இரண்டாம் உலகப் போர் [Irandaam Ulaga Por]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இரண்டாம் உலகப் போர் [Irandaam Ulaga Por]

None

Author: Marudhan
4.11/5 · 100+ ratings

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ஹிட்லர் என்கிற ஒரு மனிதன் உலகத்தில் தோன்றாமல் இருந்திருந்தால் இரண்டாவது உலக யுத்தம் ஏற்பட்டிருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான்.

அவரது நாடு பிடிக்கும் ஆசை. ஜரோப்பிய தேசங்களுக்கு இடையே இருந்த உட்பகை. நீயா நானா போட்டி. நிச்சயமற்ற பொருளாதார நிறைமை. ஆயுதப்பெருக்கம். பிறகு, நிறையவே மிருகத்தனம். எல்லாம் சேர்ந்து கலந்தபோது, இரண்டம் உலகப் போர் வெ…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_12130

★ 3/5
இரண்டாம் உலக போரின் வரலாற்றை எளிமையாக அறிந்துகொள்ள மிகவும் பயனுள்ள புத்தகம். இரண்டாம் உலக போரின் காரணம், அதன் பிண்ணனி மற்றும் ஈடுபட்ட நாடுகளின் நிலைபாடு பற்றி மிக அருமையான நடையில் எழுத்த பட்டுள்ளது.

user_12129

★ 4/5
Like First world war, it is a resemblance of Second world war II.

user_12128

good but small book

user_12127

★ 5/5
This was a very exciting book. I would recommend it to my class

user_12126

★ 4/5
இரண்டாம் உலகப் போர் பற்றிய தகவல்கள் அடங்கிய நல்ல புத்தகம்.

user_12125

Irandam ulagapor

user_12124

★ 4/5
great book ..............................

user_12123

★ 4/5
Hitler the Pioneer, The Leader....⚡

user_12122

★ 4/5
A worthy read , people who want to know about the world war 2 should definitely get hands on this book. It was very well explained and everything was clear fr the start go...

user_12121

★ 4/5
It was informative and I liked the way author narrates the incidents. But I stopped reading the last few chapters which were dedicated to Hitler's cruelty towards jews. I felt it was horrible.

user_12120

★ 3/5
சோவித் பக்க சார்புடன் எழுதப்பட்டுள்ளது. எனினும் ஒட்டு மொத்தமாக இரண்டாம் உலகப்போர் பற்றி முழுப்பரிணாமத்தையும் அரசியல் நிகழ்வுகளாக அன்றி சமூக பொருளாதர அடிப்படையில் விளக்குகின்றமை சிறப்பு.

