நந்திபுரத்து நாயகி [Nandhipurathu Nayagi]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நந்திபுரத்து நாயகி [Nandhipurathu Nayagi]

None

3.71/5 · 400+ ratings

கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையும், பார்த்திபேந்திரன் என்கிற பல்லவனையும் கொண்டுவந்து நிறுத்தி, ‘நந்திபுரத்து நாயகி’ என்கின்ற அற்புதமான நவீனத்தை நாவலாக எழுதி உள்ளார் விக்கிரமன் அவர்கள்.

Reviews

user_10222

How to download.. Anybody kindly suggest

user_10221

want to read

user_10220

★ 5/5
This book is the continuation of Ponniyin Selvan. It's awesome. Please give it a try :)

user_10219

★ 5/5
Awesome book

user_10218

★ 4/5
பொன்னியின் செல்வன் காதலிகளின் அடுத்த காதலன் - இந்த புதினம்

user_10217

★ 4/5
Nice Book

user_10216

★ 5/5
The story is pretty much like a prequel to the "Udayar" series that Balakumaran has written. The story traces Raja Raja Cholan aka Arun Mozhi Varman's early days before he was crowned as the king of the cholas. The narration style is excellent and brings the scene of action right in front of your eyes. The characters have been portrayed very well. If you are a fan of historical novel, you should never miss this book - a well researched and well written book. PS: there are totally 3 volumes; you can get an edition that contains all 3 volumes like what I did

user_10215

all books are here so that i can get any books. thanks

user_10214

படிக்க வேண்டும் ஆனால் புத்தக பகுதி வரவில்லை

user_10213

★ 5/5
One of the sequels to Ponniyin Selvan !! Good read... The Birth of Rajendra Chola is written in this novel !!

user_10212

★ 5/5
nice

user_10211

★ 1/5
I did not like this novel as there are so much confusion on the narration. The writer wants to have twist in every page and that made a too much confusion on the thread and that spoiled the plot. There were lags created by the writer intentionally. This is one of the worst novels i had ever read.

user_10210

★ 4/5
Great epic historic novel Ponniyin Selvan is continued by Vikram. It gives a great pleasure to read the names of all the characters like Kundhavai, Arunmozhi, VandhiyathEvan, PazhuvEttaraiyar etc. This gives a feeling that we are reading the same old story. The author has his own style of writing, naturally ! Though he has tried his level best to maintain the same tempo as that in the original story, one cannot expect it to be the same. On the whole it is nice to read.

user_10209

★ 4/5
அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையும், பார்த்திபேந்திரன் என்கிற பல்லவனையும் கொண்டுவந்து நிறுத்தி, ‘நந்திபுரத்து நாயகி’ என்கின்ற அற்புதமான நவீனத்தை நாவலாக எழுதி உள்ளார் விக்கிரமன் அவர்கள்.

