தெய்வம் என்பதோர்... [Teyvam Enpatoor]
Select a cover image
Searching for images...
Saving cover image...
தெய்வம் என்பதோர்... [Teyvam Enpatoor]
- பக்கங்கள்
- 111
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Kalachuvadu Pathippagam
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- First
- ISBN-13
- 9789352440504
நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை. ஆனால் அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூக உளவியலும் எனப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நாட்டார…
user_9665
★ 5/5இது நான் படித்த தொ.ப அவர்களது முதல் புத்தகம், இம்முறை மீள்வாசிப்பு. நான் படித்த முதல் ஆய்வு சார்ந்த நூலும் இதுவே. தொ.ப-வின் புத்தகங்கள் மூலம் கடவுளை, மதத்தை, சாதியை, அதிகாரம் மற்றும் ஆதிக்கம் என்ற தளத்தில் மட்டுமல்லாமல் பண்பாட்டு அளவில் நடந்த சமூக நிகழ்வுகளை இதுவரை அறிந்திராத கோணத்தில் புரிந்துகொள்ள முடியும்.
நாட்டார் தெய்வங்களில் தாய்த் தெய்வங்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன. பக்தா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கேட்கும் தெய்வங்களாக இல்லாமல் பெரும்பாலும் ஆயுதமேந்திய, அக்னி மகுடம் தரித்த, மக்களைக் காக்கும் கோபம் கொண்ட தெய்வங்களாகவே உள்ளன. இந்தக் கோயில்கள் பெரும்பாலும் வடக்கு திசை நோக்கி இருக்கக் காரணம் — பகைவர்கள் வடக்கிலிருந்து மட்டுமே வரமுடியும், எனவே தாய்த் தெய்வம் ஆயுதம் ஏந்தி வடதிசை நோக்கி நிற்கிறது.
நீலியின் கதை, அரசிகளின் பள்ளிப்படைக் கோயில்கள், வள்ளி, நயினார் நோன்பு, சமணப்பள்ளி, வள்ளலார், ஆழ்வார் பாடல்கள், சடங்கியல் தலைமை, சாதிப் படிநிலை எனப் பல கருத்துக்களை இந்தப் புத்தகத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். திரும்பத் திரும்ப வாசிப்பதன் மூலமே தொ.ப-வின் புத்தகத்தில் உள்ள பல்வேறு தகவல்களை உள்வாங்க முடியும்.
user_9664
★ 4/5மிகச்சிறந்த ஆய்வுகளுடன் கூடிய சிறப்பான புத்தகம். சைவம், சமணம், வைணவம் மற்றும் அனைத்துத் தமிழ்ச் சமயங்களின் வழிபாட்டு முறைகள் பற்றியும், முருகன் பற்றிய வரலாற்று உண்மைகளையும் நமக்குத் தருகிறார் பரமசிவன் ஐயா.
ஒரு நாத்திகனாகக் கடவுள் வழிபாட்டைப் பற்றி ஒரு நாத்திகரின் மூலமே அறிந்ததில் பெருமிதம்.
user_9663
★ 5/5தெய்வம் என்பதோர் நூலில் வரலாற்றில் சில குழுக்களால் அரசியல் நலன்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட உண்மைகள் குறித்த ஆழமான ஆராய்ச்சி உள்ளது. தொ. பரமசிவன் பல ஆண்டுகால ஆய்வின் மூலம் நம்பகமான தகவல்களைத் தொகுத்துள்ளார்.
உங்கள் வேர்களை அறிய விரும்பினால், நாம் வழக்கமாகச் செய்யும் சடங்குகளின் மூலத்தை அறிய விரும்பினால், இந்தப் புத்தகத்தை கட்டாயம் வாசியுங்கள். தொ.ப போன்ற ஆசிரியர்களின் பல ஆண்டு ஆராய்ச்சிப் பணி பாராட்டுக்குரியது!
user_9662
★ 4/5ஆண்டு முழுவதும் வெட்ட வெளியில் மண் குவியலாகக் கிடந்து, ஆண்டுக்கு ஒருமுறை உயிர்கொண்டெழும் நாட்டார் தெய்வங்களைப் பெரியார் எதிர்கொள்ளவில்லை. மாறாக, அதிகார மையமாகிய கோயில்களையும் அதை மையப்படுத்திய மனித ஏற்றத்தாழ்வுகளையுமே அவர் எதிர்த்தார்.
தெய்வங்களிலும் மேல்-கீழ் காட்டுவதற்கு முருகனின் இருபுறமும் மனைவியர் நிற்கும் சிற்பங்களில் தெய்வானைக்கு மட்டும் மார்புக் கச்சு இருப்பதைக் காணலாம்.
user_9661
★ 5/5நிச்சயமாக ஒரு சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம். தமிழ் மக்களின் சமயம் மற்றும் பண்பாடு குறித்த ஆழமான பார்வையை இந்நூல் வழங்குகிறது. தொ.ப-வின் பகுத்தறிவுப் பார்வையிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, எல்லாமே உண்மைகளின் அடிப்படையில் அமைந்தவை.
Shelves
More like this
அறியப்படாத தமிழகம்
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்…
பண்பாட்டு அசைவுகள்
தமிழகத்தின் நிலவியல், மக்களின் வாழ்வியல் மற்றும் தொன்மையான மரபுகளை மானுடவியல் நோக்கில் ஆராயும் மிக முக்கியமான நூல் இது. 'அறியப்படாத தமிழகம்' உள்ளிட்ட முந்தைய படைப்புகளி…
நிலமெல்லாம் ரத்தம் [Nilamellam Raththam]
இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அ…
மறைக்கப்பட்ட இந்தியா [Maraikkappatta India]
ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…
எனது இந்தியா [Enadhu India]
இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…
வைகை நதி நாகரிகம் [Vaigai Nathi Nagarigam]
ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரப…
Black Coffee in a Coconut Shell: Caste as Lived Experience
Caste, as it is experienced in everyday life, is the pièce de résistance of this book. Thirty-two voices narrate how from childhood to adulthood, …
எனது இந்தியா
இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…
அழகர் கோயில்
சங்க இலக்கியமான பரிபாடலில் பெயர்சுட்டிச் சொல்லப்படும் திருமால் திருப்பதி - அழகர் கோயில். இதை சிலப்பதிகாரம் திருமால் குன்றம் என்கிறது. இக்கோயிலின் வரலாற்றைத் திருப்பிப் பார்…
இந்து தேசியம் [Hindu Desiyam]
பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல நீங்கள்?,இந்து தேசியம் ,சங்கரமடம்;தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்,இதுதான் பார்ப்பனியம்,புனா ஒப்பந்தம்;ஒரு சோகக் கதை ஆகிய ஐந்த…
உரைகல்
பொதுவாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளவை கதம்பம் போன்று இருந்தாலும் அவ்வெழுத்துக்களை இணைப்பதற்க்குத் தொல்லியல், வைதீக எதிர்ப்பு, சங்கராச்சாரியர் பற்றிய கட்டுரை, நமது பண்பாட்டில் ம…