Reviews for ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

29 reviews total

user_7018

★ 5/5 Feb 02, 2026

ஜெயகாந்தனின் சொந்த வாழ்வில் நடந்ததைப் பிரதிபலிக்கும் தரமான நாவல். இந்த நாவல் இதே பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது. பெண்களை தன்னுடைய கதைகளிலும் நிஜ வாழ்விலும் மதித்த ஜெயகாந்தனின் உன்னத படைப்பு.

user_7017

★ 5/5 Feb 02, 2026

ஒருவரை ஒருவர் நேசிக்கும் கணவன்-மனைவியிடையே ஏற்படும் மனத்தாங்கல்களையும் அதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகளையும் மிக அழகாக வர்ணித்திருப்பார் ஜெயகாந்தன். ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் மிகப் பெரிய வெற்றியே அவனது கதையில் வரும் கதாபாத்திரங்களை மக்கள் மனதில் நிலைபெறச் செய்வது தான். இந்நாவலில் வரும் கல்யாணியும் ரங்காவும் நம் மனதில் நிலைத்திருப்பார்கள்.

user_7016

★ 5/5 Feb 02, 2026

என்னை பற்றிய எனது எண்ணங்களை மற்றவர்கள் என்ன புரிந்து வைத்துள்ளார்கள் என்று தெரிய கூட விருப்பமில்லாமல் கலைத்துறையில் வெறும் ஒரு நடிகையாக மட்டுமே வாழ்க்கையின் ஆழத்தை புரிந்தவளா, அல்லது எந்த ஒரு ஆழமான வற்புறுதலுக்கும் இடமில்லாமல் தன்னளவு திருப்தி அடைவதே வாழ்க்கையா? என்ற கேள்வி வெறும் கல்யாணியின் கேள்வி அல்ல — நம் அனைவரின் கேள்வியும் கூட.

user_7015

★ 4/5 Feb 02, 2026

பிடிவாதமான, நம்பிக்கையான, பகுத்தறிவு மிக்க ஒரு ஆணுக்கும், அன்பான, சுதந்திரமான, கலைஞரான ஒரு பெண்ணுக்கும் இடையிலான உறவு. கதை முன்னேரும்போது ஆண் சிறு சிறு விஷயங்களில் பிரச்சனைகளை உருவாக்கி இருவரையும் துன்பத்தில் ஆழ்த்துகிறான். இந்த உறவு எப்படி முன்னேறும் என்பதே நாவல்.

user_7014

★ 5/5 Feb 02, 2026

மனித மனங்களை, அதன் ஆழங்களை எல்லாக் கதைகளிலும் பாத்திரப்படுத்தி ஜெயகாந்தன் வியக்கவைக்கிறார். கல்யாணியும் ரங்காவும் நடத்தும் உரையாடல்கள், நாம் அன்றாடம் நம்மோடு நடத்துபவையே!

user_7013

★ 5/5 Feb 02, 2026

என்னவென்று சொல்வது இந்த புதினத்தை பற்றி! அற்புதமான ஒரு படைப்பு. சில கதாபாத்திரங்கள் மட்டுமே இருந்தாலும் அவர்களை வைத்து ஒரு உண்மையான உலகை படைத்திருக்கிறார் ஜெயகாந்தன். மிக சாதாரணமாக ஆரம்பிக்கும் கதை எவ்வளவு சீக்கிரம் நம் மனதிற்குள் ஊடுருவுகிறது என்பதே ஆச்சரியம்.

user_7012

★ 5/5 Feb 02, 2026

எழுபதுகளில் இப்படியான ஒரு கதையை, இப்படியான ஒரு கருத்தை சமுதாயத்திற்கு இத்தனை தைரியமாய் சொல்ல ஜெயகாந்தன் என்ற ஆளுமையைத் தவிர வேறு யாரால் முடியும். 2025-இல் கூட, இதில் பேசப்பட்டிருக்கும் கருத்து பொருத்தமாய் இருக்கிறது. இன்னும் பல தலைமுறைகளுக்கும் பொருத்தமான படைப்பு.

user_7011

★ 5/5 Feb 02, 2026

ஜெயகாந்தனைப் போல் மனித மனங்களுக்குள் புகுந்து புறப்படுவதற்கு இன்னொரு மனிதர் பிறந்து தான் வர வேண்டும். இது என்னுடைய மிகப் பிடித்த புத்தகங்களில் ஒன்று. மனித மனங்களையும், உறவுகளையும் அழகாக படம் பிடித்துக் காட்டுவது.

user_7010

★ 5/5 Feb 02, 2026

'காதல் என்பது ஒருவரையொருவர் ஆக்கிரமிப்புச் செய்து, அதில் இன்பங் கண்டு, அன்பின் ஆழத்தினை பரிசோதித்துக் கொள்ளும் உறவுமுறை' என அனைவரும் தம் அகத்தின் ஏதோ ஒரு மூலையில் நிறுவி வைத்திருக்கும் அடிப்படைச் சிந்தனையை உடைத்துப் போடுகிறது இந்த நாவல். ஜெயகாந்தனின் பார்வையில் அறிவுபூர்வமான காதலும் அழகு, அதனால் ஏற்படும் மனக்குழப்பங்களும் நம்மை சிந்திக்க வைக்கின்றன.