user_10208

★ 3/5
நந்திபுரத்து நாயகி - கல்கியின் பொன்னியின் செல்வன் இல்லையென்றால் இந்த புத்தகத்தின் மதிப்பு பூஜ்யம். ஏற்கனவே நந்திபுரத்து நாயகி கருத்துக்களை பார்த்தும் படிக்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துவது கல்கியின் படைப்புகள் தான். ஏறக்குறைய மூன்று அல்லது நான்கு முறை இந்த புத்தகத்தை படிப்பதை இடையில் நிறுத்திவிட்டு வேறு சில படைப்புகளில் கவனம் செலுத்தி ஒருவழியாக முழுமையாக படிக்க முடிந்தது. காரணம் கதையில் ஏற்படும் தொய்வு, ஆயிரம் பக்கங்களுக்கு மேல இருந்தாலும் அதை தொடர்ந்து படிக்க முடியவில்லை. சுருங்கக்கூறின் இந்த படைப்பின் கதையை ஒரு வரியில் சொல்லலாம். கடல்கடந்து சென்ற அருண்மொழி, மீண்டும் தஞ்சை வந்து, அங்குள்ள குழப்பங்களுக்கு தீர்வு கண்டு, இறுதியில் அரசனாக முடிசூட்டிகொள்கிறார். அவ்வளவுதான்.... இதில் பல இடங்களில் முக்கியமாக கதையை விட்டுவிட்டு கற்பனையின் குதிரையை கண்ணாபின்னாமாக ஓடவிட்டு மீண்டும் எப்போ கதைக்கு வருவோம் என்று தோன்ற செய்யும். சில நேரங்களில் இதை படிப்பது ஒரு வரலாற்று தேடலுக்காக மட்டும் என்று எண்ணிக்கொண்டு படித்தால் மட்டும் தான் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்குள் செல்ல முடியும். கருத்துக்கள் சொல்வது எளிது ஆனால் ஒரு படைப்பை உருவாக்காது கடினம் தான். இருந்தாலும் நல்ல படைப்புகளுக்கு மட்டும் தான் வாசகர்களின் மதிப்பு கிடைக்கும். படைப்பின் பின்னடைவுகள் சில : 1. ஆங்காங்கே அளவுக்கு அதிகமான விவரங்கள். அதே போல ஒரே மாதிரியான வர்ணனைகள். இன்பவல்லியை எத்தனை முறைதான் வர்ணிக்க முடியும். பொதுவாக ஒரு கதாபாத்திரத்தின் ஆரம்பத்தில் வாசகர்களுக்கு எளிதில் உருவகப்படுத்த மிகுதியான வர்ணனையும், விளக்கமும் கொடுப்பது வழக்கம். ஆனால் ஒவ்வொரு முறையும் வர்ணிப்பது சலிப்பைத்தான் உண்டாக்கும். 2. இராஜராஜனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு அத்தியாயத்தை வைத்து மூன்று பாகங்கள் எழுத வேண்டும் என்ற எண்ணத்திலே ஆசிரியர் எழுதியிருப்பது பல இடங்களில் உணர முடியும். இராஜராஜனின் முக்கியமான வரலாறான பெரிய கோயில் பற்றி சிறிதளவு கூட எழுதப்படவில்லை. 3. கதையினை நகர்த்தி செல்லும் போது பல இடங்களில் சுவாரசியம் குறைந்து எப்போது அடுத்த சூழலை படிப்போம் என்ற எண்ணம் தோன்றும். ஒரு பாகங்களுக்கு மேல உள்ள புத்தகங்கள் அடுத்தடுத்த பாகங்களுக்கு செல்ல ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் ஆனால் நந்திபுரத்து நாயகி (புத்தகம்) அப்பேற்பட்ட அழகியல்ல. 4. சில காதாபாத்திரங்கள் கற்பனையென்றாலும் அவர்களை வரலாற்றோடு இணைத்து, சில அவிழ்க்கப்படாத முடிச்சுகளை கடைசி வரை வெளிப்படுத்த தவறிவிட்டார். உதாரணம் கலையுள்ளம் கொண்ட அந்த பெரியவர். அவரும் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறிய ஆசிரியர் அவர் யார் என்று இறுதிவரை சொல்லவேயில்லை. அதேபோல ஓவியன் மற்றும் இன்பவல்லி. இவர்கள் மூவரும் இல்லையென்றால் இது ஒரு பாகத்தில் முடிக்கப்பட வேண்டிய படைப்பு. 5. மிகவும் முக்கியமான ஒன்று, படைப்பின் முற்பாதிகளில் கற்பனை வளத்தை விதைத்த ஆசிரியர், இரண்டாம் பக்கத்தின் இறுதியிலிருந்து கடைசி பாகம் முடிவு வரை கதையை வேகமா நகர்த்தியிருக்கிறார். ஒருவேளை இரண்டப் பாகத்திலிருந்து படித்திருந்தால் இந்த புத்தகம் ஓரளவாவது பிடித்திருக்கலாம்.

