Quotes from வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

ஆண் ஆதியில் இருந்தே வெல்வதற்குத்தான் முயன்றிருக்கிறான். பெண் ஆதியில் இருந்தே நம்புவதற்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறாள்.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
கதைகள்தான் நல்லவர்களின் கடைசி நம்பிக்கை. பறவைகள், விலங்குகள், மரம், செடி, கொடியென இயற்கை எல்லாம் நமக்கு துணை நிற்க, அழித்தொழிப்பவர்கள் வீழ்வார்கள்; அழிக்கப்பட்டவர்கள் எழுவார்கள் என்ற நம்பிக்கையை கதையன்றி வேறு யார் கொடுப்பது?
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
பகை மட்டும்தான் அளவற்ற வெறிகொண்டு மனதை இயக்கும் ஆற்றல் கொண்டது.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
மனித மனத்தை இயக்கும் விசையை அறிதலே கலையின் உச்சம்.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
ஆசையின் வழியே பயணப்படக் கூடாது. அறிதலின் வழிதான் பயணப்பட வேண்டும். இயற்கை ஆசைக்கான பொருளன்று.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
ஏமாற்றம் எதில் நடக்கிறது என்பதை பொருத்துதான் மனிதமனம் எப்படி அதை எடுத்துக் கொள்கிறது என்பது தெரியவருகிறது.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
காமத்துக்கு மிக அருகில் பயணிப்பது நீர். நீரின் குளிரும் உடலின் சூடும் ஒன்றினையொன்றி உள்வாங்கும். உடலின் வாசனையை மனதுக்குள் பாயவிடும் மாயசக்தி நீருக்கு மட்டுமே உண்டு.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
மனதின் ஓரத்தில் இருக்கும் அழுக்குக்கூட நம்மை வெட்கித்து தலைகுனிய செய்யும் அளவுக்கு உக்கிரம் ஏறிய பேரன்பு.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
உறக்கம், விழிப்பு, ஆயுதமேந்தல், போரிடுதல் எல்லாமே போர்க்களத்தில் மரணத்தின் மறுசெயல்பாடுகள்தான்.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
கண்களைத் திறப்பதைவிடக் கடினமானது மூடுவது. மனதுக்குள் விழுந்துகிடக்கும் கொடூரங்களை எதைக்கோண்டு அப்புறப்படுத்த முடியும்?
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'