Reviews for கங்கை கொண்ட சோழன் (பாகம் 2)

20 reviews total

user_12273

Feb 02, 2026

பாலகுமாரனின் உடையார் படித்திருக்கிறேன். எனவே அதன் தொடர்ச்சியான கங்கை கொண்ட சோழன் நூலையும் அந்தத் தொடர்ச்சியின் காரணமாகவே படித்தேன்.

உடையாரிலேயே பாலகுமாரனின் எழுத்து நடை எனக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் தமிழ் மன்னர்கள், சோழ வரலாறு பேசும் நூல் என்ற ஒரே காரணத்திற்காகவே படித்தேன். இந்நூலும் அதே எழுத்து நடைதான். இதை ஒரு நாவலாக ரசித்துப் படிக்க என்னால் முடியவில்லை. ஒரு பத்து வயது சிறுவன் எழுதிய வரலாற்றுப் புனைவு என்றே தோன்றுகிறது. மிகவும் ஆழமற்ற எழுத்தாட்சி.

சில பாத்திரங்கள் மிகவும் விரிவாக அறிமுகப்படுத்தப்படும், அதன்பிறகு அந்தப் பாத்திரம் என்ன ஆனது என்றே தெரியாது. எல்லா வர்ணணைகளும் உப்புச்சப்பில்லாமல் இருக்கின்றன.

மொத்தத்தில், வரலாற்று நிகழ்வை அறியும் ஒரே நோக்கில் படிப்பதானால் சரி. ஒரு நாவல் என்று ரசித்துப் படிப்பதானால் இது உங்களுக்கு உகந்ததல்ல.

user_12272

★ 5/5 Feb 02, 2026

மிகவும் அருமையான புத்தகம். படிக்க ஆரம்பித்தால் நிறுத்தவே முடியாது.

user_12271

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புதினத்திற்கான என் விமர்சனம் நான்காம் பாகத்தில் உள்ளது.

user_12270

★ 3/5 Feb 02, 2026

சற்று சலிப்பாக இருந்தது. முதல் பாகத்தின் வேகமும் சுவாரஸ்யமும் இங்கு குறைந்திருக்கிறது.

user_12269

★ 3/5 Feb 02, 2026

நல்ல நாவல் தான், ஆனால் முதல் பாகம் அளவுக்கு சுவாரஸ்யமாக இல்லை.

user_12268

★ 4/5 Feb 02, 2026

இரண்டாம் பாகம் ஏமாற்றவில்லை. கதையை விரிவுபடுத்தி பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக வந்திருப்பது மனதிற்கு மிகவும் திருப்தியளித்தது.

அடுத்த பாகத்தில் கதாபாத்திரங்களின் திட்டங்கள் என்ன என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். ராஜேந்திர சோழனின் கதாபாத்திர வடிவமைப்பு கதையின் அடிநாதமாக இருந்து சரியான பாதையில் நகர்த்துவது இதன் மிகப்பெரிய பலம். கங்கை கொண்ட சோழன் தமிழ் வரலாற்றுப் புதின இலக்கியத்தில் முக்கியமான இடம் பிடிப்பதற்கான காரணம் புரிகிறது.

user_12267

★ 5/5 Feb 02, 2026

போர் என்றால் என்ன, அதன் தேவைகள் என்ன, சோழர்களின் ஆட்சிமுறைகள் எவ்வாறு இருந்தன என்பதை முழுமையாக அறிய உதவும் நூல்.

user_12266

★ 5/5 Feb 02, 2026

சூப்பர் நாவல். படிக்கும்போது அக்காலத்துக்கே அழைத்துச் செல்லும் எழுத்து நடை.

user_12265

★ 5/5 Feb 02, 2026

நல்ல நாவல். சோழர் வரலாற்றை அறிய விரும்புவோருக்கு ஏற்ற படைப்பு.

user_12264

★ 5/5 Feb 02, 2026

அற்புதமான புத்தகம். தென்னிந்திய மன்னர்களின் தரமான ஆட்சியை தெளிவாகச் சொல்கிறது. அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் தமிழ் பண்பாடும் அறிவுத்திறனும் நன்கு வெளிப்படுகிறது.