வனவாசம்-1

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வனவாசம்-1

Vanavaasam

4.06/5 · 500+ ratings

தமிழ் இலக்கிய உலகின் வித்தகராகப் போற்றப்படும் ஒரு மாபெரும் படைப்பாளியின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூல் மிகத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் பதிவு செய்கிறது. ஒரு கவிஞராகவும், எழுத்தாளராகவும் அவர் சந்தித்த சவால்கள், அரசியல் மாற்றங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்வின் ஏற்ற இறக்கங்களை இந்த சுயசரிதை விவரிக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு ஆளுமையின் மனசாட்சியாகத் திகழும் இந்தப் படைப்பு,…

Reviews

user_11327

★ 4/5
அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி..... எல்லாம் டைரக்ட் அட்டேக்ஸ் தான்.......

user_11326

★ 5/5
கவிஞர் ஐயா அவருடைய வனவாசத்தை வாசிக்கும்போது வாசிப்பவர்களையும் அதில் உயிர்ப்போடு வாழ வைத்துவிட்டார்.. அப்படியே படிக்கும்போது தன்னை அறியாமலே எல்லாமும் கண் திரையில் ஓடி சென்றது..

user_11325

★ 4/5
Nice book to read. I completed within two days of reading. Very interesting and an eye opener for someone who is into politics.

user_11324

★ 5/5
வனவாசம் - அமணம். மிக வெளிப்படையான சுயசரிதம். அரசியல், கலை, மொழி தாண்டி மனிதனின் சுயத்தை போட்டு உடைத்துள்ளார்.

user_11323

★ 5/5
If you want to know truth about tamilnadu Political leader between 1950-1980, this was the best choice.

user_11322

★ 4/5
Nice book to read. Essay while leaving the party and some other Essay in this books are so nice. Really amazing lines and he played with tamil words. I love to read this.

user_11321

★ 3/5
More than his film career, vanavasam speaks about his political life, specifically the rise of DMK party. All you adimer are not your heroes, these statements was strongly conveyed through his narrative.

user_11320

★ 4/5
Kannadasan writes his biography. It deals more with his political life rather than his literature life. He justifies the title of the book in the index itself. It gives a experience of pleasant reading.

user_11319

★ 4/5
This book portrayed the root of DMK very well. First few chapters author talks about himself. It might be eyeopener about how tamilnadu politics done in Mr. Annadurai Era. This is totally authors perspective, may be biased. Truths were not revealed exactly, just tipped the iceberg, then he moves on the other incident.

user_11318

★ 5/5
புனித நூல் தெளிவை கண்டடையலாம் ஒருவேளை நீங்கள் வாழ்க்கை அனுபவங்களில் ஏற்படும் கேள்விகளில் அதில் உள்ள சீஸா விளையாட்டுகளின் அர்த்தம் அல்லது விடை தேடுபவர்களாக இருந்தால் இந்த புத்தகம் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு உதவலாம் . மனிதமனங்களின் அற்ப விளையாட்டுகளின் தொகுப்பாகவே இதை நான் உணர்கிறேன் .. நன்றி கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு என் சமூக வாழ்க்கையையும், தனிமனித வாழ்க்கையையும் நான் சரியாக கட்டமைக்க உதவும் இப்புத்தகம் எனக்கு புனித நூல்..

user_11317

★ 4/5
கண்ணதாசன் - ஒரு ஆகச்சிறந்த ஆளுமை தன்னைத்தானே தோலுரித்த சுயசரிதை. பொதுவாக சுயசரிதைகளில், தன்னைப் பற்றிய இருண்ட பக்கங்களை தவிர்க்க முயல்வார்கள் - விதிவிலக்குகள் சில. கண்ணதாசன் அவர்கள் பொதுமகளிர் வீட்டிற்கு சென்றது, மதுவால் பணத்தை இழந்தது, பொறுப்பில்லாமல் சுற்றித் திரிந்தது , என பலர் பேச தயங்கும் விஷயங்களை பற்றி தைரியமாகப் பேசுகிறார். அரசியல் கட்சியில் இணைந்தது, அண்ணா மற்றும் கருணாநிதி மீது இருந்த பிணக்கு, கட்சியில் ஓரங்கட்டப்படும் அரசியல், கடைசியாக தெளிந்த மனிதனாக அரசியலிலிருந்து விடைபெற்றது என விவரிக்கும் இப்புத்தகம் ஒரு படிப்பினை என்றே சொல்லலாம்.

