களப்பிரர் ஆட்சியில் தமிழகம் [Kalapirar Atchiyil Thamizgan]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் [Kalapirar Atchiyil Thamizgan]

None

3.62/5 · 56 ratings

தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும் தெளிவாகவும் சரியாக வும் இன்னும் எழுதப்படாமலிருப்பது தமிழரின் பெருங்குறையாகும். தமிழகத்தின் மிக நீண்ட வரலாற்றில் களப்பிரரின் ஆட்சிக்காலம் முக்கியமானது. களப்பிரர் ஆட்சிக்காலம் தமிழ் நாட்டு வரலாற்றில் ‘இருண்ட காலம்’ ஆக இருந்து வந்தது. ஒரு காலத்தில் களப்பிரர் தமிழகத்தை அரசாண்டார்கள் என்னும் வரலாற்றுச் செய்தியே நெடுங் காலமாக மறைந்து கிடந்தது. வேள்விக்குடிச் செப்பேடு …

Reviews

user_12097

irundakalam yena sollappadum thagaval therinthukolla

user_12096

★ 4/5
களப்பிரர் காலம் பற்றிய மறுக்க இயலா சான்றுகளை சிறப்பாக முன் வைக்கின்ற நூல்.

user_12095

★ 5/5
களப்பிரர்கள் இப்பெயர் குறித்து பொதுவாக என்ன அபிப்பிராயம் இருக்கும் என்பது நான் பகிர்ந்துள்ள படத்தை பார்த்தாலே தெரிந்திருக்கும். அதற்காகத்தான் இதை பகிர்ந்தேன். வரலாற்றில் இருண்ட காலம் என்பதற்கு அர்த்தம் அக்காலகட்டம் குறித்த தகவல் அதிகம் கிடைக்கப்பெறவில்லை என்று. ஆனால் நம்மாட்கள் அது ஏதோ கொடுரமான காலம் என்று நினைக்கிறார்கள். (டேய் பரமா வாசிங்கடா!) அதற்கு முன்பு நிலைப்படை மட்டும் கொண்டிருந்த மூவேந்தர்கள் எளிதாக வெளியிலிருந்து வந்த கர்நாடக களப்பிரர்களால் வெல்லப்பட்டிருப்பார்கள். மேலும் ஒவ்வொரு பேரரசும் வீழ்ச்சிக்கு பின்புதான் உருவாகும். அடுத்தடுத்து வளர்ந்து கொண்டுதான் போகும். அதை விடுத்து அப்போதே அப்படி இருந்தோம், இப்போது இல்லை என புலம்புவது அறிவீனம். இப்புத்தகம் ஆய்வு நூல். அதனால் வெறும் தகவல்களாலே நிரம்பியிருப்பினும் தர்க்கப்பூர்வமாக இருப்பது சுவாரசியத்தை கொடுத்தது. இன்னார் இப்படி சொல்கிறார்கள், இதனால் அது இப்படி இருக்காது என தன் கருத்தை முன்வைத்தபடி செல்கிறார். எனக்கு சுவாரசியமான தகவலாக இருந்தது. களப்பிர கால சோழர்களின் நிலைதான். களப்பிரர்களை தாஜா செய்ய மன்னர் பெயரை மகனுக்கு வைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். பாண்டியர்கள் பரவாயில்லை, அருகாமை தீவுத்தேசத்திற்கு சென்று ஆட்சியைப் பிடித்துருக்கிறார்கள். அதே போல சமயம். களப்பிர கால சமயநிலை. கட்டாயம் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டியது. ஏனென்றால் அதில்தான் பல தவறான வதந்திகள் உலா வருகின்றன. ஒரு மன்னனே நினைத்தாலும் மொத்தமாக இன்னொரு மதத்தை நிராகரிக்க முடியாது. களப்பிர காலத்தில் வைதீக மதம் நிலையை தெளிவாக விளக்கியிருக்கிறார். அதே போல் இன்னொரு முக்கியமான தகவலாக இறையனார் அகப்பொருள் என்றொரு நூலை ஏன் இறைவன் எழுதியாக முன்வைத்து பூ சுற்றப்பார்த்தார்கள் என்றும் விளக்கியிருக்கிறார். எனக்கு புதுகை சுற்றுலாவில் இறைவன் எழுதிய ஓலைச்சுவடி எனக்காட்டி பணம் பறித்தது நினைவுக்கு வந்தது. தமிழ் செய்யுள்கள் பட்டியலை ஏற்கனவே படித்திருந்தாலும் இவர் இன்னும் புதிதாக பலதை காட்ட வியப்பாக இருந்தது. எவ்வளவு காலத்தால் இழக்கப்பட்டிருக்கிறது? புனைவெழுத்தாளர்களை தாண்டி ஓர் ஆய்வாளராக 125 ஆண்டிலும் கொண்டாட பட வேண்டியவராக மயிலையார் இருக்க காரணம் அவரது படைப்புகளே... வாசித்து அறிவீர்....

