Reviews for ஆரிய மாயை

30 reviews total

user_9157

★ 3/5 Feb 02, 2026

புத்தகத்தின் தொடக்கத்தில் உள்ள கவிதை மிகவும் ரசிக்கத்தக்கது — நகைச்சுவையாகவும் நேரடியாகவும் இருந்தது. சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் எவ்வாறு வேறுபட்டு இயங்குகிறது என்ற கருத்துகள் சுவாரஸ்யமாக இருந்தன.

user_9156

★ 4/5 Feb 02, 2026

சிறந்த அரசியல் நையாண்டி நூல். அண்ணாவின் கூர்மையான எழுத்துநடை இப்புத்தகத்தில் தெளிவாகத் தெரிகிறது.

user_9155

★ 4/5 Feb 02, 2026

ஆரியர்களால் உருவாக்கப்பட்ட வருணாசிரம முறை மனிதர்களோடு முடியவில்லை, அது தமிழ் எழுத்துகளிலும் ஊடுருவியுள்ளது. ழ என்ற எழுத்து சூத்திர எழுத்தாகவே ஆரியர்களால் பிரிக்கப்பட்டது.

கரையான் போல் அனைத்தையும் அரிக்க நினைத்ததையும், ஏன் ஆரிய மாயை ஒழிய திராவிடம் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா பக்கம் பக்கமாக எடுத்துரைக்கிறார்.

ஆரிய மாயை ஒழிய கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.

user_9154

★ 3/5 Feb 02, 2026

இந்தத் தலைப்பைப் பற்றி நிறைய நூல்கள் படித்ததால் அண்ணாவின் இந்தப் படைப்பைப் படிக்கக் கொஞ்சம் சிரமப்பட்டேன். அவர் எழுதிய மொழிநடை, அவர் மேற்கோள் காட்டும் சரித்திர மற்றும் இலக்கிய ஆதாரங்கள், நீண்ட விளக்கங்கள் சில நேரம் குழப்பமடையச் செய்தது.

பொறுமையான மறுவாசிப்பு தேவை என்று உணர்ந்தேன். அவர் சொல்ல வரும் மையக் கருத்தைப் பெரும்பாலும் ஆதரித்தாலும் சில இடங்களில் நெருடல் ஏற்பட்டது. என்னைப் பொறுத்தவரை எந்த மாயையும் மனிதத்தின் எதிரியே.

user_9153

★ 3/5 Feb 02, 2026

அண்ணாவின் படைப்புகளில் நான் படித்த முதல் புத்தகம் இது. பெரியவர்கள் சொல்வது போல் அண்ணா நேரடியாகப் பேசுவார், சுற்றி வளைக்க மாட்டார் என்ற எண்ணத்துடன் இப்புத்தகத்தை எடுத்தேன், ஏமாற்றவில்லை.

இப்புத்தகத்தில் அண்ணாதுரை ஆரியர்களின் படையெடுப்பையும், இந்தியாவில் அவர்கள் படிப்படியாக குடியேறி அதிகாரத்தைக் கைப்பற்றியதையும் சமகால எழுத்தாளர்களின் மேற்கோள்களுடன் விவாதிக்கிறார். ஆரிய-திராவிட கலாச்சாரங்களை வேறுபடுத்திக் காட்டி, அவை வெவ்வேறு இனங்கள் என்பதை நிரூபிக்கிறார்.

சில கூற்றுகள் உணர்ச்சிகரமாகவும் ஆதாரமற்றதாகவும் இருந்தாலும், இத்தலைப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு முறை படிக்கலாம்.

user_9152

★ 4/5 Feb 02, 2026

மாயத்திரை கொண்டு மெய்வரலாற்றினை மூடிமறைத்து, முன்னில்லாப் பிரிவினைகள் இயல்பென்றே இனிச்சேரா வண்ணம் வர்ணம் பிரித்து, சரித்திரம் படைத்த இனத்தினை மதியற்று வாழவைக்கும் இந்த ஆரிய மாயையினை இக்கட்டுரைத் தொகுப்பின் ஊடாகத் தெளிவாகக் கிழித்தெறிகிறார் அறிஞர் அண்ணா.

