கூகை
Share:

கூகை

Koogai

Check Price on Amazon
4.21/5 · 100+ ratings

கூகை

Koogai

4.21/5 · 100+ ratings
பக்கங்கள்
318
வடிவம்
Paperback
பதிப்பகம்
காலச்சுவடு
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788177202694
ASIN
B0DTTCH47H

கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டி கிராமத்தின் கரிசல் மண்ணில், சீனிக்கிழவன் என்ற வயதான தலித் மனிதன் கூகைச் சாமியை — அபசகுனப் பறவை என்று ஒதுக்கப்பட்ட கோட்டானை — தன் தெய்வமாக வணங்கி வாழ்கிறான். நிலவுடைமைச் சாதியினர் தொடர்ந்து இழைக்கும் கொடுமைகள் — கூலியின்றி வேலை வாங்குவது, பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, உணவகத்தில் சேர்ந்து உண்டதற்கே தண்டனை தருவது — இவற்றின் நடுவே அப்புசுப்பனும் பேச்சி…

Interested in this book? Check Price on Amazon

user_8915

★ 4/5

ஒரு கட்டம் வரைக்கும் விளங்கிக்கொள்ளக் கடினமாக இருந்தாலும், பிறகு முழுமையாக உள்ளே இழுத்துச் சாதியத்தின் அத்தனை கோரமுகங்களையும் கண்முன் காட்டிச்செல்கிறது.

கூகையோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தை ஒப்பிட்டு, நாவல் முழுக்கக் கூகை படும் துன்பங்களைச் சொல்கிறார். சீனி என்ற கதாபாத்திரத்தின் பொறுமையும் ஆளுமையும் தாழ்த்தப்படுகின்ற அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது. பேச்சி என்ற பெண் பாத்திரம் மனதோடு பயங்கரமாக ஒட்டிப்போய்விட்டது.

user_8914

★ 4/5

கூகை என்ற பறவைகளின் வழியே ஒரு சமூகத்தின் வலியையும் வாழ்வியலையும் கண்முன்னே காட்டிய நாவல். அந்தக் காலத்தில் தொடங்கி சமீபகாலத்திலும் எந்த வகையில் ஒடுக்கப்படுகிறார்கள் என்று முடிவுரை கூறியதுதான் ஆசிரியரின் அழகு. கூகை ஒரு சமூகத்தின் அலறல்.

user_8913

நாவலில் வரும் சில கதாபாத்திரங்கள் முரணாக உள்ளன. நன்றாகச் செல்லும் கதை ஓட்டத்தில் வர்ணனை புகுந்து சலிப்பை ஏற்படுத்துகிறது. கந்தையா கருப்பியைச் சீரழிக்கும்போது பேசாமல் இருக்கும் கணவன், தன் மகளைச் சீரழிக்க முயலும்போது கொலை செய்கிறான் — மனைவியைத் தொடும்போதே எதிர்த்திருக்க வேண்டும்.

முத்துப்பேச்சி தன் மகள் மாரியை நடத்தும் விதம் மிகவும் கீழ்த்தரமானது. எதுவும் செய்யாத குழந்தையை ஏன் திட்ட வேண்டும்? சீனிக்கிழவனின் முடிவை fantasy ரீதியில் முடித்தது ஏமாற்றமளித்தது. மிகவும் மோசமான வாசிப்பு அனுபவம்.

user_8912

★ 4/5

நிலவுடைமைச் சாதியர்களால் சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் கொஞ்சம் சுதாரித்ததும், அதே நிலவுடைமையாளர்கள் தொழில் முதலாளிகளாக உருவெடுத்துக் கோரப்பல்லைக் காட்டுவதும், அவசரமாக அரசியல்வாதிகளாக உருப்பெற்றுக் கூர்நகங்களைக் காட்டுவதையும் பதிவுசெய்திருக்கும் நாவல்.

சில கதாபாத்திரங்கள் வம்படியாகத் தங்களைத் தாழ்த்திக்கொள்வதுபோல் ஆரம்பத்தில் தெரிந்தாலும், உண்மையில் எளியவர்கள் தம் வாழ்வை விதிவழி நகர்த்திச்செல்லும் விதம் என்பது புரிகிறது. சீனிக்கிழவனுக்கு நிலம் கையளிக்கப்படும் பாங்கு சினிமாத்தனமாகத் தெரிந்தாலும், தேர்ந்த சினிமாவில் மெய்யையும் பொய்யையும் வகைப்படுத்த முடிவதில்லை.

கூகையை ஒடுக்கப்படும் மக்களுக்கு உவமையாக நியமித்து, பகல்ச்சூரியனை இரவுகளில் கண்களுக்குள் இழுத்துக்கொண்டு வலுப்பெறும் பறவையாகக் காட்டினாலும், நாவலில் பகலும் இரவும் மாறிமாறிச் சுழல்கின்றன. கூகைச்சாமியைத் தோளில் சுமந்துகொண்டு ஊரைவிட்டு வெளியேறும் சீனிக்கிழவன் என்ன ஆனான் என்பதைப் புராணக்கதைபோல் சொல்லியிருக்கும் அத்தியாயம் குறியீடுகளால் நிரம்பித் தனித்துவம் பெறுகிறது. ஆட்சியதிகாரத்தின் முன் சாமானியர்கள் சுரண்டப்படுவதைப் பதிவுபண்ணியிருக்கிறது — கூகை அவசியம் வாசிக்கப்படவேண்டிய நாவல்.

user_8911

★ 1/5

கருத்தியல் ரீதியாக ஒரு குறிப்பிட்ட பார்வையை மட்டுமே முன்வைக்கும் படைப்பு. பிற்போக்குவாதமும் வெறுப்பும் கலந்த உளறல் என்று தோன்றுகிறது.

Shelves
Cho. Dharman புனைகதை சோ. தர்மன் book Fiction

More like this


சூல்

சூல் "தூர்வை', "கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன். ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய "தரிசு நில மேம்பாடு' புத்தகத்தில் வரும் ஒரு…

4.06/5 · 100+ ratings
Check Price

கூகை

சிறந்த நாவலுக்கான தமிழக அரசு பரிசு பெற்றது. கூகை என்கிற கோட்டான் இடப்பெயற்சியில் ஆர்வமில்லாத பறவை. மிகுந்த வலிமை கொண்டது எனினும் அந்த வலிமையைத் தன் உணவுக்காக அன்றி வ…

Check Price

நீர்ப்பழி

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு அறுபடுவதையும், நீர்நிலைகளின் அழிவால் ஏற்படும் சமூகப் பின்விளைவுகளையும் பேசும் சூழலியல் சிறுகதை இது. கரிசல் நிலத்தின் தொன்மங்களை…

Check Price

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

4.7/5 · 10K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்

சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …

4.62/5 · 7K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…

4.64/5 · 5K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.

4.64/5 · 4K+ ratings
Check Price

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

4.72/5 · 3K+ ratings
Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.08/5 · 3K+ ratings
Check Price

கடல் புறா 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

4.16/5 · 2K+ ratings
Check Price

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

4.31/5 · 2K+ ratings
Check Price