Quotes from சிலுவைராஜ் சரித்திரம்

தப்புச் செய்தால் அதற்குரிய தண்டனையை ஒருவன் அடைந்தே ஆகணும் என்பது தகப்பனின் பிடிவாதமான கொள்கை. அந்த ஒருவன் என்பது பெரும்பாலும் சிலுவைதான். அவர் ஒருநாளும் அந்த ஒருவனுக்குள் வரமாட்டார்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
ஒருதடவை கிறிஸ்மஸ் சீசனில் செயற்கையாய் அலங்கரிக்கப்பட்ட மாட்டுத் தொழுவில் வைக்கப்பட்டிருக்கும் குழந்தை ஏசுவை ஆராதித்துப் பாடும்போது ஸ்டீபன் செய்த கூத்து கோவிலையே ஒரு கணம் அதிரவைத்துவிட்டது. சோலோ-கோரஸ் என்று தொடர்ந்து போகும் அந்த ஆராதனையில் ஸ்டீபன் சோலோ பாட மற்றவர்கள் 'வந்தாராதியுங்கள்' என்று கூட்டாகப் பாடிக்கொண்டிருந்தார்கள். 'ஏவை மரி கனியை' 'வந்தாராதியுங்கள்' 'மாட்டுக் கொட்டில் பாலனை' 'வந்தாராதியுங்கள்' 'வானோ போற்றும் பாலனை' 'வந்தாராதியுங்கள்' 'வயித்தால போன பாலனை' 'வந்...' ஒரே சிரிப்பு. கோயில் அதிர்ந்தது. குழந்தை ஏசு மட்டும் சிரிக்காமல் படுத்துக்கிடந்தார். வெளியே வந்த பிறகு 'ஏண்டா இப்பிடிப் பாடுன' என்று அவங்கிட்ட சிரிப்பு தாங்காமல் கேட்டபோது, 'ஏன் அவருக்கு மட்டும் வயித்தால போயிருக்காதா? அவரும் மனுசந்தானே? மனித சுபாவத்தில் சிலுவையில் அறையப்பட்டுச் செத்துப் போனவர், வயித்தால போகாமலா இருந்திருப்பார்?
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
பெரிசா ஜெயகாந்தனப் பிடிக்கும், அவனப் பிடிக்கும் இவனப் பிடிக்கும்னு பேச்சுத்தான் கிழியிது. ஆனா உள்ள இருக்கிறது பூராவும் சாதி நஞ்சுதான்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
எல்லோருமே சாதிய உள்நாக்குல வச்சிக்கிட்டுத்தான் பேசுறாங்க.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
ஒரேயொரு சிகரெட்டை அணச்சு அணச்சு ரெண்டு மூணு தடவை பிடிப்பது வழக்கம்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
இப்ப அவனுக்குப் பேய் பத்திய பயமெல்லாம் இல்ல. ராத்திரி பஸ்ட் ஷோ பாத்திட்டு வர்றவங்களும் சரி, செகண்ட் ஷோ பாக்கப் போயிட்டு நடுச்சாமந்தாண்டி வர்றவங்களும் சரி, தனியா வரமாட்டாங்க. பேயி பயந்தான். ரெண்டு மூணு பேராச் சேந்துதாம் போவாங்க வருவாங்க. சிலுவைக்கு ஒண்ணு டெய்லர், இல்லாட்டா ஒத்தையில போறதுதான் பிடிக்கும். ராத்திரி ரொம்ப நேரமாகவும், பகல் கொஞ்ச நேரமாகவும் இருந்தா நல்லதுன்னு நெனப்பான். கம்மாக்கரை வரப்பு வழியா நட்சத்திரங்கள் சிந்திக்கிடந்த வானத்தின் கீழ் தனியாக நடந்துபோவது அவனுக்கு சுகமான அனுபவம். யாராச்சும் வாராங்களா அவங்ககூட பயமில்லாமப் போகலாம்னு காத்து நிற்கும் மனுசனப் பாத்தாலே சிலுவைக்கு ஆகாது. யாருக்கு யார் பாதுகாப்பு? அப்பத்தான் கொல்லைக்கு வந்தவம் மாதிரி சிலுவை கரையோரமாப் போயி குத்தவச்சுக்கிருவான். அந்த மனுசம் போற வரைக்கும் எந்திரிக்க மாட்டான். அவனும் பொறுத்துப் பொறுத்துப் பாத்திட்டு, 'அண்ணாச்சி வத்ராப்புக்குதான போறீக'ன்னு ரொம்பப் பழகுன ஆள் மாதிரி விசாரிப்பான். 'இல்ல'ங்கிறதுக்கு மேல ஒரு வார்த்த சிலுவை பேசமாட்டன். அந்த ஆளு நிண்ணு பாத்திட்டு வீட்டுக்குத் திரும்பிருவான். அவம் போனப் பெறகு சிலுவை வத்ராப்புப் பாக்கத் தனியா நடந்து போவான். மனுசங்கள நடுங்க வைக்கிற பேய்க வந்தாக்கூட அதுகளுக்கு கம்பெனி குடுக்க சிலுவை தயார். மனுசங்களுக்குக் குடுக்கத் தயாரில்லை. சிலுவை போறதப் பாத்திட்டுப் பேய்ககூட ஒரு வேள பயந்தாலும் பயப்படும்!
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
தூரத்தில் நாயுங் கையுமா ஜீவரத்தினத்தப் பாத்ததுமே, 'தி மேன் வித் எ டாக்'ன்னு குருசாமி டெய்லர் தமது எஸ்எஸ்எல்சி இங்கிலீஷ் ஞானத்தை எடுத்துவிடுவார். அந்த நாயைப் பாத்தா சிலுவைக்கி, ஆண்டன் செக்காவ் எழுதிய 'பச்சோந்தி' கதைதான் ஞாபகத்துக்கு வரும்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
அவர் குடிச்சுக் குடிச்சு அழிய அழிய, அந்த அழிவைக்கண்டு சிலருக்கு இனந்தெரியாத சந்தோசம் ஏற்பட்டதாம். நல்லாயிருந்தவன் நாசமாப் போவதை உலகம் எப்பவும் குரூரமாக ரசிக்கத்தான் செய்யும். சம்பந்தமில்லாதவன் கூட அதைப் பார்த்துச் சந்தோஷப்படுவான்!
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
தினசரி காலை பத்துமணிக்கு எரிக்கும் வெயிலில் வரப்பு வழியாகச் சிலுவை வத்ராப்புக்குப் போகிறபோது வத்ராப்ல டைப்ரைட்டிங் முடிச்சிட்டு எதிரே வரும் பொண்ணுக இவன பாத்ததும் வரப்பவிட்டு இறங்கி, விலகி, ஒரு அரை வட்டம் வளைஞ்சு நடந்து, கடந்து போயி, மீண்டும் வரப்பில் ஏறிச் செல்வதைத் தற்செயலாகச் சிலுவை பாத்திருக்கிறான். அவ்வளவு தூரம் அவனைக் கண்டு விலகிப் போற அளவுக்கு அவன் தப்பான பயல் இல்லை என்பது அதுகளுக்குத் தெரிய நியாயமில்லைதான். எஸ்எஸ்எல்சி படிச்சிட்டுப் படிப்பு வராம டைப் அடிக்கிற இந்தக் கூமுட்டைகள் எங்கே? அவன் எங்கே? இதப்பத்தியெல்லாம் மலைப் பிரசங்கமா பண்ண முடியும்?
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
ரவி தண்ணி போட்டாம்னா தாஸ்தாவ்ஸ்கி பற்றித்தான் பேசுவான்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'