Quotes from வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

அவர்கள் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள். எனவே, அனுபவத்தின் கண் கொண்டு பார்க்கின்றனர். அனுபவம், அடைவதிலிருந்து மட்டும் ஏற்படுவதில்லை; அடையாததிலிருந்தும் ஏற்படுகிறது. நான் அடைந்திராத அனுபவத்தின் கண் கொண்டு பார்த்தேன்.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
கதை, சொல்லும்போது பெருகக் கூடியது; நினைக்கும்போது திரளக் கூடியது; மறக்க எண்ணும்போது நம்மைக் கண்டு சிரிக்கக் கூடியது. வடிவமற்ற ஒன்றின் பேராற்றலைக் கதைகளிடம்தான் மனிதன் உணர்கிறான்.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
போர் என்பது, ஆயுதங்களின் வழியே இறுதியாகத்தான் நடக்கிறது. அதற்கு முன் மனதின் பல தளங்களில் அது நிகழ்த்திப் பார்க்கப்படுகிறது.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
ஒருவனின் செல்வத்தைக் கவர்ந்திட போரிட்டால் அந்தப் போரில் வெற்றி தோல்வி உண்டு. ஆனால், ஒருவனின் புகழை எதிர்த்து இன்னொருவனால் போரிடவே முடியாது. நீரைப் பாறைகொண்டு நசுக்க முடியாது.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
சொல்லின் வலி, உள்ளத்தின் உறுதியை தளர்த்தவல்லது.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
இயல்பாய் அமைவதைக்கூட இயல்பானதென ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தோடு இயங்கும் ஆற்றல் காலத்திற்கு உண்டு.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
எழுதக் கற்கும் வரை சொற்களின் வழியாக உலகைப் பார்த்துப் பழகியவர்கள், எழுதக் கற்ற பின்தான் உலகை விழுங்கி நகரும் ஆற்றல் சொற்களுக்கு உண்டு என்பதை உணர்வார்கள்.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
பெரும் உண்மைகள், எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்துதான் வெளிவருகின்றன.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
வலியையும் வேதனையையும் வெளிக்காட்டாமல் வாழ்வது கூட ஒருவிதமான கலைதான்.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
காட்டுக்குள் பிறவற்றிலிருந்து தப்பித்தலைப்போல, பிறருக்குத் தன்னை காட்டிக்கொள்வதும் சம முக்கியத்தும் உள்ள கலைதான். ஒவ்வொரு உயிரினமும் இந்த இரண்டு வித்தைகளையும் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'