user_12119

★ 5/5
முதல் உலகப் போரில் ஒரு ராணுவ வீராக பங்கு பெற்ற ஹிட்லர் ஜெர்மனிக்கு நிகழ்ந்த அவமானத்தை வன்மத்தோடு மனதில் குறித்துக் கொண்டார். அத்தோடு போரின் போது அரசாங்கத்திற்கு எதிரான மனநிலையில் இருந்த கம்யூனிஸ்ட்களையும், ஜெர்மனிக்கு விஸ்வாசமாக இல்லாத (ஹிட்லரின் பார்வைக்கு) யூதர்களையும் இந்த நாட்டிலிருந்து அழிப்பது எனவும் சேர்த்தே குறித்துக் கொண்டார். யூதர்கள் மீதான ஹிட்லரின் இனவொழிப்பு தாக்குதல் இப்போது பிரதானமாக பேசப்படும் அளவிற்கு அதனை அவர் தொடங்கியிருந்த காலத்தில் ஐரோப்பிய நாடுகள் அவற்றைப் பெரிதாக பேசவில்லை. உள்நாட்டு விவகாரம் என்பதாகவே அதனை பேசாமல் தவிர்த்திருக்கிறார்கள். 1919 வெர்சைல்ஸ் ஒப்பந்தம் மூலம் அடைந்த அவமானத்தை போக்கி ஜெர்மனியை ஐரோப்பிய நாடுகளில் வலிமைமிக்கதாகவும் வல்லரசாகவும் மாற்றிட நினைத்த ஹிட்லர் என்ற ஒற்றை மனிதரே இரண்டாம் உலகப் போரின் காரணகர்த்தா. கம்யூனிஸம் இருந்த வெறுப்பின் காரணமாக ஸ்டாலினையும் சோவியத் ரஷ்யாவையுமே ஐரோப்பிய நாடுகள் எதிரியாய் பார்த்தன. ஆனால் போலந்து, பெல்ஜியம், பாரிஸ் என்று ஹிட்லர் ஆடத் தொடங்கிய பின்பே அவை சுதாரித்துக் கொண்டன. இரண்டாம் உலகப் போரின் மூலம் உலகின் வல்லரசு நாடாக அமெரிக்கா தன்னை நிறுவிக் கொண்டது. இரண்டு போர்களும் ஏராளமான உயிர் சேதத்தையும் பொருள் சேத்தையுமே ஏற்படுத்தின. ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்பு ஆசையும் பொருளாதார விஸ்தரிப்பும் லட்சக்கணக்கானவர்களுக்கு கண்ணீரையே பரிசளித்திருக்கிறது. போருக்கு எந்த சம்மந்தமும் இல்லாத அப்பாவிகள் வீடிலந்து, சொந்த பந்தங்களை இழந்து சொல்லமாளாத துயரங்களை நெஞ்சில் சுமந்து திரிந்திருக்கிறார்கள். எங்கோ தொடங்கிய எத்தனை பகுதிகளில் எத்தனை மக்களை வதைத்திருக்கிறது. ஜெர்மனியோடு கூட்டு சேர்ந்து கொண்டு பிரிட்டனின் காலனியை பிடிக்க நினைத்த ஜப்பான், மலேயா சிங்கப்பூர் என்று ஆக்கிரமிப்பு செய்தது. அங்கு தேயிலை தோட்டங்களில் வேலை செய்த நூற்றுக்கணக்கான தமிழர்களை சிறைப்பிடித்து சயாம்-பர்மா ரயில் பாதை அமைக்கத் தொடங்கியது. காடுகளையும், மலைகளையும் கொண்ட அந்த பிரதேசத்தில் ரயில் பாதை அமைத்திட சொல்லில் அடக்கிட முடியாத துன்பங்களையும் சித்ரவதைகளையும் அனுபவித்து இறந்து போனவர்கள் ஏராளம். ஜப்பானிய ராணுவம் இப்படி மற்ற நாட்டின் மக்களை துன்புறுத்திக் கொண்டிருந்த போது, அமெரிக்கா சக்தி வாய்ந்த அணு குண்டுகளை நாகசாக்கி, ஹிரோஷிமா மீது போட்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஜப்பானிய மக்களை கூண்டோடு அழித்தது. இரண்டு போர்களும் கிட்டத்தட்ட இரு தலைமுறையையே அழித்திருக்கிறது என்று சொல்லலாம். அழிவைத் தவிர எதையும் போர்கள் தருவதில்லை.

user_12118

★ 4/5
Though i have already read a lot about world war from lot of sources, they were mostly biased and from perspective of winners. This book avoids that mistake to great extent and gives comprehensive view on the subject.

user_12117

★ 4/5
உலகத்தையே அழித்துவிட எண்ணம் கொண்டு இருஅணிகளாக உலகம் பிரிந்து போரிட்டுக் கதையை அணு அளவும் நகரவிடாமல் படிக்க வைக்க இப்புத்தகத்தால் முடியும். அழிவு.. அழிவு.. எங்கு திரும்பினாலும் அழிவு. இப்போது இருக்கும் உலகம் அதன்பிறகே உயிர் பெற்று வந்திருக்கிறது. உலக மக்களை பட்டினியில் சாக வைக்க, அனைத்துவிதமான தொழில்களும் ஆயுத உற்பத்திக்கே திருப்பபட்டது. மக்களை வாழ்விக்கும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாது அல்ல காணாமலேப் போயிருந்ததது.

