Reviews for ஒரு கடலோர கிராமத்தின் கதை

19 reviews total

user_9231

★ 4/5 Feb 02, 2026

மூடநம்பிக்கைகள் அதிகமாக இருந்த காலகட்டத்தில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசித்த ஒரு கடலோர கிராமத்தில் அதிகாரப் பலம் உள்ள மனிதர் வடக்கு வீட்டு அகமதுக்கண்ணு முதலாளி. தன் கட்டளைக்கு ஊர் கட்டுப்படுவதை நினைத்து மகிழ்ந்திருக்க, ஊரில் மஹ்மூத் இவரை எதிர்த்துப் பேசுகிறார், இவரின் செயல்களை எதிர்க்கிறார்.

அறியாமையின் இருள் அகலக் கல்வி வேண்டும் என்ற நம்பிக்கையில் மஹ்மூத் தனது நிலத்தை அரசுப் பள்ளிக்கூடம் அமைக்கத் தானமாகத் தருகிறார். இந்நிகழ்வு முதலாளிக்கு பழிவாங்கும் எண்ணத்தை விதைக்கிறது. அதிகாரப் பலத்தின் அழிவே ஒரு கடலோர கிராமத்தின் கதை.

user_9230

★ 5/5 Feb 02, 2026

எங்கிருந்து தொடங்குவது? ஆற்றங்கரையிலிருந்தே துவங்கலாம். அதுதானே எல்லாவற்றையும் பார்த்து எந்தக் கவலையுமின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. சிறுவர்களின் விளையாட்டினை, மதரஸாவை கட் அடித்துவிட்டு மீன் பிடிக்கும் அழகியலை, மொஹல்லாதீவு தங்களிடம் ஏமாற வந்து கொண்டிருக்கும் கூட்டத்தினை — அந்த ஆறு எல்லாவற்றையும் பார்த்திருக்கிறது.

ஏன் பரீது சிலோனுக்குப் போக வேண்டும்? ஏன் ஆயிஷா ஆற்றின் பாறை மேல் நள்ளிரவில் நிற்க வேண்டும்? அவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களோடு வாழக்கூட இலக்கியங்களால் இடம் தர முடியாதா?

இந்நாவலின் ஒவ்வொரு பாகத் தொடக்கத்திலும் இயற்கை குறித்த வர்ணனை அழகியலின் உச்சம் எனலாம். "குளிர்ந்த இரவு, குளிர்ந்த காற்று, பிந்தி உதித்த சந்திரன், தென்னை ஓலைகளினூடே உதிர்ந்த வெள்ளி நாணயங்கள் விழுந்து கிடக்கும் முற்றம்."

இந்நாவலை வாசித்த பின் எத்தனையோ கதாபாத்திரங்கள் வந்து சென்றாலும், இறுதியாக ஆயிஷாவும் பரீதும்தான் நினைவில் நீங்காமல் இருக்கிறார்கள். ஒருவேளை பரீது சிலோனிலிருந்து வந்தபின்பு நிச்சயம் ஆயிஷா இருக்கமாட்டாள்! கிருக்குப்பய பரீது அப்பொழுதும் இதைத்தான் சொல்வான் — "நீ போனா என்ன நான் உன் நினைப்புலேயே வாழ்ந்துருவேன்".

user_9229

★ 5/5 Feb 02, 2026

இந்நூலின் விமர்சனத்தை காணொளியாகப் பதிவு செய்துள்ளேன். கடலோர இஸ்லாமிய கிராமத்தின் வாழ்வியலை அழகாகப் படம்பிடிக்கும் இந்நாவல் கண்டிப்பாக வாசிக்க வேண்டியது.

