Quotes from மோகமுள்
செத்துப் போனதைத் தின்னு தின்னு வாழ்கிறவர்கள் எப்படி அமைதி அடைவார்கள்? மாடுகூட காலையில் தின்னதைத்தான் அசைபோடும். முந்தாநாள் தின்றதைப் போடாது.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
அபிப்ராயம் சொல்ல யாருக்கும் உரிமை உண்டு என்று ஆகிவிட்ட காலம் இது. சொல்லுகிற மண்டை சூன்யமா, கனமா, சரக்கு உள்ளதா என்று நாம் தெரிந்துகொண்டு, வாங்குகிறதையோ தள்ளுகிறதையோ செய்யணும், இவன் கிடக்கான்
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
அலட்சிய புத்தி, அகம்பாவம், இடை வெட்டுப் பேச்சு இதுதான் ஜாஸ்தியாகப் படிகிறது. படிப்பும் புத்தியும் வரதோ என்னமோ, அதுக்கு இருக்கற அகம்பாவம் வந்துடறது.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
சாலியமங்கலம் ரஸ்தாவின் இரு மருங்கிலும், நரைக்கப்போகும் கூந்தலைப்போல நெற்கதிர்கள் கண்ணுக்கெட்டியவரை முதிர்ந்து பழுத்துச் சாய்ந்துக் கிடந்தன.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
வெறும் இன்பத்தை விட, துன்பத்திலிருந்து விடுதலையை உடலும் மனமும் அனுபவிப்பது அதிகம்தான்.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
ஒவ்வொரு மனிதனுக்கும் தான்தான் ராஜா. அவனேதான் அவனை அடக்கி ஆள வேண்டும்.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
ஒரு நல்ல காரியத்திலே ஈடுபட்டோமானால், மோகினி மயக்குமாதிரி நம்ம கவனத்தை அந்தண்டை இழுத்துண்டு போறதுக்கு எவ்வளவோ வந்து சேரும். ஸ்நேகிதம், காதல், பணம் சம்பாதிக்கிற ஆசை -இப்படி ஏதாவது ஒரு பேர் வச்சுண்டு வரும் அதெல்லாம். அதுக்கெல்லாம் இடம் கொடுத்தா காரியம் கெட்டுப் போயிடும். பின்னால் வருத்தமாயிருக்கும்.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
துக்கம் வரும்போது சகித்துக்கொள்ள சக்தி கொடுக்கும். ஆனந்தம் வரும்போது நிதானமாக அனுபவிக்கச் சொல்லும். சுயநலத்தை அறுத்தெறியும். ஐச்வர்யம் கிடைக்கும்போது, அதைப் பொதுசொத்தாகக் கருதி பிறரோடு பகிர்ந்துகொள்ளும் மனுஷத் தன்மையைக் கொடுக்கும். நாட்டில் பார்க்கும் பெண்களை எல்லாம் நடமாடும் தெய்வங்களாகப் பார்க்கச் செய்யும். அகந்தையை அறுக்கும். மனதைச் சுத்தம் செய்யும்.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
சாமி கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் குரு கவனிக்க வேண்டும், பரம நாஸ்திகனும்கூட குருவை விடமாட்டான்
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'
குருகுல வாசம் செய்கிற வித்தை, காலம் மாறிவிட்டது. பள்ளிக்கூடம் வைத்துவிட்டார்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் மற்ற பள்ளிக்கூடம் மாதிரியே இதையும் பண்ணிவிட்டான்களே.
தி. ஜானகிராமன் (T. Janakiraman) — 'மோகமுள்'