Quotes from வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

வாழ்வு எந்தக் கணத்திலும் முடிந்துவிடும். ஆனால், அறத்தின் அழிவுக்கான காரணம் நமது வாழ்வின் மீது படியுமேயானால் அதைவிட இழிவு வேறில்லை.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
மனிதனுக்குள் அவமானத்தைத் துளையிட்டு உள்நுழைக்கிற கருவி, சொற்களின்றி வேறில்லை.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
பகைமை கொண்டு இயங்குபவன் விரைவில் வலிமை இழப்பான். பகை, சினத்தை மட்டுமே வளர்த்தெடுக்கும். போருக்கு தேவை சினமன்று. ஆனால், இதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பகை பின்னுக்குத் தள்ளிவிடும்.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
கடல் பயணத்தில் வலிமையை ஒப்பிட வேண்டியது பிற கடலோடிகளோடு அல்ல, எழும் அலைகளுடனும் வீசும் காற்றுடனும் இழுத்துச் செல்லும் நீரோட்டங்களுடனும்தான்.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
தீயவர்களின் வீழ்ச்சி மகிழ்வை கொடுக்கும்; பாதிப்பை ஏற்படுத்தாது. நல்லவர்களின் வீழ்ச்சி துயரத்தோடு நிற்காது; பெரும்பாதிப்பை உருவாக்கும்.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
மனிதன் கனவுகளுக்கு அடிமைப்பட்டவன். அவனை குறுக்குவழியில் வீழ்த்துவது எப்போதும் எளிது.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
வேந்தர்கள் எதைச் செய்தாலும் அது அவர்களின் அதிகார நலனுக்கானது; மனிதருக்கும் இயற்கைக்கும் எதிரானது.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
பகை, கணம்தோறும் ஊறிப்பெருகக்கூடியது. சூழலில் நிகழும் ஒவ்வொரு காரணத்தையும் பகை தன்னை பெறுக்கிக்கொள்ள இயல்பாக பயன்படுத்தும். வெறும் பொறாமையும் வெறுப்பும் எளிதில் அணைந்துவிடும். பகை மட்டுமே மூட்டியவனால்கூட அணைக்க முடியாத பெருநெருப்பு.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
ஒருநிலைக்குப்பின் வெற்றி ஏற்படுத்தும் சுவை பழக்கப்பட்டதாக மாறிவிடுகிறது. அது செய்தியாக தன்னைத்தானே கீழிறக்கிக்கொள்கிறது.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'