user_10207

★ 1/5
More details on Aadhitha Karikalar's murder was expected. But to my disappointment, the same facts mentioned in Ponniyin Selvan were reiterated here. Rajaraja Chola's bravery and political tactics should have been potrayed. But, his features and his love for women was mostly covered. The war led by Parthibendran was very shortly explained. More action scenes like war with Pandyas or how Vandhayadhevan defeats the pirates could have been handled making it more interesting. At-least the crowning ceremony for Rajaraja Chola could have been explained in the climax. The only good thing was the love between Kundhavai and Vandhiyathevan. But it covers only some 10 to 20% of the content. People who love nature, art, etc may like this book since it has too much of explanation of the nature, love and art. But on the whole, it lacks in good story plot and has many unwanted characters.

user_10206

★ 5/5
It is a continuous novel of Ponniyin Selvan. Rajaraja chola's story. Such a nice novel. Always my favorite is Vandiyadevan and kunthavi.

user_10205

★ 5/5
I like it

user_10204

★ 2/5
பெயர்: நந்திபுரத்து நாயகி ஆசிரியர்: விக்கிரமன் பக்கங்கள் : 1262 பக்கங்கள்-மூன்று தொகுதிகள். சரித்திர கதாபாத்திரங்கள் : அருள்மொழி வர்மன், வல்லவரயர் வந்தியத்தேவன், குந்தவை, வானதி, சிறிய பழுவேட்டரையர், இளைய பஞ்சவன் மாதேவி, செம்பியன் மாதேவி, மதுராந்தக உத்தம சோழர், பார்த்திபேந்திர பல்லவன், அன்பில் அநிருத்த பிரம்மராயர், ரவிதாஸன், சோமன�� சாம்பவான், பாண்டியன் அமரபுஜங்கன். கற்பனை பாத்திரங்கள்: இன்பவல்லி, சங்கர தேவன், சுமதி, ஆபத்துதவிகள் தலைவி ((நந்தினி)) #கதை நடைபெறு��் இடங்கள் : காஞ்சி, நந்திபுரம் ((பழையாறை)), தஞ்சை, மற்றும் முல்லைத்தீவு ((கற்பனை)) "பொன்னியின் செல்வன் " புதின முடிவுறையில் ஆசிரியர் கல்கி வரலாற்றில் வாழ்ந்து மறைந்த உண்மைக்கதாபாத்திரங்கள் பிற்காலத்தில் என்ன செய்தார்கள் என்பதை ஒரு குறிப்பாக சொல்லியிருப்பார். அதை அடிப்படையாக கொண்டு விக்கிரமன் பொ.செ Sequel போல இந்த புதினத்தை படைத்துள்ளார். அதன்படி சிறுசிறு சம்பவங்களின் தொகுப்பாக இந்த புதினம் அமைந்துள்ளது... அதன்படி... *இளவரசு பட்டம்கட்டப்பட்ட அருள்மொழி வர்மர் தமக்கை குந்தவைப்பிராட்டியின் அறிவுறைப்படி கடல்கடந்த நாடுகளுக்கு கடல்வழிப்பயணம் மேற்கொள்ளுகிறார். மூன்றாண்டுகளில் திரும்புவதாக சொன்னவர் பத்து ஆண்டுகள் கழித்து ஒரு சீன வணிகர் வேடத்தில் காஞ்சிக்குள் நுழைகிறார். பின்னாளில் சோணாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடித்து இராஜராஜ சோழராக மூடிசூட்டி கொள்கிறார். *வல்லவராயர் வந்தியத்தேவர் ஆதித்த கரிகாலனை கொன்ற குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் கைதியாக தஞ்சை பாதாள சிறையில் இருக்கிறார். பின்னர் வல்லவராயர் நிரபராதி, அவர் குற்றவாளியாக்கப்பட்டது பார்த்திபேந்திர பல்லவன் சூழ்ச்சி என தெரிந்துகொண்டு,சிறிய பழுவேட்டரையரே வந்தியத்தேவனை விடுதலை செய்கிறார். வந்தியத்தேவன் குந்தவையை மணந்து கொள்கிறார். சோழநாட்டின் தளபதியாக தொண்டு செய்கிறார். *குந்தவை தனக்கு கிடைக்காத சோகம், வந்தியத்தேவன் மீதான பொறாமை, பாண்டியர்கள் சூழ்ச்சி ஆகியவற்றால் படை திரட்டி காஞ்சிப்பொன்மாளிகையை கைப்பற்றி, பல்லவர்களின் ரிஷபக்கொடியேற்றி பல்லவத்தை மீண்டும் சுதந்திரநாடாக ஆக்க காஞ்சி நோக்கி படையெடுத்த பார்த்திபேநேதிர பல்லவன் சிறிய பழுவேட்டரையின் வேளக்காரப்படையால் கொல்லப்படுகிறான். *இந்தப்போரில் படுகாயமடைந்த சிறிய பழுவேட்டரையரும் தஞ்சை அரண்மனைக்கு எடுத்துவரப்பட்டு சிலநாட்களில் மரணமடைகிறார். அவர் மரணமடையும் தருவாயில், பெரிய பழுவேட்டரையர் மகள் பஞ்சவன்மாதேவி அருள்மொழிவர்மரின் பட்டமகிஷியாய் சோழ அரியணை ஏற வேண்டும் என அருள்மொழி வர்மரிடம் உறுதிபெற்றுக்கொள்கிறார். அதன்படியே அருள்மொழி வர்மர் இராஜராஜ சோழராக பின்னாளில் பதவி ஏற்கும்போது அவருடன் "உலகமாதேவி" என்ற பெயரில் பெரிய பழுவேட்டரையர் மகள் அரியணை ஏறுகிறாள். *சோழ நாட்டு முன்னாள் முதன் மந்திரியான அனிருத்த பிரம்மராயர், ஆதித்த கரிகாலாரின் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் பேருதவி புரிகிறார். *அருள்மொழியின் மனைவியும், கொடும்பாளூர் இளவரசியுமான வானதி தன் மகன் இராஜேந்திர சோழனைப்பெற்றெடுத்த சில நாட்களிலேயே மரணமடைகிறார். *ஆபத்துதவிகள் ரவிதாஸனும் மற்றவர்களும் ஆதித்தகரிகாலன் கொலைக்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டு இராஜராஜரால் மரண தண்டனை அடைகிறார்கள்.மேலும் அவர்கள் மீது தஞ்சை நாணய சாலையிலிருந்து பொன் நாணயங்களை சட்டவிரோதமாக பாண்டிய நாட்டுக்கு கொண்டு சென்ற குற்றமும் சேர்கிறது. *பாண்டியன் அமரபுஜங்கன் தன் தந்தை வீரபாண்டியனை கொன்ற சோழர்களை வெற்றி கொள்ளை ஆனைமலைக்காட்டில் படைதிரட்டுகிறான். அவனுக்கு ஆபத்துதவிகளின் தலைவி ((நந்தினி)) தாயாகவும், தந்தையாகவும் இருந்து பெருதவி புரிகிறாள். *செம்பியன் மாதேவியின் மகனும்-பெரு வயிறு உதித்த தேவர் என பெயர் பெற்ற மதுராந்தக உத்தம சோழர் பதினைந்து வருட நல்லாட்சிக்குப்பிறகு மரணமடைகிறார். அதற்கு பிறகே அருள் மொழி வர்மர் முடிசூடிக்கொள்கிறார். கற்பனையாக... கடல்கடந்து நாடுகளுக்கு செல்லும் இளவரசர் அருள்மொழி முல்லைத்தீவு என்ற இடத்தில் இன்பவல்லி என்ற பெண்ணை சந்தித்து அவளது நாட்டியத்தில் மனதை பறிகொடுக்கிறார்.தன்னை ஒரு இரத்தின வியாபாரி என்று அறிமுகம் செய்துகொள்கிறார். பின்னர் தன் பயணம் முடிந்து தஞ்சை அழைத்துப்போவதாக அவளிடம் உறுதிஅளிக்கிறார். ஆனால் திரும்ப வந்து பார்க்கும்போது தீவே காடற்கொள்ளையரால் பாழ்பட்டு கிடக்கிறது. பின்னர் பல சந்தர்ப்பங்களுக்குப்பின் இன்பவல்லியை சந்திக்கும் அருள்மொழி, தான் எதிர்காலத்தில் கட்டவிருக்கும் பெரியகோவிலின் சிற்பங்களுக்காக நடன அரசியாகி கலையை வளர்க்க கோருகிறார். *குறைகள்: "நந்திபுரத்து நாயகி" என்பது குந்தவை பிராட்டியை குறிக்கிறது..