திராவிடம், ஆரியம், ஆரியரின் வருகை, ஆரியரிற்கு முன் தமிழரின் நிலை, வாழ்வியல், ஆரியரின் வருகைக்கு பின்னரான சமூகவியல், அரசியல், கலை, மொழி, இலக்கிய, இலக்கண மாற்றங்கள் என அனைத்தையும் ஆராய்ந்து மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் உண்மை வரலாற்றை உலகறியச் செய்திருக்கிறார்.

"நாமிருக்கும் நாட்டிலே நமது உழைப்பு நமக்குப் பயன்பட்டு, நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம்." அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

user_9151

★ 5/5 Feb 02, 2026

திராவிட சிந்தனையின் அடிப்படைகளை புரிந்துகொள்ள இப்புத்தகத்தைப் படியுங்கள். இந்தக் கருத்தியல்களே ஆசிரியரை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவந்தன.

user_9150

★ 5/5 Feb 02, 2026

அண்ணா போன்ற அரசியல் அறிவாளிகளின் சித்தாந்தக் கருத்தியல்கள் இன்றைய காலகட்டத்தின் அரசியல் நிலைக்கு பெரும் தேவையாக உள்ளது. ஆரிய மாயை அதில் பெரும் பங்கு வகிக்கிறது.

ஆனால் நாம் இன்றும் ஆரியத்தின் மாயைகளில் இருந்து முழுவதுமாக விடுபட்டுள்ளோமா என்ற சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். இன்றைய ஆரிய மாயை கலை, இலக்கியம் மற்றும் அரசியலில் பல்வேறு வடிவங்களில் உள்ளது. அதைக் கண்டுகொள்ளும் பொறுப்பு நமக்கு அதிகமாக உள்ளது.

user_9149

★ 5/5 Feb 02, 2026

மிகவும் அதிர்ச்சி அளித்த புத்தகம். திராவிட ஆரிய நாகரிகம் பற்றி நான் இதுவரை அறிந்தவை முழுமையானதல்ல என்பதை உணர்த்தியது.

திராவிட பண்பாட்டில் சாதி வேற்றுமை இல்லை, ஆரிய நாகரிகம் தென்னிந்தியாவில் பரவிய பின்பே சாதி வேற்றுமை ஏற்பட்டுள்ளது, கடவுள் பெயரை சொல்லி பல மூட நம்பிக்கைகள் ஏற்பட்டது என்ற கருத்தை ஆணித்தரமாக, பல வரலாற்று ஆசிரியர்களின் எழுத்தை மேற்கோள் காட்டி தொகுத்து வழங்கியுள்ளார் அறிஞர் அண்ணா அவர்கள்.

இந்த புத்தகம் சுதந்திரத்திற்கு முன்பு எழுதப்பட்டது. இந்தியாவிலிருந்து பிரிந்து திராவிட நாடு என புது நாடு வேண்டுமென்று வலியுறுத்தி எழுதப்பட்டது. அவரது அனைத்து கருத்துகளையும் ஏற்க முடியவில்லை. ஆனால் ஆரிய திராவிட வேற்றுமைகள் சிந்தனையை தூண்டும் கருத்துகள்.

உலகின் அனைத்து நாடுகளிலும் தனது நாகரிகம், மொழி, நாடே மிக சிறந்தது என்ற கருத்து பரவலாக உள்ளது. மனித இனம் இந்த மேலாண்மை சுபாவத்தை விடும் நாள் எந்நாளோ.

user_9148

★ 3/5 Feb 02, 2026

ஒரு கருத்தியலை வளர்த்திட, மக்களிடம் அக்கருத்தியலைக் கொண்டு செல்ல பேச்சும் எழுத்துமே பேராயுதங்கள் என்பதற்கான சிறந்த உதாரணங்களில் ஒன்று இப்புத்தகம்.

உணர்வுகளைக் கிளர்த்தி விடுபவன் மட்டும் தலைவன் இல்லை. அதையும் தாண்டி தன்னைப் பின் தொடர்பவர்களை அறிவுத் தேடலுக்கும் உட்படுத்துபவனே தலைவன். அண்ணா தலைவன். அதற்கு இப்புத்தகமும் ஓர் உதாரணம்.