Reviews for ராஜமுத்திரை
28 reviews total
user_7486
★ 5/5 Feb 02, 2026அருமையான சொற்பிரயோகம். இதுவரை படித்தவரை மிகவும் நன்றாகச் செல்கிறது.
user_7485
★ 4/5 Feb 02, 2026ராஜமுத்திரை — சாண்டில்யனின் சிறப்பான வரலாற்று நாவல்.
user_7484
★ 5/5 Feb 02, 2026சாண்டில்யனின் சிறந்த படைப்புகளில் ஒன்று!
user_7482
★ 5/5 Feb 02, 2026அருமையான நாவல்!
user_7481
★ 5/5 Feb 02, 2026சாண்டில்யனின் உன்னதமான படைப்புகளில் ஒன்று.
user_7479
★ 4/5 Feb 02, 2026மிகவும் வேகமான கதை நகர்வு. முழுமையாக ரசித்துப் படித்தேன்!
user_7478
★ 4/5 Feb 02, 2026பாண்டியப் பேரரசு எப்படி விரிவடைந்தது என்பதைச் சொல்லும் கதை. பாண்டியச் சகோதரர்கள் சேரநாட்டைக் கைப்பற்றுவதே முக்கியக் கதைக்களம்.
முதல் பாகம் சுவாரசியமான திருப்பங்களுடன் வேகமாகச் செல்கிறது. இரண்டாம் பாகம் சற்று இழுப்பது போல் தோன்றினாலும், ஒட்டுமொத்தமாக சாண்டில்யனின் சிறந்த புத்தகம்.
user_7477
★ 3/5 Feb 02, 2026சாண்டில்யனின் கடல்புறா படித்த பின் ஆர்வம் அதிகமிருந்ததால், தேடிப்பிடித்து ராஜமுத்திரை வாங்கி வைத்தேன்.
இது வித்தியாசமான கதையாய் இருக்குமென்று கேள்விப்பட்டிருந்தேன். புதினத்தின் ஆரம்பமே முத்தங்காடியில் தொடங்குகிறது.
கதையின் முக்கியப் பாத்திரங்களின் பெயர்கள் கடல்புறா பாத்திரங்கள் அளவிற்கு ஈர்க்கவில்லை. பாத்திர வடிவமைப்பும் சற்று சுமாராகத்தான் இருந்தது.
தோப்புக்குள் நடக்கும் மர்மச் சண்டைக்காட்சி ஒரு பரபரப்பை அளித்தது. அதன் பின்னர் கதையின் போக்கு அவ்வளவு சுவாரசியம் ஊட்டவில்லை. பாண்டியர்களின் எழுச்சி நாயகர்கள் பற்றியும் முத்துக்களவு பற்றியும் கதை அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல் கதையின் முக்கிய ஆட்கள் — இளநங்கை, வீரபாண்டியன் — இடையே ஒரே நாளில் காதலோ காமமோ தெரியாது ஒன்று உருவெடுக்கிறது, கதை நெடுகிலும் அது அப்படியே செல்கிறது. இடையே முத்துக்குமரி, இந்திரபானு காதலும் ஓடுகிறது. எப்படி அவ்வளவு லேசில் காதல் தோன்றுகிறது என்று விளங்கவில்லை.
போர்க் காட்சிகளும் ஆங்காங்கு வீரபாண்டியன் தீட்டிய திட்டங்களும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டின. கதை பாதிக்கு மேல் குமரி, இந்திரபானுவைக் காணவில்லை. மற்ற இருவர் வைத்து கோட்டாற்றுக் கோட்டை வைத்தே கதை நகர்ந்தது. அவர்கள் சம்பாஷணைகள் இழுவையாகச் சென்றன. போர் தந்திரங்கள் நன்றாக இருந்தன. இறுதிக்காட்சி சுமார் தான். அடுத்த பாகம் எப்படி இருக்குமோ?!
user_7476
★ 4/5 Feb 02, 2026சாண்டில்யனை அறிமுகம் செய்ய சிறந்த புத்தகம். போர்க்கலையையும் கதாபாத்திரங்களையும், குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்களையும் விவரிக்கும் அவரது திறன் தமிழ் இலக்கியத்தில் தனித்துவமானது.
கதை முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை ஆர்வத்தைத் தக்கவைக்கிறது. சாண்டில்யன் போர்த் தந்திரங்களை நேரில் அனுபவித்தவர் போல எழுதுகிறார். ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு இன்றியமையாதது.
இந்தியத் திரைப்படம் போல அதிரடி, காதல் என்று எல்லாமும் கலந்த நாவல்.
user_7475
★ 4/5 Feb 02, 2026சுமாரான வாசிப்பு அனுபவம். நன்றாக இருந்தாலும் சாண்டில்யனின் மற்ற படைப்புகளை விட சற்று குறைவே.