Reviews for உடையார் - பாகம் 6

30 reviews total

user_6708

★ 5/5 Feb 02, 2026

பிரம்மராயர் கிருஷ்ணராமனை வைத்து ஆரம்பிக்கும் கதை, காவிரியில் வரும் வெள்ளம் போல நம் மனதைக் குளுமையான அந்தக் காவேரி வெள்ளத்தில் சிக்க வைத்து, ஆறு பாகங்களையும் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து கடக்க வைக்கிறார் பாலகுமாரன். இறுதியில் அதே வெள்ளம் குறைந்து வடிவது போல, ஆறாவது பாகத்தில் நம் கண்களில் கண்ணீரை வடிய வைக்கிறார்.

பிரம்மராயர் கிருஷ்ணராமனின் சுபாவங்களில் பாலகுமாரன் தன்னுடைய முந்தைய அவதாரத்தை உருவகப்படுத்தியுள்ளார். காதல், கோபம், போர், ஆளுமை, சூழ்ச்சி போன்ற எல்லா முக்கிய நிகழ்வுகளும் ஆறு பாகங்களிலும் படர்ந்த கொடி போல பூத்துக் குலுங்கும். பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு இந்த நாவல் முழுமையாக மகிழ்ச்சி தரும்.

ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டி முடிக்கப் பட்ட கஷ்டத்தில் நான்கில் ஒரு பங்கு பாலகுமாரனும் அனுபவித்திருக்க வேண்டும். ராஜராஜரின் ஆளுமைத் திறமை, பிரம்மராயரின் ஆலோசனைகள், வைஷ்ணவதாசன் வேளாளர்களுக்குச் சொல்லும் அறிவுரைகள், ராஜேந்திர சோழனின் அவசரபுத்தி பின் நேர்த்தியடைதல், சேனாதிபதி அருண்மொழியின் கர்வமும் புத்திசாலித்தனமும், பஞ்சவன் மாதேவியின் ஆலோசனைகள் — இவை இன்றைய தொழில் முனைவோருக்கும் நல்ல அறிவுரைகள்.

சித்தர் கருவூர்த்தேவர், சிவனடியார் நம்பியாண்டார் நம்பி ஆகியோரின் ஆன்மிகம் தொடர்பான உரையாடல்கள் மிகவும் அருமை. ராஜராஜன் மனைவிகளுக்குச் சொல்லும் குட்டிக் கதைகளும் ஆர்வமாகப் படிக்கவும் பாடம் செய்யவும் தூண்டும்.

மொத்தத்தில் முப்பது நாட்களில் முழுவதும் படிக்க முடிந்தது. பொன்னியின் செல்வனைப் போல உடையாரும் நம்மைச் சோழர் காலத்துக்கே அழைத்துச் செல்கிறது.

user_6707

★ 3/5 Feb 02, 2026

பாலகுமாரனின் "உடையார்" ஆறு பாகங்களும் சுமார் 2745 பக்கங்களும் கொண்ட சரித்திர நாவல். சோழச் சக்கரவர்த்தி ராஜராஜனின் வரலாற்றையும், உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தஞ்சை பெரிய கோவிலின் வரலாற்றையும் சித்தரிக்கிறது.

தஞ்சை பெரிய கோவில் கி.பி. 1006-இல் ஆரம்பித்து கி.பி. 1010-இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அற்புத வரலாற்றை நாவல் வடிவில் சுமார் 18 நாட்களில் வாசிக்க முடிந்தது ஒரு அதிசயமே. அதை எழுதிய பாலகுமாரன் நிச்சயமாக ஒரு அதிசயப் பிறவி. நிறைய ஆராய்ச்சிகள் செய்து பிரமாண்டமான படைப்பாகப் புத்தக வடிவில் விட்டுச் சென்ற அந்த மகாமேதைக்கு வாழ்த்துகள்.

இருப்பினும் இந்த நாவலை இன்னும் சுவைபட எழுதியிருக்கலாம் என்ற ஆதங்கம் எழுகிறது. ஓவியங்களுடன் தந்திருந்தால் கதாபாத்திரங்களை மனதில் நிறுத்திக் கதையூடாகப் பயணிக்க உதவியிருக்கும். சிற்பக்கலையையும் ஓவியக்கலையையும் இடைவிடாது வர்ணித்து எழுதப்பட்ட நாவலில் ஒரு ஓவியமும் இல்லை என்பது வருந்தத்தக்கது.

