Reviews for ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

29 reviews total

user_7039

★ 5/5 Feb 02, 2026

2018-இல் நான் படித்த சிறந்த புத்தகம். ஒவ்வொரு திருமணத்திலும் எழும் முரண்பாடுகளையும் மோதல்களையும் ஜெயகாந்தன் அழகாக வெளிப்படுத்துகிறார். கல்யாணி, ரங்கா கதாபாத்திரங்களை அமைத்த விதம் அற்புதம். ஒரு பெண்ணின் 'தன்னிலை' பற்றி ஜெயகாந்தன் பேசுவது இன்றும் பொருத்தமானது.

user_7038

★ 5/5 Feb 02, 2026

"வாழ்க்கை என்பது அவரவர் பக்கத்து நியாயம் தான்" என்கிற ஜெயகாந்தனின் வாக்கியத்தின் ஊடகம் தான் அவரின் எழுத்துகளும் அமைகிறது. சஸ்பென்ஸ் திரில்லர் என்று ஏதும் இல்லாமல், தெளிந்த நீரோடைபோலவே இந்த நாவலை எழுதியுள்ளார். உரையாடலும் மனதின் நினைப்புகளாலும் ஒரு உறவை, காதலை, சமூகத்தை அழகாகச் சித்தரிக்கிறார்.

user_7037

★ 5/5 Feb 02, 2026

ஜெயகாந்தன் தன்னுள் நிகழ்த்திக் கொண்ட தர்க்கங்களின் பிரதியாய் இருக்கிறது இந்தப் புத்தகம். காதல், சுமூகமான மற்றும் மனநிறைவான வாழ்க்கை பற்றி விவரித்துள்ளார். கல்யாணிக்கும் ரங்காவுக்கும் இடையே நடக்கும் தர்க்கங்களும் ரங்காவின் மனக்குழப்பங்களும் மிக நுட்பமாகவும் யதார்த்தமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

user_7036

★ 5/5 Feb 02, 2026

ஜெயகாந்தன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவருடைய 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' போன்ற சிறந்த நாவல்கள் என்னை மற்ற அவருடைய புத்தகங்களை படிக்கத் தூண்டின. இப்புத்தகத்தில் கணவன்-மனைவி உறவைப் பற்றிக் கூறியுள்ளார். ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைக்கிறது.

user_7035

★ 5/5 Feb 02, 2026

இது நான் படிக்கும் ஜெயகாந்தனின் இரண்டாவது புதினம். முதல் புதினம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' வாசித்து முடித்த பின்பு ஒரு வாரகாலம் அடுத்த புத்தகத்தை வாசிக்க இயலவில்லை. பலவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருந்தன. மனித மனங்களை ஜெயகாந்தன் அவர்களால் எப்படி இவ்வளவு நுட்பமாக அலசி ஆராய முடிகிறது என்பதே ஆச்சரியம்.

user_7034

★ 4/5 Feb 02, 2026

இது ஜெயகாந்தனின் நாவல். ஒரு நாடக நடிகை எப்படி தன் வாழ்க்கையை நடத்துகிறாள், வாழ்க்கை மற்றும் உறவுகள் பற்றிய அவளது பார்வை என்ன என்பதைச் சுற்றியே கதை நகர்கிறது. 33 வயது தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்த கல்யாணி நாடக நடிகை. ரங்கா ஒரு விதவையர், அரசாங்க ஊழியர். இருவரின் உலகக்கண்ணோட்டமும் அவர்கள் உறவின் போக்கும் கதையின் சுவாரசியம்.

user_7033

★ 5/5 Feb 02, 2026

நான் வாசித்து முடித்த முதல் ஜெயகாந்தன் புத்தகம். மனித உணர்வுகளின் சிக்கல்கள், ஒவ்வொரு மனிதனும் அதனை அணுகும் விதம் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்கான அமைப்பை கொடுத்து அதிலிருந்து துளியும் விலகியிராமல் எழுதியிருக்கிறார். அற்புதமான படைப்பு.

user_7032

★ 3/5 Feb 02, 2026

ஆண்-பெண் உறவையும், திருமணம் எனும் உறவுமுறை அமைப்பின் கட்டுப்பாடுகளையும், அதனால் ஏற்படும் விரிசல்களையும் பேசுகிறது இந்த நாவல். இந்த உறவுமுறையில் பெண் தன்னிச்சையாகவும் நடைமுறை சார்ந்தும் இருப்பதும், ஆண் வழக்கமான எதிர்பார்ப்புகளுடன் இருப்பதும் சுவாரசியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

user_7031

★ 5/5 Feb 02, 2026

உறவுமுறை பற்றிய உன்னதமான கதை. அனைவரும் படிக்க வேண்டிய கதை. கல்யாணி-ரங்கா கணவன் மனைவியின் புரிதலை பற்றிய திருமண வாழ்க்கைக்கு தேவையான கதை.

user_7029

★ 4/5 Feb 02, 2026

ஜெயகாந்தனின் குறிப்பிடத்தக்க படைப்பு. கல்யாணி கதாபாத்திரம் 'கங்கா'வை நினைவுபடுத்தும். ஆனால் இங்கே நேர்மறையான முடிவு.