Select a cover image
Searching for images...
Saving cover image...
கோசலை
Kosalai
- பக்கங்கள்
- 300
- வடிவம்
- Kindle Edition
- பதிப்பகம்
- Neelam Publications
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- 1
- ISBN-13
- 9789394591073
- ASIN
- 9394591079
அனைத்திலும் முழுமை பெற்ற மனிதர் எவருமில்லாத இவ்வுலகில் குறைமனிதர், நிறைமனிதர் என்ற இருமைகள் உருவாகி, வெறுப்பிற்கும் அன்பிற்கும் இடையில் நெடுங்காலப் போர் ஒன்று நடந்துவருகிறது. இச்சமரில் முகாந்திரங்கள் ஏதுமின்றி, தன் உடற்கூறால் மட்டுமே சிக்கிக்கொள்ளும் கோசலை, புறக்கணிப்பையும், துரோகத்தையும், ஓடுக்குமுறைகளையும் தியாகத்தால் எதிர்கொண்டு எழுந்து நிற்கிறாள். நுண்மையிலிருந்து பெரும் ஆகிருதியாக விரியும் ஆ…
user_11695
★ 5/5கோசலை ஒரு போராளி. அவள் கதையின் ஊடாக மனிதர்கள் அனைவருக்கும் எவ்வளவு போராட்டங்கள் இருக்கின்றன என உணர்ந்தேன். முடிவிலா தேடல் மட்டுமே இந்த வாழ்க்கையின் காரணியாக இருக்க முடியும் என்றும் உணர்ந்தேன்.
இருத்தலின் காரணங்களை மிகவும் அழகாக ஆய்ந்திருக்கிறார் தமிழ்பிரபா. தனிமையை விரட்ட நாம் அன்றாடம் செய்யும் முயற்சிகளை இனிமை பொங்கும் மொழியில் எழுதியுள்ளார். அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
அவள் மீது காட்டப்பட்ட வெறுப்பையெல்லாம் ஆற்றலாக மாற்றினாள் கோசலை!
user_11694
★ 5/5அலங்கார நடை இல்லாமல் மிக இயல்பாக கோசலையின் வாழ்வில் உள்ள இன்பங்களை, காதலை, ஆற்றாமையை, துயரத்தை நேர்த்தியாக ஆசிரியர் கடத்துகிறார். முற்போக்கு அரசியல் பேசுபவர்களிலும் சிலர் சொந்த வாழ்க்கையில் சாதியமும் அடக்குமுறையும் கடைப்பிடிப்பதை எடுத்துக்காட்டிய விதம் அற்புதம்.
கோயிலில் உட்கார்ந்து பூர்ணிமாவிடம் கோசலை 'என்னை நினைத்துக்கொள்' என்று கூறுவது — அத்தனை வாசகர்களுக்கும் வாழ்வின் தொய்வுகளைக் கடக்க உதவும் உந்துசக்தியாக இருக்கும். தமிழின் சிறந்த நாவல்களில் கோசலைக்கு முதன்மையான இடம் இருக்கும் என உறுதியாகக் கூற முடியும்.
user_11693
★ 3/5கோசலையைப் பிரிந்த பின் தன் மேல் பெரிதாக தவறில்லை என்று ஜோதி சமாதானம் செய்துகொள்ளும் காட்சி அற்புதமானது. ஒடுக்கப்பட்டோருடன் நேசமாக இருப்பவர்கள் அதிலிருந்து பிறழும்போது, தாங்கள் முன்னர் சமத்துவமாகப் பழகியதையே பெருந்தன்மையாக எண்ணி தற்போதைய விலகலை நியாயப்படுத்துவதுடன் ஒப்பிடத்தக்க பகுதி.
கோசலையின் பாதுகாப்பின்மை, குறிப்பாக தம்பியின் திருமணத்திற்குப் பின் அவளின் செயல்களில் கச்சிதமாகச் சொல்லப்பட்டுள்ளது. அம்பேத்கரைப் பற்றி அறிந்த பின் கோசலை மேலெழுகிறாள்.
அவசரகால நிலை, இரட்டை கோபுரத் தாக்குதல், சுனாமி என நீண்ட காலவரிசையில் கதை கடக்கிறது. சார்பட்டா போல கதாபாத்திர அறிமுகமும் பின்னணியும் சொல்லும் பாணி கவனிக்கத்தக்கது. பம்பிங் ஸ்டேஷன் தகவல்கள் சிறப்பாக இருந்தாலும் கொஞ்சம் திணிப்பாகத் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட்களின் சாதி முரண்பாட்டை விமர்சிப்பது காலங்காலமாக இருக்கும் விமர்சனமே.
user_11692
★ 4/5பேட்டை நாவலுக்குப் பிறகு தமிழ்பிரபாவின் அடுத்த நாவல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
முழுமை பெற்ற மனிதர் யாருமில்லாத இவ்வுலகில் குறை-நிறை என்ற இருமைகளுக்கிடையில் வெறுப்பிற்கும் அன்பிற்கும் நெடுங்கால போர் நடக்கிறது. இச்சமரில் தன் உடற்கூறால் மட்டுமே சிக்கிக்கொள்ளும் கோசலை, புறக்கணிப்பையும் துரோகத்தையும் தியாகத்தால் எதிர்கொண்டு எழுந்து நிற்கிறாள். நுண்மையிலிருந்து பெரும் ஆகிருதியாக விரியும் ஆலம் விதையின் பண்பைப் போன்றது கோசலையின் வாழ்வு.
கோசலையை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுவாரோ என்று பயந்தபோது, அவளும் சாதாரண மனிதர்தான் என்பதை உஷா மீது காட்டும் பொறாமை மூலம் விளக்குகிறார்.
user_11691
★ 5/5கோசலை... மேகம் பார்க்கும் வானம் அவள்.
அப்பா, தம்பி, கணவன், மகள் என குறுகிய வட்டத்திற்குள் உழன்றுகொண்டிருக்கும் கோசலை — நம்பினவர்களின், நேசித்தவர்களின் ஆதரவற்று வெறுமையாய் நிற்கையில் எதற்காக இந்த வாழ்க்கை? உடல் குறைபாடு கொண்ட, சமூகத்தால் புறக்கணிக்கப்படும் பெண், சிறு வயது முதல் தன் மீதே கழிவிரக்கம் கொண்டு வளர்ந்தவள், வாழ்வில் சந்திக்கும் மாறுபாடுகளும் சமூகத்தில் அவள் கொண்டுவரும் மாற்றங்களுமே கதையின் சுருக்கம்.
கோசலையின் தாக்கம் படிப்போர் அனைவரையும் கட்டாயம் ஆட்கொள்ளும்.
Genres
Shelves
More like this
பேட்டை
தமிழ்ப்பிரபா எழுதியுள்ள ‘பேட்டை’ சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைத் தன் களமாகக் கொண்டுள்ள நாவல். நிலப்பரப்புசார் படைப்புகளுக்கே உரிய ஆதாரமான தன்மைகள் பலவற்றையும் இயல்…
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்
சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்
வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
சில நேரங்களில் சில மனிதர்கள்
தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…
கடல் புறா 1
சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…
கள்ளிக்காட்டு இதிகாசம்
தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…