Reviews for ஒரு கடலோர கிராமத்தின் கதை

19 reviews total

user_9241

★ 4/5 Feb 02, 2026

முழுமையான வாசிப்பு அனுபவம். கடலோர கிராமத்தின் ஒவ்வொரு மூலையையும் நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் நாவல்.

user_9240

★ 5/5 Feb 02, 2026

மிகவும் அற்புதமான ஒரு படைப்பு. தோப்பில் முஹம்மது மீரானின் எழுத்துத் திறன் இந்நாவலில் முழுமையாகப் பிரதிபலிக்கிறது.

user_9239

★ 4/5 Feb 02, 2026

வாசிக்கத் தகுந்த நாவல். கடலோர கிராமத்தின் வாழ்வியலை நேரடியாக அனுபவிக்கும் வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.

user_9238

★ 5/5 Feb 02, 2026

சிறப்பான வாசிப்பு அனுபவம். இந்த எழுத்தாளரின் மற்றொரு அற்புதமான படைப்பு.

user_9237

★ 5/5 Feb 02, 2026

மிக அருமையான கதை. முஸ்லிம்களின் வாழ்க்கைச் சித்திரத்தை அருமையாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

user_9236

★ 3/5 Feb 02, 2026

என்னவோ தெரியவில்லை, இக்கதையை நெருக்கமாக உணர முடியவில்லை. ஒருவேளை புத்தகத்தில் படிக்காமல் போனதாலோ என்னவோ. சில நேரம் அந்த ஊரை மனதில் நன்றாக உணர முடிகிற அளவிற்கு அமைந்த வட்டார மொழியோடு கூடிய சொல்நடை அருமை. ஆனால் மற்றவர்களுக்கு நிச்சயம் பிடிக்க வாய்ப்புண்டு. படியுங்கள்.

user_9235

★ 5/5 Feb 02, 2026

எளிய மக்களின் முதுகில் வரலாறு முழுதும் சுமத்தப்பட்ட ஒடுக்குமுறைக்கு அதன் உருவமாய் நிற்கிறான் ஊர்தலைவர் — அதிகாரத்தின் கம்பியைக் கைப்பிடியாய் எடுத்தவன். அந்த அதிகாரத்தைப் புண்ணாக உணர்ந்து அதனை எதிர்த்து எழ முயலும் இரண்டு ஆன்மாக்கள் — வாழ்க்கைக் கடல் உப்பைத் தாங்கிய மீன் வியாபாரி, அறிவின் ஒளியைச் சுமந்த பள்ளி ஆசிரியர்.

அன்பு எனும் விதையைத் தன்னுள் சுமந்து, அது முளைக்காத மணலிலும் கூட நம்பிக்கையாய் நின்றிருக்கிறாள் ஒரு பெண் — அவளே இக்கதையின் உயிர்.

இந்தக் கதையில் கடலும் சாட்சி, மணலும் சாட்சி — மனிதன் போராட்டமும் வலி, அன்பும் வன்முறையும், அரசியலும் உயிர்வாழ்வும் ஒன்றாகக் கலந்திருக்கின்றன.

user_9234

★ 4/5 Feb 02, 2026

இந்தப் புத்தகம் ஒரு கடலோர கிராமத்தில் அமைதியாக அமர்ந்து வாழ்க்கையை கேட்பது போன்ற உணர்வைத் தருகிறது. பெரிய திருப்பங்களோ நாடகீய நிகழ்வுகளோ இல்லை — சாதாரண மனிதர்கள், அவர்களின் வாழ்க்கைமுறை, போராட்டங்கள், நம்பிக்கைகள், கடலுடனான உறவு — இவைதான் இக்கதையின் மையம். கிராமமே முதன்மைக் கதாபாத்திரம் போல உணர்கிறது.

மீரானின் எழுத்து எளிமையானது, அமைதியானது, யதார்த்தத்தில் ஆழமாக வேரூன்றியது. கடற்காற்றின் மணமும், அலையின் ஓசையும், கரையோர வாழ்க்கையின் மெதுவான தாளமும் உங்களுக்கு உணர முடியும்.