user_12116

★ 5/5
1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை நடந்த முதல் உலகப் போருக்கு என்ன காரணம் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போருக்கு முக்கியமான ஒரு காரணமாக கருதப்படுபவர் ஹிட்லர். முதலாம் உலகப்போரில் ஜெர்மனி பலத்த தோல்வியை சந்திக்கிறது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான போர்ல் ஜெர்மனி மிகப்பெரிய தோல்வியை இறுதியில் சந்தித்ததால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிறது. அகண்ட ஜெர்மனியை தனது கனவாகவும், இலட்சியமாகவும் கொண்ட ஹிட்லர் அடிப்படையில் ஆஸ்திரியாவில் பிறந்தவர். முதலாம் உலகப்போரில் ஜெர்மனி சந்தித்த தோல்வியை ஹிட்லரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஜெர்மனியை ஐரோப்பியாவின் சர்வ வல்லமை பொருந்திய சக்தியாக மாற்ற வேண்டும் என்ற கனவை ஹிட்லர் தன்னுள் விதைத்துக் கொள்கிறார். ஜெர்மனியர்கள் உயர்ந்த இனமாகவும், யூதர்கள் தாழ்ந்த இடமாகவும் நினைக்கும் ஹிட்லர் யூதர்கள் தான் ஜெர்மனியின் வளர்ச்சியை தடுக்கிறார்கள் என்று வலுவாக நம்புகிறார். யூதரான தன் தந்தை இறந்த பின்பு ஜெர்மனியை நோக்கி வரும் ஹிட்லர் பல்வேறு வேலைகளில் இருந்து இறுதியாக ஜெர்மனி ராணுவத்தில் வந்து சேர்கிறார். கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஹிட்லர் தன்னை ஒரு கட்சியில் இணைத்துக் கொள்கிறார். அகண்ட ஜெர்மனியயே கனவாக கொண்ட ஹிட்லர் சில வருடங்களிலேயே தன்னை ஜெர்மனியின் சர்வ அதிகாரமும் பொருந்திய அதிபராக அறிவித்துக் கொள்கிறார். யூதர்களை இனப்படுகொலை செய்கிறார். ஹிட்லர் இரண்டை மிகவும் வெறுத்தார் ஒன்று யூதர்களை இரண்டு கம்யூனிசத்தை. இந்த இரண்டுமே அழிக்கப்பட வேண்டியது என்று உறுதியாக நம்புகிறார் ஹிட்லர். ஜெர்மனியை பலம் பொருந்திய ஒரு நாடாக மாற்ற ஹிட்லர் முதலில் அதனுடைய நிலப்பரப்பை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். அந்த சமயத்தில் பிரிட்டனும், பிரான்சும் ஹிட்லரை ஒரு அச்சுறுத்தலாக பார்க்காமல் ஒரு தலைவராகவே பார்க்கிறது. இதனால் ஹிட்லர் செய்யும் பலதையும் பிரிட்டனும், பிரான்சும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதே காலகட்டத்தில் ரஷ்யாவில் மன்னர் ஆட்சி ஒழிந்து சோஷலிச கம்யூனிச ஆட்சி, தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. பிரிட்டனும், பிரான்சும் ஸ்டாலினை எதிரியாக பார்க்கும் அளவிற்கு ஆரம்பத்தில் ஹிட்லரை ஒரு எதிரியாக பார்க்கவில்லை. ஹிட்லரின் நாடு பிடிக்கும் ஆசையையும் இவர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதனால் பிரிட்டன் தனக்கு ஒரு அச்சுறுத்தல் இல்லை என்று நம்பும் ஹிட்லர், பல நாடுகளுடன் ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறார். ஆனால் அவருக்கு தேவை ஏற்படும்பொழுது அந்த ஒப்பந்தத்தை மீறி அந்த நாடுகளை ஆக்கிரமிக்கவும் செய்கிறார். ஒரு கட்டத்தில் ஹிட்லரின் இந்த நாடு பிடிக்கும் கனவு பிரான்சை நெருங்க வைக்கிறது. பிரான்ஸ் கைப்பற்றப்படும் போது தான் பிரிட்டன்க்கு ஹிட்லரின் உண்மை முகம் தெரிகிறது. என்ன செய்தும் தடுக்க முடியாமல் பிரான்ஸை ஹிட்லர் ஆகரமித்து கொள்கிறார். இதற்கிடையில் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி ஹிட்லருடன் இணைகிறார். பிறகு ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பல்கோரிய இணைந்து axis power ஆக மாறுகிறது. இதன்பின் ஜெர்மனி, சோவியத் மீது போர் பிரகடனம் செய்கிறது. ஆனா��் சோவியத்தை எதிர்கொள்ள முடியாமல் பெருத்த சேதத்தை சந்திக்கிறது. இந்த தோல்விக்கு பின் ஜெர்மனி எழவே இல்லை. பிரிட்டன் சோவியட் கூட்டணியிட��் தோல்வியை தழுவுகிறது. ஹிட்லர் தற்கொலை செய்து கொள்கிறார். இடையில் Pearl harbour தாக்குதலால் உலக போரில் பங்கு கொள்ளும் அமெரிக்கா, ஜப்பான் மீது அணு குண்டை போடுகிறது. போர் அதன் உச்சத்தை அடைகிறது. பல ஆயிரம் மக்கள் கொல்லப்படுவத்துடன் ஜப்பான் சரணடைகிறது. இரண்டாம் உலக போரின் விரிவான வரலாறு தெரிந்துகொள்ள நிச்சயம் இந்த நூலை வாசிக்கலாம்.