ஆனால் புதினத்தில் குந்தவை பாத்திரத்திற்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லாமல் படைத்திருக்கிறார் ஆசிரியர். பொன்னியின் செல்வனில் ஒரு ஆளுமை மிக்க பாத்திரமாக படைக்கப்பட்டிருந்த "குந்தவை" என்ற வரலாற்று சிறப்புமிக்க பாத்திரம். இந்த புதினத்தில் ஏதோ ஒப்புக்காக எழுதப்பட்டுள்ளது.இது போன்றே வந்தியத்தேவன் பாத்திரமும் வீணடிக்கப்பட்டுள்ளது. இப்புதினம் மூன்று பாகங்களை கொண்டது. இரண்டாவது பாகத்திலேயே அதாவது பாண்டிய ஆபத்துதவிகள் தண்டிக்கப்படும் கட்டததிலேயே புதினத்தை முடித்திருக்கலாம்..மூன்றாவது பாகம் சரியான இழுவை. "இன்பவல்லி" என்ற கற்பனை பாத்திரம் இந்த புதினத்தின் கதைப்போக்குடன் ஒட்டாமல் தனியாக தெரிகிறது. பொ.செல்வனில் ஆழ்வார்க்கடியான், மணிமேகலை, பூங்குழலி, நந்தினி என்ற கற்பனை பாத்திரங்களை, அருமையாக புதினத்தின் நிஜ பாத்திரங்களோடு இணைத்திருப்பார் கல்கி..இதில் அந்த அற்புதம் கண்டிப்பாக மிஸ்ஸிங். இந்தப்புதினத்தில் ஆனைமலை காட்டில் நாடிழந்த பாண்டியன் அமரபுஜங்கன் படைதிரட்டுவதாகவும், சோழர்கள் மீது எந்த நேரத்திலும் தாக்கலாம் என ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் புதினத்தின் பிற்பகுதிகளில் இந்த விஷயத்தை தொடாமலே விட்டுவிடுகிறார் ஆசிரியர். **முரண்கள்.. *பொன்னியின் செல்வன் புதினத்தில் சிறிய பழுவேட்டரையர் மகள் பாண்டிய இளவரசனை மணந்து கொள்வதாக சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இங்கே மதுராந்தக உத்தம சோழரின் பட்டமகிஷியாக சொல்லப்பட்டுள்ளது..எது உண்மை? *அருண்மொழி வர்மர் இராஜராஜ சோழராக முடிசூட்டிக்கொண்ட சில காலத்திற்கு பின் தன் அண்ணன் ஆதித்த கரிகாலனை கொன்ற ரவிதாஸன், பரமேச்வரன், சோமன் சாமபவான் ஆகிய பாண்டிய ஆபத்துதவிகள், மற்றும் அவர்களைச்சேர்ந்த சொந்தபந்தங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து நாடுகடத்த உத்தரவிட்டதாக உடையார்குடி கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. ஆனால் இப்புதினத்தில் அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. *தன் லட்சியமான தஞ்சை பெரிய கோவிலை, அருள்மொழி வர்மர், ஈழப்போரின் போது, இலங்கை அநுராதபுரத்தில், ஒரு பிரம்மாண்டமான புத்த விகாரையையும்-அதிலுள்ள புத்தர் சிலையையும் பார்த்து அதுபோன்றே தமிழகத்தில் சிவபெருமானுக்கு தஞ்சையில் ஒரு கற்றளி எழுப்புவதாக சங்கல்பம் எடுத்துக்கொள்வார். ஆனால் இப்புதினத்தில் பெரியகோவிலை தன் காதலின் சிகரமாக கட்டுவதாக சொல்லப்பட்டிருப்பது அபத்தமானதாயும், நகைப்புக்குறியதாயும் உள்ளது. முடிவாக... பொன்னியின் செல்வன் உயரம் தொடமுடியவில்லை...!!! இரு பாகங்களில் முடித்திருக்கலாம். எனது மதிப்பீடு :2 // 5.