user_11316

★ 4/5
கடலில் நீந்தியது போல் ஒரு உணர்வு..அதுவும் கவிதை கடலில்...!!! எதோ காலக் கண்ணாடியில் பின்னோக்கி பயணித்து , அப்போது இருந்த நாட்களை கண்டு கழித்தது போல் இருந்தது. இந்நூலில் இவருடைய அரசியல் வாழ்க்கை பெரிதும் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் அவரது "தென்றல்" இதழில் அவர் வெளியிட்ட சில முக்கிய தலையங்கங்கள் இங்கு இடம் பெற்றுள்ளது. மொத்தத்தில் கண்ணதாசன் எப்படி சுற்றத்தாரால் தன் வாழ்க்கையை இழந்து எழுகிறார் என்பதே முக்கிய வரைவு. அனால் அதில் மொத்த தமிழக மக்களின் வாழ்வியல் படமாக்கப்பட்டிருக்கிறது. நமக்கு பெரிதும் தெரியாத, அனால் மிகவும் முக்கியமான அரசியல் இதில் பேசப்பட்டிருக்கிறது.

user_11315

★ 4/5
1.Indeed a deep read. Author Kannadasan Penned down his thoughts in a regretted state . His several personal life experiences are missing. 2.He apparently accepted he was a womanizer and Non financial planner and guiding readers to not follow him in such way. 3. He boldly spoke the Dravidian conspiracy theory against Anna durai and Karunanidhi. Shedding light on readers how Dravidian principle fluctuated on its shape for gaining mass public by propagating Aryan Theory, Brahmin hatism, Self respect. 4. At the end Author boldly summarized his decade long bitter experience with DMK as 'Vanavaasam ' and how today Tamil Nadu politics paved it's way from Hypocritical politics.overall It's his Personal Experience with Politics. And Who am I judge to others ?

user_11314

★ 4/5
Kannadasan life history between 1943 to 1961, it's more.of DMK's growth as a party that has been depicted in this book. The interesting word and poems play between the leaders of the party, through the dailies they run, is very interesting and like drenching in honey called Tamil.. The first few pages tells you the struggles of the person who comes out of the family in search of a living. Kannadasan also mentions at one end he was losing money through many unwanted habits however at other end he started to earn money through writing in Cinema.. He doesn't shy away from mentioning his so called.habits which lead to his destruction and loss of money.. He had this booked named it as Vanavasam as he was stuck in politics during that period, which he couldn't understand or fit for.to be there.. The only drawback for me is it goes into so much detailing of party members and their day to day to activities, which was a bit boring and repititive part( probably after reading a few books on political leaders or politics, i can come out of this aversion)

user_11313

★ 4/5
This is my first kannadasan book as well as first autobiography book. I have heard lot of the kavignar even heard his songs but never read his books. Before starting to read I thought he will be explaining all his life events. But on reading forward I understood that it was more about his political life rather than personal one. How his life started to mould and how politics suffered him. So it is not full auto biography but a part from his life. To publish a embarrassing mistakes among the masses needs real guts. Kudos to author for that. Kaviarasar has shown the dark sides of highly celebrated leaders like Annadurai,karunanidhi. It proves that they are human too not saviours or magicians. This books gives people inside the politics. How DMK party changes/deviates from its motto as they still do. Due to some unknown reason the author couldn't write few incidents or names. It was explicitly written by the author but still the transparency of his life is admirable. In the end nobody is perfect every human has good and dark sides. And every human goes through various emotional phases. Hats off to your guts again for writing openly.