user_12094

★ 4/5
என் புத்தக விமர்சனம் இங்கே--->https://youtu.be/aTBjFyGoNsM?si=CcIf1...

user_12093

★ 4/5
"களப்பிரர்களின் ஆட்சியில் தமிழகம் " - மயிலை சீனி. வேங்கடசாமி ********************************************************** கிட்டதட்ட கிபி 250-600ம் ஆண்டு வரை ஆண்ட களப்பிரர்கள்., களப்பரர்கள் , களப்ராக்கள் என்றைழைக்கப்பட்ட, கன்னட மொழியை தாய் மொழியாக கொண்ட இனம், மெல்ல வளர்ந்து தென்னகத்தை கிட்டதட்ட 300 ஆண்டுகள் ஆண்டு வந்துள்ளனர். களப்பிரர்கள் பற்றிய தகவல்கள் சென்ற நூற்றாண்டில்தான் கிடைத்திருக்கிறது. அவர்களை பற்றிய பெரும் செப்பேடுகளோ, நாணயங்களோ, வரலாற்று சிறப்புமிக்க சாதனை சரித்திர நிகழ்வுகளோ இல்லாததால், களப்பிரர்கள் என்ற ஒரு இனம் தமிழகத்தை ஆண்டது மிகத் தாமதமாகவே அறியக்கிடைத்திருக்கிறது . களப்பிர அரசர்களைப் பற்றி வரன்முறையான வரலாறு கிடைக்காமல், மேற்காட்டியபடி, அங்கொரு துணுக்கும் இங்கொரு துணுக்குமாகக் கிடைக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு அரசியலில் களப்பிர அரசருக்குப் பெரிய எதிர்ப்புகளும் அரசியல் கலகங்களும் குழப்பங்களும் நாட்டில் இருந்துகொண்டிருந்தன என்பதைச் சில குறிப்புகளைக் கொண்டு அறிகிறோம். களப்பிரர்கள், மூவேந்தர்களுக்கு முன்பே பல்லவ, சளுக்கியர்களுக்கு இணையான, வலுவான நிலையில் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். அதாவது, சேர,சோழ,பாண்டியர்கள் குறுநில மன்னர்களாக, களப்பிரர்கள் பெருங்குடையின் கீழ், அவர்களின் ஆட்சிக்குட்பட்டவர்களாக! அதேவேளையில் தமிழகத்தின் தொண்டைமண்டலம்(எனும் வடகோடி மாவட்டங்கள்) மட்டும் பல்லவர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்ததால், களப்பிரர்களின் ஆளுமை இம்மண்டலத்தில் நடைபெறவில்லை. இலங்கை களப்பிரர்கள் காலத்திலும் போர்களோடுதான் ஊடாடிகொண்டருக்கிறது. இலங்கை அரசர்களுக்குள்ளும் பாண்டிய சிற்றரசுகளின் படையெடுப்புகளாலும் நிம்மதியற்ற நிலையிலயே இலங்கை இருந்து வந்துள்ளதை அறியமுடிகிறது. இப்படி பற்பல வரலாற்று தகவல்கள், சான்றுகள், செப்பேடுகள் கொண்டும், சங்க கால இலக்கியங்களான அகநானூறு , குறுந்தொகை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, நற்றிணை , நாலாயிர திவ்வியப் பிரபந்தம் , பதிற்றுப்பத்து, பதினென் கீழ்க்கணக்கு நூல்கள், பட்டினப்பாலை, பரிபாடல், பன்னிரு திருமுறைகள், பாண்டிக்கோவை, புறநானூறு, பெரியபுராணம், பெருங்கதை, மணிமேகலை உட்பட 130க்கும் மேலான தரவு நூல்களை கொண்டும் ஆய்ந்து எழுதப்பட்டிருக்கிறது இந்நூல். களப்பிரர்கள் பற்றிய நேரடி வரலாற்று தகவல்கள், 3 முதல் 6ம் நூற்றாண்டு வரை கிடைத்த சான்றுகள், பாடல்கள், வரைபடங்கள் வைத்து ஒப்பீட்டளவில் இந்த ஆய்வு புத்தகம் இயற்றப்பட்டிருக்கிறது. சமணம், பௌத்தம் பற்றிய ஏராளமான குறிப்புகளும் அறியக்கிடைக்கிறது. இதனாலேயே அதிக அளவில் இப்புத்தகத்திலிருந்து குறிப்பெடுத்துள்ளோம்(Highlights). மேம்போக்காக அல்லாது ஊன்றி படிக்க வேண்டிய நூல்.!
Genres
Shelves
book மயிலை சீனி. வேங்கடசாமி History

