An ordinary read with predictable twists.
Kindle version is unfinished
The kindle version is not a complete book. Ends abruptly. Publisher needs to fix this issue. For reference, it ends at
Psychological thriller novel.the story continues its momentum throughout start to end.climax twist awesome.must read for those who loved crime thriller novels.
For Amazon Kindle
The end is missing. Very disappointed that Amazon Kindle doesn't verify these things. The most important part is missing. It's the company's responsibility.
Sujatha was a genius author as this book, the elements that would make you wonder how could someone like him was so underrated. He could have easily been a celebrated author at international level.
Very immature crime story. Didn't expected this from sujatha
எனக்கு தெரிந்து, சுஜாதா என்று கதையில் வருவது இதில் மட்டும் தான். கணேஷ் வசந்த் கலக்கும் இன்னொரு நாவல்.
கணேஷ் வசந்த் கதையின் முதல் அத்தியாயத்தில் இருந்தே வருகின்றனர். வேறென்ன வேண்டும் நமக்கு. வழக்கமான வாத்தியாரின் திரில்லர்.. இன்பா நெஞ்சில் பதியும் கதாபாத்திரம். இந்த கதைக்கு பின் கணேஷ் சிங்கள் இல்லை என்றே தோன்றுகிறது!
Gripping thriller which will not allow you to stop thinking without completing the book is bread and butter for sujatha sir. Where this stories is different is not in the story but the travel that makes it go towards climax. I would not say climax was shocking, but it has some twist though. The title of the story is something that will confuse you while guessing the killer. Unusual though there were some logical misses in this book but even with those the book is one of the best thrillers that sujatha sir has written.
Go for it you will like it a lot. Sujatha fans must read. Ganesh vasanth fans again a must read as they travel through out the book.
இதன் பெயரும் கொலை
சுஜாதா
1999 ல்
குமுதம் வார இதழில் தொடராக வந்த நாவல். டிவியில் சுகாசினி இயக்கத்தில் தொடராகவும் வந்தது.
கதைச்சுருக்கம்:
ப்ரேர்ணா ஒரு டிவி நடிகை; மாடலிங்கும் பண்ணுவாள். அவளது கணவன் சந்தர் ஒரு சந்தேகப் பிராணி. அவர்கள் திருமண வாழ்க்கை ஒழுங்காக அமையவில்லை. சந்தர் தற்கொலை செய்து கொள்கிறான். ப்ரேர்ணாவுக்கு கொலை மிரட்டல் வருகிறது. ப்ரேர்ணா பிரபல வக்கீல்கள் கணேஷ், வசந்தை நாடுகிறாள். மேலும் இரு கொலைகள் (திருமணமான பெண்கள்) நடக்கின்றன. கணேஷ், வசந்த், இன்ஸ்பெக்டர் இன்பாவுடன் சேர்ந்து கொலையாளியைக் கண்டு பிடிக்கிறார்கள். இன்பாவுக்கும், கணேஷுக்கும் காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிகிறது.
விறுவிறுப்பான நாவல்.
சற்று சுஜாதாவின் வர்ணனைகளை சுவைப்போமே!
"... கடற்காற்று கருணை காட்டத் தொடங்கியிருந்தது. வாட்டர் கலர் சித்திரம் போல வெண்மணல் பரப்பும், ஆழ்நீல வானத்தில் ஒரு சிர்ரஸ் மேகத் தீற்றலும், பரதேசம் போகும் ஒரு ஜெட் வாலும் கடற்பறவையின் குரலும் - அமைதியும் நிலவியிருந்தது.
சந்தரோட தற்கொலை, ப்ரேர்ணாவுடைய வினோதமான டீக்கடை நடவடிக்கை, பாபுவின் கொலை, சாலையில் செல்லப்பான்னு ஒருத்தன் என்னை (வஸந்த்) வந்து சந்திச்சு எல்லாரையும் கொல்லம்ணு சொல்லிட்டு சாக்லேட் கொடுக்கறது, அப்புறம் பேஜர்ல, செல்போன்ல, ஈமெய்ல்ல பயமுறுத்தல், பரம சாது ராஜி மாமி இப்படி படையப்பா நீலாம்பரி மாதிரி ஆறது!
டாக்டரின் அறையில் வெளிச்சம் பரவியிருந்தது. வெளிப்புறம் சென்னை இயங்குவதை ஆடியோ இல்லாமல் கவனிக்க முடிந்தது. லேசான சங்கீதத்தில் ஒலித்த நளின காந்தியை நிறுத்திவிட்டு, ஒரு பென்சிலை எடுத்து விரல்களில் புரட்டிக் கொண்டு டாக்டர் விஜய், நடிகையை உற்றுப் பார்த்தார்.
உங்க கணவர் எதற்காகத் தற்கொலை பண்ணிக்கிட்டார்?
எம்மேல ஏற்பட்ட சந்தேகத்தை அவரால சமாளிக்க முடியல. எப்பப் பார்த்தாலும் சந்தேகம்.
அபிராமபுரம் ஒரு கொலை;
போலீஸ் நிதானமாக அந்த அறையில் தடயங்கள் தேடிக் கொண்டிருந்தனர். கைரேகைக்காக ஜன்னல் கண்ணாடிகளிலும், மேஜை விளிம்பிலும், பீங்கான்களிலும் பவுடர் அடித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது ஃப்ளாஷ் பளிச்சிட்டது. வாசலில் நாய் குரைத்தது. படியேறி வந்து அடர்த்தியான வாலை மெல்ல ஆட்டிக்கொண்டு அங்குமிங்கும் அந்த ஜெர்மன் ஷெப்பர்ட் முகர்ந்து பார்த்தது.