user_11312

★ 5/5
கவிஞர் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் கண்ணதாசன். கவிஞர் என்றாலே தத்துவம், காதல்,சோகம்,சரித்திரப்புகழ் என யாவரும் யூகிக்க இயலாத ஐயாயிரத்திற்கு அதிகமான அன்றும் இன்றும் என்றைக்கும் என எல்லா ந��ரங்களிலும் பொருந்தக்கூடிய மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடல்களை படைத்தருளிய பாடலாசிரியராக மட்டுமே அறிமுகமான எனக்கு 'வனவாசம்' படிக்கப் படிக்க ஆச்சரியமே. ஓர் சுயசரிதையை எவ்வாறு சுவாரசியமாக படைக்க வேண்டும் என்பதற்கு கவிஞரே உதாரணம். மகாத்மா காந்தியின் சத்திய சோதனையையே மிஞ்சும் அளவிற்கு உண்மையை உரக்க கூறியுள்ள படைப்பு என்று கூறினால் மிகையல்ல. ஒருவன் 'எப்படி வாழக்கூடாது' என்பதற்கு நானே உதாரணம் என்று அவரே அறிமுகம் தந்து, தன்னை சாதாரண மனிதனாகவே பாவித்து, 1943 முதல் 1961வரையுள்ள காலகட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளை தொகுத்ததே இந்நூல். 'நீ எங்கு சென்றாலும் உருப்பட மாட்டாய்' என்று தனது எட்டாம் வகுப்பு ஆசிரியர் கூறியதை மெய்யாக்கும் விதமாகவே வனவாசம் அமைந்துள்ளது.அது வாழ்க்கையை சிறிதும் திட்டமிடலின்றி ஒரு கோட்பாடினை வகுக்காது ஒர் இலக்கு இன்றி பயணித்ததே அதற்கு காரணம். தனது வாழ்க்கையை சாதாரண எழுத்தாளனாக தொடங்கி ஆசிரியராக உயர்ந்து இறுதியில் தென்றல் என்ற பத்திரிக்கையினை நிறுவி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். கடன் கடன் கடன் சிறுவயது முதல் வனவாசம் முடியும் வரை கடன்காரனே. தனது வாழ்வின் கருப்பு பக்கங்களை மறைக்க என்னும் பல பிரபலங்கள் மத்தியில் தன் வாழ்வில் நடந்த மிக அருவருப்பான சம்பவங்களை மறைக்காது எழுதியுள்ளமை வியக்க வைக்கிறது. அண்ணாவின் ஆளுமையை முதல் சந்திப்பிலே உணர்ந்து கலைஞர் கருணாநிதி அவர்களின் உற்ற நண்பராக திகழ்ந்து திராவிடத்தின் பால் ஈர்க்கப்பட்டு சுயமரியாதை எனனும் ஆயுத்ததை கையிலேந்தி பல்வேறு பொதுக்கூட்டங்களில் உரையாற்றி தேர்தலில் போட்டியிட்டு தோற்றும் தான் சேர்ந்த கட்சிக்கு எந்தவித எதிர்பார்பின்றி உழைத்தும் அங்கீகாரம் கிடைக்காது மனம் வழுவிழந்து கட்சியினைவிட்டு விலகி வனவாசத்தை முடித்துக்கொண்டார். வனவாசம் பெரும்பாலும் கட்சியின் வரலாற்று புத்தகமாக திகழ்கிறது. சில அத்தியாயங்களைத் தவிர பல அத்தியாயங்கள் கட்சியைச்சுற்றியும் கட்சியின் தலைவர்களைச் சுற்றியே அமைந்துள்ளது .தான் சேர்ந்த கட்சியின் உட்கட்சிப்பூசல் தவறான அனுகுமுறைகளையும் காட்ட தவறாத கவிஞர்,அறிஞர் அண்ணா அவர்களின் ஆளுமையுடன் சேர்த்து அவரின் பலவீனங்களையும் வெளிப்படையாக வெளிப்படுத்தியுள்ளார் கலைஞர் கருணாநிதியின் இன்னோர் முகத்தையும் தோலுரித்துள்ளமை வியக்கத்தக்க வகையிலும் அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது.( அதுவே அரசியலில் முன்னேற வழி) அரசியலின் நுணுக்கங்களை அதன் தனது அனுபவத்தின் வாயிலாக அதாவது எல்லா செயல்களையும் கூட்டாக செய்தும் அதற்கான துன்பங்களையும் தண்டனைகளையும் தான் ஒருவன் மட்டுமே அனுபவித்தது துரோகத்தின் வெளிப்பாடே. .'தான் நல்லவன் உத்தமன்' என்று எங்கும் காட்டிக் கொள்ளவில்லை கிட்டதட்ட அனைத்து தீய பழக்கங்களையும் கற்று, பின் அதிலிருந்து மீண்டு வந்ததாகவே எழுதியுள்ளார். வைதீகனாக பிறந்தும் திராவிடத்தின்பால் ஈர்க்கப்பட்டு கடவுளை நிந்தனை செய்து பின்பு இறுதியில் திராவிட கட்சியையும் திராவிட கொள்கையும் தியாகம் செய்வதாக வனவாசம் முற்றுபெற்றது.இவ்வாறான புத்தகம் வெளிவந்ததே மிகவும் ஆச்சரியமானது. இப்புத்தகத்தின் தாக்கம் சில நாட்களுக்குத் தொடரும் என நம்புகிறேன். மனவாசத்தை நோக்கி பின்பு பயணிக்க ஆர்வமாக உள்ளேன்.