user_9228

★ 5/5 Feb 02, 2026

எதிர்பாராத ஆச்சரியம். நாகர்கோயில் முஸ்லிம் வட்டார நடை. முதலாளியின் வறட்டு கௌரவம், தனிமனித சுயசிந்தனை, ஒரே கேள்வியில் புத்திசாலி ஆகத்துடிக்கும் மக்கள், மூடநம்பிக்கையுடன் மந்தப்படுத்தப்பட்ட சிற்றூர் நிலை, கல்விப் புறக்கணிப்பு — எல்லாமே மிகவும் வித்தியாசமாகக் கையாளப்பட்டுள்ளது!

user_9227

★ 5/5 Feb 02, 2026

தமிழ் இஸ்லாமிய வாழ்க்கை, குறிப்பாக தெற்கில் உள்ள தேங்காய் பட்டிணம் என்ற கிராமம் மற்றும் அதில் வாழும் மக்களைப் பற்றிய மிக முக்கியமான நாவல். கதையில் வரும் வட்டார வழக்குகளுக்கு தனியாக அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

user_9226

★ 4/5 Feb 02, 2026

சுதந்திரத்துக்கு முந்தைய ஒரு கடலோர கிராமத்தின் வழியாக அக்கால இஸ்லாமிய சமூகத்தின் பதிவாகவே இந்நாவலைக் கருத நேர்கிறது. வெகு சில புத்தகங்களே வாசிக்கும் பொழுது மன சஞ்சலங்களுக்கு இடமளிக்காமல் ஒரு நிறைவைத் தரும். அது இந்நாவல் மூலமாகவும் உங்களுக்குக் கிடைக்கலாம்.

user_9225

★ 4/5 Feb 02, 2026

வடக்குவீட்டு அகமதுக்கண்ணு முதலாளி எனும் அதிகாரத்தின் வீழ்ச்சியினூடாக தீவிர மத நம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கைகளால் நிறைந்த ஒரு இனக்குழுவின் சமூக மாற்றத்தை சொல்லக்கூடிய நாவல். Pure reading pleasure தரக்கூடிய நடை.

user_9224

★ 4/5 Feb 02, 2026

ஏமாற்றுபவன் வாழ்வான் ஆனால் அவன் வம்சம் வாழாது என்ற நீதியை நினைவுபடுத்தும் கதை இது. கடலோர இஸ்லாமிய கிராமம் தேங்காய்பட்டினத்தில் வாழும் வடக்கு வீட்டு முதலாளி அகமது கண்ணு, அவரது அதிகார வெறியால் செய்யும் செயல்கள், பின்பு அவரது வீழ்ச்சி — இவையே இந்த நாவல்.

இந்தப் புத்தகம் தனித்துவம் பெறுவது தீவிர மத நம்பிக்கை எவ்வாறு மூடநம்பிக்கைகளை, துன்பத்தை, ஏமாற்றத்தை, கொடுமைகளை உருவாக்குகிறது என்பதை கதையினுள் காட்டும் விதம். மதங்களின் பேரால் நடக்கும் கொடுமைகளை எதிர்க்க தைரியமும் தெளிவும் வழி என்பதை மகமது என்ற கதாபாத்திரம் மூலமும், மூடநம்பிக்கை, அடிமைத்தனத்திலிருந்து மீள கல்வியே சிறந்த வழி என்பதை மொய்தீன் என்ற பாத்திரம் மூலமும் விளக்குகிறார்.

முதலாளியின் அதிகாரத் திமிரில் தொடங்கி அவரது மகளின் தற்கொலையில் முடியும் இந்த அருமையான சாகித்ய விருது வென்ற நாவல் இஸ்லாமிய வட்டார வழக்கில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் கடினமானதாக இல்லை.

user_9223

★ 4/5 Feb 02, 2026

நாவல் பற்றிய சுருக்கமான அறிமுகம், மீரான் அவர்களின் புனைவு உலகம், தமிழ் இலக்கியத் தளத்தில் அவரின் முக்கியத்துவம் என மனதில் பட்டதைப் பேசியிருக்கிறேன்.