Reviews for கூகை

21 reviews total

user_8915

★ 4/5 Feb 02, 2026

ஒரு கட்டம் வரைக்கும் விளங்கிக்கொள்ளக் கடினமாக இருந்தாலும், பிறகு முழுமையாக உள்ளே இழுத்துச் சாதியத்தின் அத்தனை கோரமுகங்களையும் கண்முன் காட்டிச்செல்கிறது.

கூகையோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தை ஒப்பிட்டு, நாவல் முழுக்கக் கூகை படும் துன்பங்களைச் சொல்கிறார். சீனி என்ற கதாபாத்திரத்தின் பொறுமையும் ஆளுமையும் தாழ்த்தப்படுகின்ற அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது. பேச்சி என்ற பெண் பாத்திரம் மனதோடு பயங்கரமாக ஒட்டிப்போய்விட்டது.

user_8914

★ 4/5 Feb 02, 2026

கூகை என்ற பறவைகளின் வழியே ஒரு சமூகத்தின் வலியையும் வாழ்வியலையும் கண்முன்னே காட்டிய நாவல். அந்தக் காலத்தில் தொடங்கி சமீபகாலத்திலும் எந்த வகையில் ஒடுக்கப்படுகிறார்கள் என்று முடிவுரை கூறியதுதான் ஆசிரியரின் அழகு. கூகை ஒரு சமூகத்தின் அலறல்.

user_8913

Feb 02, 2026

நாவலில் வரும் சில கதாபாத்திரங்கள் முரணாக உள்ளன. நன்றாகச் செல்லும் கதை ஓட்டத்தில் வர்ணனை புகுந்து சலிப்பை ஏற்படுத்துகிறது. கந்தையா கருப்பியைச் சீரழிக்கும்போது பேசாமல் இருக்கும் கணவன், தன் மகளைச் சீரழிக்க முயலும்போது கொலை செய்கிறான் — மனைவியைத் தொடும்போதே எதிர்த்திருக்க வேண்டும்.

முத்துப்பேச்சி தன் மகள் மாரியை நடத்தும் விதம் மிகவும் கீழ்த்தரமானது. எதுவும் செய்யாத குழந்தையை ஏன் திட்ட வேண்டும்? சீனிக்கிழவனின் முடிவை fantasy ரீதியில் முடித்தது ஏமாற்றமளித்தது. மிகவும் மோசமான வாசிப்பு அனுபவம்.

user_8912

★ 4/5 Feb 02, 2026

நிலவுடைமைச் சாதியர்களால் சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் கொஞ்சம் சுதாரித்ததும், அதே நிலவுடைமையாளர்கள் தொழில் முதலாளிகளாக உருவெடுத்துக் கோரப்பல்லைக் காட்டுவதும், அவசரமாக அரசியல்வாதிகளாக உருப்பெற்றுக் கூர்நகங்களைக் காட்டுவதையும் பதிவுசெய்திருக்கும் நாவல்.

சில கதாபாத்திரங்கள் வம்படியாகத் தங்களைத் தாழ்த்திக்கொள்வதுபோல் ஆரம்பத்தில் தெரிந்தாலும், உண்மையில் எளியவர்கள் தம் வாழ்வை விதிவழி நகர்த்திச்செல்லும் விதம் என்பது புரிகிறது. சீனிக்கிழவனுக்கு நிலம் கையளிக்கப்படும் பாங்கு சினிமாத்தனமாகத் தெரிந்தாலும், தேர்ந்த சினிமாவில் மெய்யையும் பொய்யையும் வகைப்படுத்த முடிவதில்லை.

கூகையை ஒடுக்கப்படும் மக்களுக்கு உவமையாக நியமித்து, பகல்ச்சூரியனை இரவுகளில் கண்களுக்குள் இழுத்துக்கொண்டு வலுப்பெறும் பறவையாகக் காட்டினாலும், நாவலில் பகலும் இரவும் மாறிமாறிச் சுழல்கின்றன. கூகைச்சாமியைத் தோளில் சுமந்துகொண்டு ஊரைவிட்டு வெளியேறும் சீனிக்கிழவன் என்ன ஆனான் என்பதைப் புராணக்கதைபோல் சொல்லியிருக்கும் அத்தியாயம் குறியீடுகளால் நிரம்பித் தனித்துவம் பெறுகிறது. ஆட்சியதிகாரத்தின் முன் சாமானியர்கள் சுரண்டப்படுவதைப் பதிவுபண்ணியிருக்கிறது — கூகை அவசியம் வாசிக்கப்படவேண்டிய நாவல்.

user_8911

★ 1/5 Feb 02, 2026

கருத்தியல் ரீதியாக ஒரு குறிப்பிட்ட பார்வையை மட்டுமே முன்வைக்கும் படைப்பு. பிற்போக்குவாதமும் வெறுப்பும் கலந்த உளறல் என்று தோன்றுகிறது.

user_8910

★ 5/5 Feb 02, 2026

அருமையான நாவல். தலித் மக்களின் வாழ்வை உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கும் சிறந்த படைப்பு.

user_8909

★ 4/5 Feb 02, 2026

சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளால் மனிதர்கள் படும் துன்பங்களை உடனிருந்து துயரத்தைப் பகிர்ந்துகொண்ட ஒரு நிகழ்வாகவே கருதுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை நேரடியாக உணர வைக்கும் படைப்பு.

user_8908

★ 5/5 Feb 02, 2026

நல்ல கதையும் நன்கு வரையறுக்கப்பட்ட கதாபாத்திரங்களும் கொண்ட நாவல். ஆனால் பிற்பகுதி சற்று இழுத்தடிப்பதாகவும் சலிப்பூட்டுவதாகவும் இருந்தது.

user_8907

★ 5/5 Feb 02, 2026

இயற்கையின் படைப்பால் மிக வலிமையுள்ள கூகையும்கூட பகலில் சிதைகிறது, சில பறவைகளின் சீண்டலால். செயற்கையின் படைப்பால் சில மனிதர்கள் ஒடுக்கப்படுகிறார்கள், வஞ்சிக்கப்படுகிறார்கள். மிகவும் சிந்திக்க வைக்கும் நாவல்.

user_8906

★ 5/5 Feb 02, 2026

சமூகத்தின் தோலை உரிக்கும் படைப்பு. சிறிது நேரம் சோர்வு ஏற்படுத்தினாலும், மற்றபடி அருமையான நாவல்.