user_11311

★ 4/5
Many of the hidden atrocities by dirty political leaders were exposed by him

user_11310

★ 5/5
An eye opener for someone who is into politics . Kannadasan through his simple - powerful words send us a warning ,how one should and shouldn't live

user_11309

★ 4/5
Inimitable writing style. Terse and honest. Must read for all Kannadasan lovers.

user_11308

★ 4/5
கண்ணதாசனன் கவிஞராக மட்டும் தெரிந்தவர்களுக்கு அவரது அரசியல் வாழ்க்கையைப் பற்றி இந்த புத்தகம் தெரிவிக்கிறது. நமக்கு பரிச்சயமான சில அரசியல் தலைவர்களுடனான கவிஞரின் நட்பு பற்றி பேசுகிறது. அவர் இந்த புத்தகத்தில் சொல்வது போலவே சில கசப்பான உண்மைகளை அப்படியே நிர்வாணமாக புத்தகம் பேசுகிறது. அரசியல் எப்படிப்பட்டது என கற்றுக்கொள்ளலாம்.

user_11307

★ 4/5
காலம் கடந்த காவியம். காலம் எவ்வளவு மாற்றம் கொண்டாலும் மாறாத உண்மையின் தொகுப்பு இந்த நாவல். அரசியலின் எண்ணமும் அபிப்ராயம் கொண்ட அனைவரும் கட்டாயம் படிவெண்டியா நாவல். Every follower of a political party/leader should read this to understand the paradigms of politics and it's chameleon nature.

user_11306

★ 3/5
இந்த book எப்படி வாழனும் என்பதற்கான நூல் அல்ல, எப்படி வாழக்கூடாது என்பதற்கான வழிகாட்டி. இந்த book முழுக்க அவன்-னு mention பண்ணி தன்னை ஒரு மூணாவது ஆளா நிறுத்தி எழுதி இருக்காரு. இதே யுத்தியை வேடிக்கை பார்ப்பவன் புத்தகத்துல ந. முத்துக்குமார் அவர்களும் பயன்படுத்தி இருப்பாரு.இந்த book-ah autobiographyனு சொல்றத விட memoirனு சொல்லலாம். கண்ணதாசன் அவர்கள் அண்ணாதுரையோட பேச்சுல ஈர்க்கப்பட்டு இளம் வயதுல எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாம மனுஷங்களோட குணங்களை பத்தி முழுசா தெரியாம கட்சிக்காக நெறைய உழைச்சு இருக்காரு. ஆனா காட்சிங்கறது வெறும் அண்ணாதுரை மட்டும் இல்லைல. So politics-குள்ள இருந்த politics-அ தெரிஞ்சுக்கிட்டு அது தனக்கு ஒத்து வராதுன்னு புரிஞ்சு வெளிய வர அவருக்கு 10 வருஷம் ஆகி இருக்கு. அதோட அவரோட வனவாசம் முடியுது.

user_11305

★ 5/5
The complete summary and review of the book Vanavasam by Kannadasan https://youtu.be/-gxCxvqv_Jk ________________________ Subscribe: https://www.youtube.com/novelreview Website : https://reviewnovels.wordpress.com/ Novel Review: Tamil's first Book Tube channel. Find summary, information & review of books in Tamil. தமிழின் முதல் Book Tube channel, Novel Review. One of the best booktube in Tamil.

user_11304

★ 3/5
Quite a bold, daring book

user_11303

★ 5/5
தன் வாழ்வில் இவ்வளவு இன்னல்களையும் தாண்டி கவியரசு ஆன பாதையை வலிகளோடு வாசகர்களுக்கு வனவாசம் என்ற புத்தகத்தை வழங்கியிருக்கிறார்

user_11302

★ 5/5
An eye opener✨

user_11301

★ 4/5
This book presents vast details about the initial phase of Dravida Munnetra Kazhagham rather than Kannadasan as a writer. Interesting Indeed!

user_11300

★ 4/5
1st half of Kanndasan's life Ethically he has started saying this is how one should not live. The narrative starts from his school days, early life, upbringing etc till he moves out of the DMK party. He narrates on important stages in his personal life.

user_11299

★ 5/5
An audacious auto-biography of one of my beloved poet "Kannadasan"... It gives vivid display of man's struggle towards path of success along with the political spectrum of Tamil Nadu during 1950-1962... The truthfulness of the tale just impressed me... Looking forward to the sequel "Manavasam"...