user_12115

★ 5/5
தோற்றவன் வலியிலிருந்து மீண்டெழும் போது அவனின் முன் நியாயங்களின் மதிப்பு தரமிழந்து தான் போகும். முதல் உலகப் போரின் காரணகர்த்தா ஜெர்மனி என்று உலக நாடுகள் குற்றம்சாட்டி அதை ஒடுக்கிய போது இரண்டாம் உலகப் போருக்கும் நானே காரணகர்த்தா என்று தன்னை மேம்படுத்திக்கொண்டு மீண்டும் ஜெர்மனி நாடுகளுடனான யுத்தத்திற்குத் தயார் நிலையில் நிற்கும் போது அதைத் தவிர்க்க முடியாமல் போகிறது. படைவீரனான ஹிட்லர் முதலாம் உலகப்போரில் தன் நாடு ஜெர்மனி வஞ்சிக்கப்பட்டது என்ற ஆதங்கத்தில் அரசியலை ஆயுதமாக்கி அதில் தன் வாய் சாமர்த்தியத்தாலே நாட்டை ஆளும் பொறுப்பிற்கு வந்து சேர்கிறார். தனிப்பட்ட யூத வெறுப்பிற்கு ஒரு செயல் வடிவம் கொடுத்து அவர்களைக் கொன்று அழிப்பதை உலக நாடுகள் வெறும் வேடிக்கை மட்டும் பார்க்கிறது. முதல் உலகப் போர் முடிந்ததாக என்று சொன்னாலும் ஆங்காங்கே வெடிக்கும் புரட்சிகளும் எதிர்காலத் திட்டமிடல்களும் காலனி நாடுகளைக் கைப்பற்ற ஏற்பட்ட போட்டிகளும் அடுத்து ஒரு போரைக் கொண்டு வந்துவிட்டது. போலந்து மீது ஜெர்மனி தாக்குதல் நடத்தியதே இரண்டாம் உலகப் போரின் அங்கீகாரமான தொடக்கமாகிறது. பிரிட்டன் தலைமையின் மெத்தனப்போக்கும் ஹிட்லரின் செயல்களை வேடிக்கை பார்த்ததும் பல்லாயிர உயிர்களின் இழப்புக்குக் காரணம் என்று கூடச் சொல்லலாம். இந்தப் போரில் தொழில்நுட்பம் பெரும்பங்காற்றியது, அதுபோலத் தனிமனிதனின் வீரத்தையும் முன்னெடுத்துச் சென்றது. பாரீஸைக் கைப்பற்றியது போலச் சோவியத் ரஷ்யாவையும் வளைக்க முடியும் என்ற கனவுடன் இருந்த ஜெர்மனிக்குக் கிடைத்த பதிலடி போரின் முடிவை மாற்றியமைத்து கசப்பின் மொத்த உருவமாக இருந்த ஹிட்லர் என்ற மனிதனின் சகாப்தத்தையும் முடித்து வைத்தது. ரஷ்யர்களின் ஒற்றுமை அதைக் கட்டமைத்த ஸ்டாலின், அவரின் முன்னேற்பாடுகளும் ஒரு கதாநாயக அந்தஸ்தைத் தருகிறது. இந்த உலகப் போரிலும் கடைசியாக அமெரிக்கா உள்நுழைந்து உலகத்திற்கே தானொருவன் தான் "பெரிய அண்ணன்" என்ற பட்டத்தைத் தட்டிப்பறித்துவிடுகிறது. போரினால் பலன் கண்ட ஒரே நாடாகவும் இருக்கிறது. யூதர்களை ஹிட்லர் கொன்று குவிக்கிறார் என்ற அளவில் மட்டுமே செய்திகள் கசிந்திருந்த நிலையில் ஜெர்மனியின் தோல்விக்குப் பிறகு எப்படியெல்லாம் கொன்றார் என்பதை அறியும் போது மனிதக் குலமே நடுங்கியது என்று சொன்னால் மிகையல்ல. அதிகாரத்துடன் சேர்ந்த தனிமனித வெறுப்பின் ஆழம் இனவொழிப்பின் உச்சத்தைத் தொட்டு எஞ்சிய மிச்சம் உலகத்திற்குச் சாட்சியாக மாறுகிறது.

