Reviews for சூடிய பூ சூடற்க [Soodiya poo soodarka]

14 reviews total

user_11815

★ 5/5 Feb 02, 2026

மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பு. நாஞ்சில் நாடனின் உச்சகட்ட படைப்பு என்று சொல்லலாம். வாசிக்க வேண்டிய புத்தகம்.

user_11814

★ 4/5 Feb 02, 2026

"சட்டத்திற்கு ஒற்றை கண் எனில் ஓட்டைகளுக்கு ஆயிரம் கண்கள். சட்டத்தின் பாதுகாப்பில் ஓட்டைகளில் உயிர் வாழும் தேசம் இது" — இந்த வரிகள் நாஞ்சில் நாடனின் கூர்மையான சமூகப் பார்வையை அப்படியே வெளிப்படுத்துகின்றன.

user_11813

★ 3/5 Feb 02, 2026

இது பாரம்பரிய கதை அல்ல, எழுத்தாளர் தன் நிஜ வாழ்க்கை அனுபவங்களை கதைகளாக சொல்லியிருக்கிறார். அவர் எழுதும் விதத்தில் கதைகளை எளிதாக மனக்கண்ணில் காண முடிகிறது.

user_11811

★ 5/5 Feb 02, 2026

நான் படிக்கும் முதல் நாஞ்சில் நாடன் படைப்பாகும். நாஞ்சில் நாடன் அவர்களின் உரையாடலைப் போன்ற எழுதும் பாணி மிகவும் கவர்ந்தது. அன்பையும் நேசத்தையும் போதிக்கும் கதைகள் இவை.

குறிப்பாக சூடிய பூ சூடற்க எனும் சிறுகதை மிக்க வலிமை உடையதாகும்.

user_11810

★ 4/5 Feb 02, 2026

புத்தகம் பிடித்திருந்தது. சில கதைகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றாலும், ஒட்டுமொத்தமாக வாசிக்கத்தக்கது. இது நாஞ்சில் நாடன் அவர்களின் முதல் புத்தகமாக படித்தேன். அவரது ஆழமான அறிவு அவரது எழுத்தில் நன்றாக வெளிப்படுகிறது. அவரது நகைச்சுவை உணர்வும் நையாண்டியும் சிறப்பானவை. சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த புத்தகத்தை வாங்கியது மதிப்புக்குரியது.

user_11809

★ 3/5 Feb 02, 2026

சாகித்ய அகாடமி விருது வாங்கிய நூல்களை படிக்க வேண்டும் என்ற திட்டத்தின் படி தேர்வு செய்யப்பட்ட புத்தகம் இது. 2010இல் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.

160 பக்கங்களும் 15 சிறுகதைகளும் கொண்டது. சில கதைகள் கட்டுரை வடிவிலும், சில கதைகள் சுயசரிதை அல்லது பயணக் கட்டுரை மாதிரியும் உள்ளன. இக்கதைகளில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நாம் எங்கோ சந்தித்த ஒரு நபராக தான் இருப்பார்கள்.

ரயில் பயணத்தின் போது வடக்கில் இருந்து வருபவரை நடத்தும் விதம், பாசஞ்சர் ரயில்வேயில் பயணிகளுக்கு உள்ள வசதி, ஈசன் கடையில் கிடைக்கும் மலிவான உணவுப்பொருட்களின் நிலைமை, பஞ்சத்தினால் ஏற்படும் கொடுமை, எழுத்தாளர்களின் நிலைமை, கூர்க்காவின் வாழ்க்கை முறை, நாட்டில் உள்ள லஞ்சம், விலைவாசி உயர்வும் சாமானிய மனிதனின் சம்பள உயர்வு, மணப்பெண் மணமகன் பரிமாற்றம் என சமூகத்தில் நடக்கின்ற அவலங்களின் குமுறல்களே இச்சிறுகதைத் தொகுப்பு.

user_11808

★ 5/5 Feb 02, 2026

நாஞ்சில் நாடன் தன் உச்சத்தில் எழுதியிருக்கிறார். யாம் உண்பேம் இந்தத் தொகுப்பிலேயே சிறந்த கதை. சங்கத் தமிழ் சொற்களும், சமகால மொழியும், இடையிடையே மராத்தி வார்த்தைகளும் கலந்த அற்புதமான எழுத்துநடை.

user_11807

★ 3/5 Feb 02, 2026

எல்லா சிறுகதைகளும் ஒரே தரத்தில் இல்லை. சில கதைகள் நன்றாக இருந்தன, சில சராசரி. ஆனால் கூர்க்கா கதை (தன்ராம் சிங்) மிகவும் பிடித்தது. சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்தத் தொகுப்பில் அவரது கதை சொல்லும் திறனும், கூர்க்காவை நாம் எப்படி நடத்துகிறோம் என்ற கேள்வியும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. வாசிக்கத்தக்கது.

user_11806

★ 5/5 Feb 02, 2026

சமூகத்தின் மீதான நாஞ்சிலின் பார்வை, அதை அவர் சாடும் விதத்திற்காகவே படிக்க வேண்டிய ஒன்று. குறிப்பாக பரிசில் வாழ்க்கை, கடவுளின் கால் ஆகிய கதைகளை படிக்கும்போது அழுதே விட்டேன். ஒரு கனத்த சோகத்தை நம்முள் விதைத்துச் செல்கிற கதைகள் இவை.

user_11805

★ 5/5 Feb 02, 2026

ஒவ்வொரு கதையின் தொடக்கம் சற்று வித்தியாசமாக இருந்தது அதன் முடிவு வரும் போது. கும்பமுனி மற்றும் சிரிக்க வைக்கும் கதைகளில் ஏதோ ஒரு சோகம், வறட்சி, வறுமை உணர்வு இழையோடுகிறது.

பெரும்பாலான கதைகளில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சு வழக்கு அழகாக வெளிப்படுகிறது.

வலைகள் எலிகளுக்கானவை, யாம் உண்பேம், படுவத்து பத்து, பரிசில் வாழ்க்கை, தன்ராம் சிங் ஆகிய கதைகள் மிகவும் கவர்ந்தன.