user_11298

★ 5/5
வனவாசம்... என்ன சொல்ல..! கவிஞர்(கண்ணதாசன்) 'பிரித்தெடுத்திருக்கிறார்'. அடிபொலி! ஒரு சுயசரிதை இவ்வளவு சுவாரசியமாக படிக்க வைத்துவிட முடியுமா! முடியுமென்றால் அதற்கு 'வனவாசமே' பதில். 1943 முதல் 1961 வரை தன் வாழ்வில் நடந்த, குறிப்பாக தனது அரசியல் வாழ்வில் நடந்த சம்பவங்களை அப்பட்டமாகவும், அதே நேரம் ரசம் குறையாதவாரும் 60க்கும் மேற்பட்ட அத்தியாயங்களாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 'தான் உத்தமர்' என்று கவிஞர் எங்கும் குறிப்பிடவில்லை..கிட்டதட்ட அனைத்து தீய பழக்கங்களகயும் கற்று, பின் அதிலிருந்து மீண்டு வந்ததாகவே எழுதப்பட்டிருக்கிறது. #திமுக (இப்பதிவை எழுதும் போது அறிவாலையத்தை கடக்கிறேன், Ola Cabல்) ஒரு மனிதன் அரசியலில் என்னென்ன செய்யக்கூடாது என்பதற்கு உதாரணம், கவிஞர். என்னென்ன செய்தால் அரசியலில் உச்சாணிக் கொம்பில் நீடித்து நிலைத்து நிற்கலாம் என்பதற்கு உதாரணம், கலைஞர். அதாவது இளம்பிரயாத்தில் என்னென்ன தவறுகள் செய்யமுடியுமோ அவ்வளவையும் கூட்டாக சேர்ந்து செய்து, தவறுகளுக்கான தண்டனைகளை தான் ஒருவன் மட்டுமே ஏற்பது என்பது வஞ்சனையே. அதன் வெளிப்பாடே கவிஞரின் அரசியல் 'வனவாசம்'.முதலில் ஒரு சில அத்தியாயங்களை தவிர மீதி அனைத்தும், திமுக/அண்ணா/கலைஞரே நிரம்பியுள்ளனர். ஆரம்பத்தில் திராவிட கொள்கைகளின் மீது பற்று கொண்டு, கடவுள் நிந்தனை செய்தாலும், பின்னால் மனம் மாறி 'அர்த்தமுள்ள இந்துமதம்' எழுதியதும் கவிஞர்தான். என்னை பொறுத்தவரை, Anti திமுகவினருக்கு அல்வா* இப்புத்தகம். (* - இனிப்பு என்ற காரணத்தை தவிர வேறு எந்த உள்ளர்த்தமும் இல்லை)
Quotes

“தன்பாடு தீரும் வரைக்கும் தான் பண்பாடு.”

“தன்னுடையது என்று கருதும் போது, தலை மயிருக்கும் மரியாதை வந்து விடுகிறது.”

“தன்னுடையது என்று கருதும் போது, தலை மயிருக்கும் மரியாதை வந்து விடுகிறது..”

More Quotes...
Shelves
Biography Nonfiction கண்ணதாசன்-1 Kannadasan book Politics

More like this


வேடிக்கைப் பார்ப்பவன்

தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …

4.06/5 · 500+ ratings

சே குவேரா [Che Guevara]

Author: Marudhan

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கு…

4.06/5 · 500+ ratings

தேசாந்திரி [Desanthiri]

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…

4.06/5 · 500+ ratings

Castes in India: Their Mechanism, Genesis and Development

Castes in India: Their Mechanism, Genesis and Development was a paper read by Dr. Bhimrao Ramji Ambedkar at an anthropological seminar of Dr. Alex…

4.06/5 · 500+ ratings

பிரபாகரன் வாழ்வும் மரணமும் [Prabhakaran Vaazhvum Maranamum]

பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல்…

4.06/5 · 500+ ratings

வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?

இந்நூலின் நோக்கம் அறிவுரை சொல்வதோ, மூடர்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள் என வசைபாடுவதோ அல்ல. பொங்கலைத் தின்று பொங்கியெழு என அறைகூவல் விடுப்பதும் அல்ல. வாசிப்புப் பழக்கம் குற…

4.06/5 · 500+ ratings

நேர் நேர் தேமா

Author: Gobinath

This book is the collection of all the interviews of celebrities done by Gobinath as part of Vijay Tv.

4.06/5 · 500+ ratings

வட்டியும் முதலும் [Vatiyum Muthalum]

பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…

4.06/5 · 500+ ratings

Manavasam

A book from Kannadhasan

4.06/5 · 500+ ratings

இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal

'நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம்…

4.06/5 · 500+ ratings