரத்தை, சூட்சும பலத்தைக் காப்பாற்றினால்தான் முடியும். அதுவும் உமக்குக் கிடைத்திருக்கிறது. பிரம்மசாரியாக இருக்கிறது பெரிய அதிர்ஷ்டம் ஐயா.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'