user_10203

★ 3/5
கிருஷ்ணகுமார் அவர்களது விமர்சனம் தராசு முனையில் எழுதப்பட்ட ஒன்றே என்று கருதுகிறேன். கதை அமரகாவியமான ‘பொன்னியின் செல்வனின்’ தொடர்ச்சி. இளையபிராட்டி குந்தவ்வை தேவி - கதையின் நாயகி. தனது சொந்த வாழ்விலும், சோழநாட்டிலும் ஏற்படும் இன்னல்களை வல்லவரையரின் இல்லக் இழத்தி என்னனம் கையாள்கிறாள் என்பதுதான் கதையின் மையப் புள்ளி. முதல் இரண்டு பாகங்கள் வேகமாக நகர்ந்தன. இறுதிப்பாகம் ஒரே இழுவை. ‘ காளாமுகன்’ என்று சிவனடியாராக மாறுவேடமணிந்த சோழ நாட்டின் முதலமைச்சர் அன்பில் அநிருத்த பிரும்மராயர் எதைச் சாதித்தார் என்பது பெரிய கேள்வி. வில்லன் ரவிதாஸன் படைப்பில் உள்ள பயங்கரத்தை வார்த்தைகளிலே விவரித்து விட்டு அவன் ஈடுபடும் காரியங்களால் வாசகர்கள் அச்சமுறவில்லை என்பது ஆசிரியருக்கு மிகப் பெரிய வழுக்கல். இறுதிப் பக்கங்களில் இன்பவல்லியின் ஏக்கங்களை அளவுக்கு அதிகமாக விவரித்திருப்பதால் நாம் பெருமூச்சு விட்டுக் கொண்டே பக்கங்களை நகர்த்துகிறோம். அமரபுஜங்க பாண்டியன் தனியே சேர மன்னனைக் கண்டு சோழ நாட்டை எதிர்க்க உதவி கோருகிறான். சேரமன்னரின் புதல்விக்கும் அமரபுஜங்கனுக்கும் காதல் மலர்கிறது. அமரபுஜங்கனின் தந்தை பாண்டிய மன்னரின் தலையை சோழ இளவல் ஆதித்த கரிகாலன், நிராயுதபாணியாக இருக்கும் நிலையில் பாண்டிய மன்னனின் மனைவி உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடியும் கொல்கிறான். அமரபுஜங்கனை (இறந்த பாண்டிய மன்னரின் மகன்) சோழ நாட்டைப் பழி வாங்க வேண்டும் என்கிற வெறியோடு நந்தினி எனும் பெண் சிறு வயதிலிருந்தே வளர்க்கிறாள். இந்தப் பழி வாங்கும் படலம் கதையில் விவரிக்கப்படவில்லை. அமரபுஜங்கனின் கிளைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருப்பதால் பழிவாங்கும் படலம் விவரிக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது வாசகர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. நந்தினியும் யாரென்பது தெளிவாக்கப்படவில்லை. இதற்கு முன்னோடியான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அமரகாவியமாக இன்றும், எப்பொழுதும் திகழும் என்பதுதான் ‘நந்திபுரத்து நாயகி’ நமக்கு அளிக்கும் செய்தி!