user_12114

★ 5/5
திருமண வீட்டில், வயிறு முட்ட தின்றுவிட்டு, இனிப்பு பீடா ஒன்றை மென்றபடி பந்தியை விட்டு கிளம்பும்போது ஏற்படும் திருப்தியை இந்த புத்தகம் அளித்துவிட்டது. கேஷுவலாக மருதன் எழுதிய "தி ஹிட்லர்" புத்தகத்தை படித்தேன். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் உலகப்போருக்கு சம்மந்தப்பட்ட அனைத்தையும் படித்தாகிவிட்டது. புத்தகங்கள் அப்படித்தான் இருக்கவேண்டும். படிப்பதற்கான தொடர்பையும் ஆர்வத்தையும் இருக்க பிடித்துக்கொண்டிருக்கவேண்டும். மருதனும், ராகவனும், பாண்டியனும் அதைத்தான் செய்வார்கள். ஹிட்லர், ஸ்டாலின், ரஷ்ய உலவுத்துறை கே.ஜி.பி, லெனின், முசோலினி, சோவியத், தாலிபன், நெப்போலியன், ஃபிடல் கேஸ்ட்ரோ, சே குவாரா, காரல், கம்யூனிசம், நாஜி என்று நீண்டுகொண்டே சென்ற பட்டியலுக்கு, The Imitation game, The Schindlers list போன்ற திறைப்படங்களின் காணொளி உதவியுடன், இரண்டாம் உலகப்போரை முழுத்திருப்தியுடன் படித்திருக்கிறேன். வொர்த்து ரீடிங்கு.
Genres
Shelves
History book Marudhan

More like this


அறியப்படாத தமிழ்மொழி: Ariyappadaatha Thamizhmozhi

அறியப்படாத தமிழ்! மறுக்கப்பட்ட தமிழ்! மறைக்கப்பட்ட தமிழ்! இன்றும் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்! அதென்ன, ‘மறைக்கப்பட்ட’ தமிழ்? யார் மறைத்தார்கள் நம் மொழியை? நம் மரபில்/பண்ப…

4.11/5 · 100+ ratings
Check Price

தெற்கிலிருந்து ஒரு சூரியன்: திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்!

தெற்கிலிருந்து ஒரு சூரியன்: கருணாநிதியின் அயராத உழைப்புக்கான மரியாதை! திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தொட…

4.11/5 · 100+ ratings
Check Price

தெய்வம் என்பதோர்... [Teyvam Enpatoor]

நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை.…

4.11/5 · 100+ ratings
Check Price

The Orders Were To Rape You: Tigresses in the Tamil Eelam Struggle

In 2009, the genocidal war of the Sri Lankan state against Tamils ends. In 2012, Meena Kandasamy, who grew up with poster-size pictures of Tamil T…

4.11/5 · 100+ ratings
Check Price

எனது இந்தியா [Enadhu India]

இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…

4.11/5 · 100+ ratings
Check Price

சர்வம் ஸ்டாலின் மயம் [Sarvam Stalin Mayam]

Author: Marudhan

உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத்…

4.11/5 · 100+ ratings
Check Price

A History of South India: From Prehistoric Times to the Fall of Vijayanagar

A History Of South India 4th Edition is an interesting narrative about the history of the Indian subcontinent southwards of the Deccan plateau.

4.11/5 · 100+ ratings
Check Price

The Cage: The Fight for Sri Lanka and the Last Days of the Tamil Tigers

Once known for its exquisite tea, drowsy climate, and amiable people, Sri Lanka was the Indian Ocean jewel of the British Empire. After Independen…

4.11/5 · 100+ ratings
Check Price

கங்கை கொண்ட சோழன் 1

With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…

4.11/5 · 100+ ratings
Check Price

The Great Hedge of India: The Search for the Living Barrier that Divided a People

Author: Roy Moxham

Remarkable and "astonishing," says Jan Morris of Roy Moxham's account of his search for "one of the least-known wonders of Queen Victoria's India,…

4.11/5 · 100+ ratings
Check Price

கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) [Gangai Konda Cholan #3]

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

4.11/5 · 100+ ratings
Check Price