Reviews for கெட்ட வார்த்தை பேசுவோம்
16 reviews total
user_12043
★ 4/5 Feb 02, 2026திட்டுச் சொற்களின் அர்த்தம் புரியாமலேயே அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். 2012-ல் இந்தப் புத்தகம் பற்றி தெரிந்ததிலிருந்தே வாங்க முயன்றேன், ஆனால் எப்போதும் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில் இருந்தது. கிண்டில் பதிப்பு வந்தபோது உடனே வாங்கினேன்.
தமிழ் திட்டுச் சொற்களின் தோற்றம், வேர்ச் சொற்கள் பற்றி அறிய ஆர்வம் இருந்தால் இந்தப் புத்தகம் சரியானது. முக்கியமாக அல்குல் என்ற சொல்லை மையமாக வைத்து, வெவ்வேறு காலகட்டங்களில், பாடல்களில், கதைகளில், கையெழுத்துப் பிரதிகளில் அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை விரிவாகப் பேசுகிறது.
ஆண் எழுத்தாளர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், பெண் உறுப்புகள் மற்றும் பெண்களின் பாலியல் நடத்தை மீதே கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் ஆசிரியரின் சார்பு தெரிகிறது, ஆனால் ஒட்டுமொத்தமாக இந்தப் புத்தகம் திட்டுச் சொற்கள் பற்றிய புரிதலை ஆழப்படுத்தும்.
user_12042
★ 4/5 Feb 02, 2026இந்தப் புத்தகம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. தமிழ் இலக்கியத்தில் திட்டுச் சொற்கள் எந்தெந்த இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன, அவற்றின் சூழல் மற்றும் பொருள் என்ன என்பதை நன்கு விளக்குகிறது.
user_12041
★ 4/5 Feb 02, 2026கெட்ட வார்த்தை பற்றி பேசுவோம் என்பதே இந்நூலுக்குப் பொருத்தமானதாக இருக்கும். கெட்ட வார்த்தை என்று கருதப்பட்ட, கருதப்படுகிற வார்த்தைகள் பற்றியும் அவற்றிற்கான இலக்கிய ஆதாரங்களையும் சுட்டி நிறுவுகிறார்.
அதன் வழியே இவ்வார்த்தைகள் நாகரிகம் என்ற அடிப்படையில் இலக்கியத்தில் எவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் கூறுகிறார். கண்டிப்பாக இது கெட்ட வார்த்தை பேசுவதை ஊக்குவிக்கும் புத்தகமல்ல.
user_12040
★ 4/5 Feb 02, 2026இக்கட்டுரைத் தொகுப்பில் உள்ள இலக்கியங்களின் உரையைக் காணொளிப் பதிவு செய்து வெளியிட்டால் கருப்பர் கூட்டத்தின் பி டீம் ஆகிவிடுவோம் போலும்.
கெட்ட வார்த்தைக்கு அர்த்தம் மட்டுமல்லாது இலக்கிய வரலாற்றுச் சான்றுகளும் உள்ளதை ஆசிரியர் அழகாக எடுத்துரைக்கிறார். பதிப்பாசிரியர்கள், உரையாசிரியர்கள் போலி கலாச்சாரத்தைக் காப்பாற்ற சொற்களையும் உரையையும் மாற்றுவது, ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 1984 நாவலில் வரும் மொழி அழிப்பை நினைவூட்டுகிறது.
தற்போது புழக்கத்தில் உள்ள இழிசொற்களை கம்பர் முதல் தொல்காப்பியர், காளமேகப் புலவர் வரை தங்கள் பாடல்களில் சாதாரணமாக உபயோகித்ததையும், அச்சொற்களைப் பதிப்பாசிரியர்கள் எவ்வாறு மாற்றியுள்ளனர் என்பதையும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் பேசும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
user_12039
★ 4/5 Feb 02, 2026தமிழ் இலக்கியம் ஓலைச்சுவடியிலிருந்து காகித அச்சுப் பிரதியான போது அதில் உள்ள பல சொற்கள் மற்றும் பாடல்கள் நீக்கப்பட்டன. ஏனென்றால் அவை காமம், பசலை, பெண்ணுறுப்பு (அல்குல்), புணர்ச்சி பற்றியவை. இப்படி நீக்கப்பட்ட சொற்கள் மற்றும் பாடல்கள் பற்றிய ஆய்வு நூல் இது.
user_12038
Feb 02, 202643% வாசித்த பிறகு இந்தப் புத்தகத்தைத் தொடர முடியவில்லை. இது என் ரசனைக்கு ஏற்ற புத்தகமாக இல்லை, எனவே முடிக்காமலேயே விட்டுவிட்டேன்.