user_10202

★ 2/5
"வானதிதேவி மூர்ச்சையடைந்து விட்டார்" செய்தி கேட்ட அருள்மொழி, இன்பவல்லியின் அழகுக்கும், பஞ்சவன் மாதேவியின் அழகுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை எண்ணலானார் - என்ன சொல்ல வருகிறார்? அருள்மொழி, குந்தவை, வந்திய தேவன் - இந்த மூன்று பெயர்கள் மட்டும் இல்லையென்றால் இப்புதினம் படிப்பதை பாதியிலே நிறுத்தியிருப்பேன். கல்கியின் இம்மூன்று கதாபாத்திரங்களுக்கும், இந்நாவல் ஆசிரியரின் இம்மூன்று கதாபாத்திரங்களுக்கும் ஒரே ஒற்றுமை பெயர் மட்டும் தான். கல்கியின் அழகிய கதாபாத்திரங்களை இன்னும் யார் யாரெல்லாம் நாசமாக்க போகிறார்களோ!

user_10201

★ 3/5
தமிழில் உள்ள பெரும்பாலான சரித்திர நாவலாசிரியர்களிடம் ஏதாவது ஒரு வகையில் கல்கி மற்றும் அவருடைய 'பொன்னியின் செல்வனின்' பாதிப்பு இருக்கும். அந்த மகா உன்னதமான நாவலில் வேண்டுமென்றே பல ரகசியங்களை வெளிப்படுத்தாமல் முடித்திருப்பார் கல்கி. இதன் காரணமாக சில ஆசிரியர்கள் அந்த நாவலின் தொடர்ச்சியை தனி நாவலாக எழுதியுள்ளனர். இந்த நாவலும் அந்த வகையைச் சேர்ந்தது. பொன்னியின் செல்வனின் தொடர்ச்சிதான் 'நந்திபுரத்து நாயகி'. இந்த ஆசிரியர் கவிஞரும் கூட. அதனால் கதையின் பல பகுதிகள் கவிதை நடையில் உள்ளன. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் கவிதை நடையும் அனாவசிய உவமை நடையும் கதையின் வேகத்தைத் தடைப்படுத்துகின்றன. இந்த கதையை இன்னும் சுருங்கச் சொல்லியிருக்கலாம் என்பது எனது கருத்து. பல பக்கங்களை ஆசிரியர் வீணடித்து விட்டார். இவ்வளவு நீண்ட கதை எழுத பல மாதங்களோ சில வருடங்களோ கண்டிப்பாக ஆகியிருக்கும். அதனால் தானோ என்னவோ கதையின் நடையில் போக்கு சீராக அமையவில்லை. சுமாராக தொடங்கும் நாவல் விறுவிறுப்பாக மாறி மீண்டும் சுமாராகப் பயணித்து சப்பென முடிகிறது. அதுவும் முதல் 70-80 பக்கங்களில் கதையை கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் மூலம் தெரியப்படுத்துவது கதையின் பலவீனம். கதையில் பல பாத்திரங்கள். வாசகர்கள் குழம்பினால் தவறில்லை; ஆனால் கதாசிரியரே பாத்திரங்களின் உறவு முறைகளில் குழம்பிவிடுகிரார். மதுராந்தக சோழனுடைய மகனான் மதுரன் அக்காள் முறையான குந்தவையை அத்தை என்று விளிக்கிறான். தன்னுடைய சிற்றன்னையின் தங்கையை காதலிக்கிறான். ஆசிரியர் ஏன் இப்படி கோட்டைவிடுகிறார்? நமது நாட்டுக்கு யாரால் இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டது? எப்போது? இந்த கதைப்படி சோழர்கள் காலத்திலேயே 'வட இந்தியா' என்று குறிப்பிட்டார்களாம். சரியான பிதற்றல். பொன்னியின் செல்வன் படிக்காதவர்களுக்கு ஒரு முன்னுரையாவது வரைந்து விட்டு இக்கதையை ஆசிரியர் ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த நாவலைப் படிக்காமால் இதைப் படித்தால் சில கதா பாத்திரங்கள் மற்றும் வசனங்கள் புரிய வாய்ப்பில்லை. யார் நந்திபுரத்து நாயகி? இக்கதைப்படி குந்தவை. அவளா கதாநாயகி? இல்லை - இன்பவல்லி என்ற கற்பனைப் பாத்திரம். பின் ஏன் இந்தத் தலைப்பு? ஆசிரியருக்கே வெளிச்சம். போதாத குறைக்கு தலைப்புக்கு நியாயம் சேர்க்கவோ என்னவோ, பழையாறையை நந்திபுரம் என்ற பெயரில் பலர் தேவையின்றி குறிப்பிடுகின்றனர். அனாவசியமாக சில சம்பவங்கள் அந்த நகரில் நடக்குமாறு ஆசிரியர் பார்த்துக் கொள்கிறார். பல சம்பவங்கள் நம்ப முடியாதவை. அநிருத்த பிரம்மராயரின் மாறுவேடத்தை பெரிய மர்மம் போல கடைசி வரை கொண்டு செல்வதும் அதை வாசகர்கள் யாரும் பிரம்மராயர் என்று ஊகித்திருக்கமாட்டார்கள் என்று ஆசிரியர் நம்புவது பெரிய நகைச்சுவை. மேலும், ஆசிரியர் தாம் எடுத்துக் கொண்ட சில விஷயங்களை அப்படியே அம்போ என்று விட்டு விடுகிறார். யாரந்த கலைப்பித்து பிடித்து அலையும் கிழவர்? வாசகர்கள் சுலபமாக ஊகித்திருப்பர். ஆனால் ஆசிரியர் கடமை தான் உருவாக்கிய மர்மத்தை கடைசியிலாவது உடைப்பது இல்லையா? நந்தினி கதாபாத்திரமும் அவளுடைய வளர்ப்பு மகன் பாண்டியன், அவனுடைய காதலி சேர மன்னன் மகள் போன்ற பல கதாபாத்திரங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு காரணமின்றி காணாமல் போய் விடுகின்றன. மொத்தத்தில் நல்ல தமிழ் தெரிந்த ஆனால் கதையை சரியாகக் கையாளத் தெரியாத ஆசிரியரால் படைக்கப்பட்ட கதை இது.
Shelves
Historical Fiction Historical Classics விக்கிரமன் Novels book