நேர்மையே இதன் சிறப்பு. மிகைப்படுத்தல் இல்லை, ஆடம்பரம் இல்லை. வாழ்க்கை அப்படியே — கடினமானது, நம்பிக்கையானது, நியாயமற்றது, அழகானது. ஆழத்தை விரும்புபவர்களுக்கான புத்தகம்.

user_9233

★ 4/5 Feb 02, 2026

இஸ்லாமிய வாழ்வியலை இலக்கியப்படுத்திய பெருமைமிக்கவர்களில் தோப்பில் முஹம்மது மீரானும் கீரனூர் ஜாகிர் ராஜாவும் எனக்கு விருப்பமானவர்கள். கீரனூர் ஜாகிர் ராஜாவின் துருக்கித் தொப்பி எட்டுக்கல் பதித்த வீட்டின் வீழ்ச்சியைப் பேசுவதைப் போல, மீரானின் இந்நாவலும் வடக்கு வீட்டின் வீழ்ச்சியைப் பேசுகிறது.

வடக்கு வீட்டின் முதலாளி அகமதுக்கண்ணு, ஊரே அவரின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டுக்கிடக்கிறது. கதையில் நமக்கு நம்பிக்கைத் தரும் மனிதர்களாக வருபவர்கள் சுறாப்பீலி விற்கும் மஹ்மது, ஆங்கிலப் பள்ளி ஆசிரியராக வரும் மெஹ்பூப்கான் — இருவரும் சுரண்டப்படும் அச்சமூகம் மாற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார்கள்.

இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல் என இதைக் குறிப்பிடலாம். தமிழ் நாவலுக்கு ஒரு புதிய களத்தையும் புதிய வாழ்க்கை முறையையும் அறிமுகப்படுத்தியது இந்நாவல்.

user_9232

★ 4/5 Feb 02, 2026

முதலாம் உலகப் போர் முடிவுக்குப் பின்னான ஒரு கடலோர கிராமம் — தேங்காய்ப்பட்டினம். அங்கு வாழும் கடலோர இஸ்லாமிய மக்களின் வாழ்வியல், தீவிர மத நம்பிக்கை, அறியாமை, மூடபழக்க வழக்கம் — இவற்றால் அந்தக் கிராமத்துக்கும் அதன் மனிதர்களுக்கும் ஏற்படுகிற மாற்றங்கள் எல்லாமும்தான் இந்த நாவல்.

கதாபாத்திரங்களின் வாழ்வியல் எனக்குக் கொஞ்சம்கூட பரிச்சயமில்லாத ஒன்றாக இருந்தாலும், படித்து முடித்ததும் தேங்காய்ப்பட்டினமும் அதன் மனிதர்களும் மனதுக்கு நெருக்கமான ஒன்றாக மாறிப்போயின. பரீதும் ஆயிஷாவும், அவர்களின் களங்கமில்லாக் காதலும் ஒருபோதும் என்னால் மறக்கவே முடியாது.

ஊரின் முதல்கூடி வடக்கு வீடு முதலாளி அகமது கண்ணு, அவருடைய அதிகார வெறியும், சுயபெருமையை நிலைநாட்ட அவர் செய்கிற காரியங்களும், அதனால் அவருக்கு ஏற்பட்ட வீழ்ச்சியும்தான் கடலோர கிராமத்தின் கதை.

இஸ்லாமிய சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் பேசுகிற இந்த நாவல் — பிரச்சார நெடியிலோ சீர்திருத்தப் பாணியிலோ பேசாமல், அறியாமையால் மூழ்கிக் கிடக்கிற மனிதர்களின் வாழ்வியல் எதார்த்தமாகத்தான் பேசுகிறது. வெறும் 200 பக்கங்கள் மட்டுமே இருக்க, சட்டென முழுமை பெறாமல் முடிந்த முடிவு மட்டும் ஒரு சின்ன ஏமாற்றம். மற்றபடி தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் மேல்பூச்சு இல்லாத வாழ்வியலின் எதார்த்தப் பிரதிதான் இந்நாவல்.