More like this


ಯಾದ್ ವಶೇಮ್ | Yad Vashem

ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம், பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது …

3.62/5 · 56 ratings

உணவு அறிவியல் பண்பாடு

தமிழர்கள் உடல் வலுவும் நலமும் பெற வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்பட்ட முதன்மையான நூல்களில் ஒன்று இது. தமிழர்களிடையே நிலவும் உணவுசார் மூடநம்பிக்கைகளைக் கடிந்துகொண்டு நவீன …

3.62/5 · 56 ratings

மனிதனுக்குள் ஒரு மிருகம் [Manithanukkul Oru Mirugam]

This book was published as a series in a Tamil weekly, Junior Vikatan a few years ago.

3.62/5 · 56 ratings

ஆரிய மாயை

ஆரிய மாயை என்னும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளின் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் பல ஆற்றல் அறிஞர்களின் ஆராய்ச்சி உரைகளை திரட்டியும் வெளியிட…

3.62/5 · 56 ratings

டாலர் தேசம் [Dollar Dhesam]

Dollar dhesam is a novel that completely covers the political history of America in view with all of its presidents answering pertinent questions …

3.62/5 · 56 ratings

உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1]

கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…

3.62/5 · 56 ratings

நிலமெல்லாம் ரத்தம் [Nilamellam Raththam]

இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அ…

3.62/5 · 56 ratings

சிம்ம சொப்பனம்: பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை [Simma Soppanam - Fidel Castro]

Author: Marudhan

'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும். <…

3.62/5 · 56 ratings

வைகை நதி நாகரிகம் [Vaigai Nathi Nagarigam]

ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரப…

3.62/5 · 56 ratings

எனது இந்தியா [Enadhu India]

இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…

3.62/5 · 56 ratings

இசைவாணர் கதைகள்

இசைவாணர்களைப் பற்றியும் நடனக் கலைஞர்களைப் பற்றியும் உலகத்திலே பல கதைகள் வழங்கி வருகின்றன. நம்முடைய பாரத தேசத்திலேயும் கலைவாணர்களைப் பற்றின கதைகள் தொன்று தொட்டு வழங்கி வர…

3.62/5 · 56 ratings