More like this


சங்குத் தேவனின் புனர் ஜென்மம் (old book rare)

உங்களுக்கு வேண்டுவது என் -என்ன– ஏதேனும் பிரதி பந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி-எங்கள் துக்கம் எல்லாம் கெட-விஷயீ கரிக்க வேணும் – என்கிறார்கள்-இப்பாட்டில் – கீழ்ப் பாட்டில் -ஏ…

3.71/5 · 400+ ratings

குலோத்துங்கன் சபதம் [Kulothungan Sabatham]

விஜயாலய சோழமன்னர் தொடங்கி வைத்த சோழர்கள் பரம்பரையைக் கட்டிக்காத்த இராஜராஜன் புதல்வர்கள் ஆட்சிக்கு ஒரு சமயம் பெரும் ஆபத்து ஏற்பட்டது. சோழர்கள் பரம்பரைக்கே முடிவு ஏற்பட்டுவிடும…

3.71/5 · 400+ ratings

யவன ராணி [Yavana Rani] - 1

Yavana Rani (Tamil:யவன ராணி) is a Tamil language historical novel written by Sandilyan. Its title translates to "Greek Queen" in English. The stor…

3.71/5 · 400+ ratings

கோவூர்கூனன்

No description added

3.71/5 · 400+ ratings

தியாக வல்லபன்

No description added

3.71/5 · 400+ ratings

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

3.71/5 · 400+ ratings

அறம் [Aram]

Author: Jeyamohan

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

3.71/5 · 400+ ratings

கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam]

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

3.71/5 · 400+ ratings

Kallikaattu Ithigaasam

Author: Vairamuthu

Kallikkattu Edhihasam (the epic of Kallikkadu, in literal translation) is one of his novels. It tells the agonising tale of a marginal farmer of a…

3.71/5 · 400+ ratings