கொலையுண்ட பெண்ணின் கணவன் பெயர் ஆர். சத்யன். இடம்: அபிராமபுரத்தில் ஒரு அபார்ட்மெண்ட்.
அடுத்து
கிரீன்வேஸ் ரோடில் ஒரு கொலை.
கொலையுண்டவர் ஒரு பெண் - பெயர் - மேனகா மாதவராவ் - கிரீன்வேஸ் ரோடில் ஒரு ஹெல்த் கிளினிக் நடத்திக்கிட்டிருந்தாங்க.
டாக்டர் ஜேம்ஸ் வினோதன்
உள்ளே சென்றதும் டாக்டர் வினோதன் எழுந்து வந்து கை குலுக்கினார். முப்பந்தைந்து வயது இருக்கும். மேஜை மேல் இருந்த ஸ்டெத்தும், ரப்பர் தலை ஆயுதமும்தான் டாக்டர் என்று அடையாளம் காட்டின. மற்றபடி எம். பி. ஏ. படித்த ஒரு எச். ஆர். டி. மேனேஜர் போல இருந்தார். விரல்களிலும், மூக்குக் கண்ணாடி விளிம்பிலும் தங்கம். துளைக்கும் பார்வை. மௌனமாக ஏஸி ஓடிக்கொண்டிருக்க, ஒரே ஒரு சாமி படம். தலையைச் சாய்த்துக் கொண்டிருந்த ஏசுநாதர் கரத்திலிருந்து ஒளி வெள்ளம் புறப்பட்டுக் கொண்டிருந்தது.
செல்லப்பா - நீள முடி, பெண்மை கலந்த முகம், காதில் கடுக்கன், அழுக்கு கலந்த ஜீன்ஸ் பேண்ட் போட்டுகிட்டு போன வாரம் குளிச்ச மூஞ்சி. கைவிரல் பூச்சு. எக்ஸன்டிரிக்...... "
☸️☸️☸️☸️☸️
A fine mystery with an ending you don't see coming - well you sense something but aren't really sure. Written closer to the end of the millennium this has Ganesh and Vasanth using the computer for some things. Even without Google, they do a fine job of investigating and following some hunches.
கதை ஆரம்பத்தில் டி.வி ஸ்டார் ப்ரேரணா சந்தர் தன் கணவன் தூக்கில் தொங்க முயற்சிப்பதாக சொல்லி படபடப்புடன் கணேஷ் வசந்தை அழைக்கிறாள். சந்தேகப்பிராணியான அவள் கணவனின் மறைவு அவளுக்கு ஒருவித ஆசுவாசத்தை தருகிறது. ஆனால் அதற்குள் அவளுக்கு மட்டுமல்லாமல் அவளுக்கு உதவும் வசந்த்துக்கும், ப்ரேரணாவை கைது செய்ய வரும் இன்ஸ்பெக்டர் இன்பானந்திக்கும் கொலை மிரட்டல்கள். போதாக்குறைக்கு கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண்கள் மூவர் அடுத்தடுத்து கொல்லப்பட, killer on the loose என்னும் பதற்றமான சூழல் உருவாகிறது. கடைசியில் இன்பாவின் தங்கை பிணைக் கைதியாக கடத்தப்பட, கடைசியில் ஒரு பதற்றமான என்கவுண்டரில் அந்த கொலையாளி செல்லப்பா கைது செய்யப்படுகிறான்.கணேஷ் இதில் இன்ஸ்பெக்டர் இன்பானந்தியை காதலிக்கிறான் . கணேஷ் - வசந்த் comboவின் 25ஆவது நாவல் என்பதால் கணேஷிற்க்கு ஜோடி சேர்த்து விடுகிறார் சுஜாதா !
கதையில் பல இடங்களில் ஒருவித dejavu (முன்னமே கேட்ட / பார்த்த) effect. கொஞ்சம் சினிமாத்தனமான என்கவுண்டர் கிளைமேக்ஸ். கொலைகாரன் கண்டுபிடித்த பிறகும் வளரும் கதை.
This is the 25th book of Ganesh Vasant series. the plot starts with a suicide and thickens into multiple homicides. as usual our lawyer Ganesh and his junior Vasant steps in to solve the crime. this is one of those stories where Ganesh Vasant are featured from the first chapter to the last.
I'm intrigued by the author's character development how he changes his characters appearance and interests without changing their attitude, with more serious and focused ganesh and witty womanizer vasant.
this is thriller with nail-biting pace, I finished it in a single strecht, I am literally typing this review at 12.15 am, that how much exicted I am about this book.
1 guaranty u that this book won't disappoint you. I would recommend this book for people over 15, it's a very fun, gripping thriller with few lol moments, and an unthinkable twist at the end.
கணேஷ்-வசந்த் தோன்றினாலும் கதையில் கொஞ்சம் சுவாரசியம் குறைந்தது போல் ஒரு உணர்வு.கொலையாளி யார் என்று இறுதியில் தான் தெரிந்தாலும் கொலையாளியை ஊகிப்பது அவ்வளவு கடினமாக இல்லை.வசந்தின் காமெடிகளும் அவ்வளவு ரசிக்க வைக்கவில்லை என்றாலும் கதை தொய்வின்றி விறுவிறுப்பாக செல்கின்றது.நேரமிருந்தால் ஜாலியாக ஒருமுறை வாசிக்கலாம்