கோவில் கும்பாபிஷேகம், ராஜேந்திரர் முடிசூடல் போன்ற முக்கிய சம்பவங்கள் ஓரிரு பக்கங்களில் தொட்டும் தொடாமலும் சொல்லப்பட்டது எதிர்பார்ப்பில் வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரே விஷயங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதும் சற்று மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.

மொத்தத்தில் இந்த வாசிப்பு சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்றையும் தஞ்சை பெரிய கோவிலின் பெருமையையும் அறிய உதவியது என்பதில் ஐயமில்லை. தமிழன் கலையையும் நாகரீகத்தையும் வரலாற்றையும் அறிய விரும்புவோருக்கு இது அருமையான நூல்!

user_6706

★ 5/5 Feb 02, 2026

கடைசிப் பக்கங்களைப் படிக்கும்போது கண்ணீர் வழிவதைத் தடுக்க முடியவில்லை. தஞ்சை பெரிய கோவில் மற்றும் ராஜராஜ சோழன் பற்றிய முற்றிலும் புதிய பார்வையை இந்த நாவல் தருகிறது.

user_6705

★ 4/5 Feb 02, 2026

நல்ல புத்தகம். வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல் சோழர் காலத்தை அழகாகச் சித்தரிக்கிறது.

user_6704

★ 3/5 Feb 02, 2026

நல்ல முடிவு. ஆனால் கதை சொல்லலில் சில ஏற்ற இறக்கங்கள் தவிர்க்க முடியாததாக இருந்தன. ஒட்டுமொத்தமாக சுவாரசியமான வாசிப்பு அனுபவம்.

user_6703

★ 5/5 Feb 02, 2026

பண்டைய தமிழ் வரலாற்றை அறிந்துகொள்ள மிகவும் நல்ல புத்தகம்.

user_6702

★ 3/5 Feb 02, 2026

அருமையான படைப்பு!

user_6701

★ 4/5 Feb 02, 2026

"திருமகள் போல பெருநில செல்வியும் தமக்கே உரிமை பூண்டுமெனக்கெழு..." என்று அவர் மெய்க்கீர்த்தி எதிரொலிக்க, ஆயிரம் ஆண்டுகள் தாண்டி ராஜராஜரின் மீது அளவு கடந்த காதல் கொள்ள செய்யும் படைப்பு.

சில தொய்வுகளும் சறுக்கல்களும் இருந்தாலும், சில விஷயங்கள் தேவைக்கு மேல் சொல்லப்படும், சில முக்கிய நிகழ்வுகள் சுருக்கமாக சொல்லப்பட்டிருப்பது உண்மையே.

ஆனால் நம் பெரிய கோவிலையும், தமிழையும், தமிழ்நாட்டின் வணிகமும் வளமும் பெருகியதையும், கணித மேன்மையும் இலக்கிய மேன்மையும் — இவை எல்லாம் வளர ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே ஒரு அரசன் தொலைநோக்குப் பார்வையுடன் இயங்கியிருக்கிறான் என்று தெளிவாக பதிவிட்டு சொன்னதால் எல்லா எழுத்துப் பிழையும் மன்னிப்புக்கு உரியதே.

நமக்கு நாம் யார் என்று நினைவூட்ட பெரிய கோவிலை விட அரிய நினைவுச் சின்னம் தேவையே இல்லை. ராஜராஜரையும் ராஜேந்திரரையும் அறிமுகம் காட்டி, அவர்களோடு பழக வாய்ப்பளித்த ஆசிரியர் பாலகுமாரனுக்கு என் பணிவான நன்றிகள்.

user_6700

★ 4/5 Feb 02, 2026

பிரம்மாண்டம் — அரசன், கோவில், கதை, கதையாசிரியர் அனைத்துமே. ராஜராஜ சோழனைப் பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில் படித்து, பின் அருண்மொழியாய் பொன்னியின் செல்வனில் கண்டதோடு முடிந்து போனது. மீண்டும் உடையாரில் ராஜராஜ சோழன் உயிர் பெற்றிருக்கிறார்.

கோவில் வடிவமைப்பதைப் பற்றிய கதை அரை பாகம். அந்த நாளில் வாழ்ந்த மக்களைப் பற்றிய கதை கால் பாகம். ராஜராஜனுக்கும் பஞ்சவன் மாதேவிக்கும் இருக்கும் காதலும், ராஜேந்திரனுக்கும் இருக்கும் பாசமும், அனிருத்த பிரம்மராயருக்கும் இருக்கும் நட்பும், அந்தணர்கள், சிற்பிகள், கருமார்களுக்குள் நடக்கும் சண்டையும் மீதி கால் பாகம்.

ராஜராஜனே மீண்டும் எழுந்து வந்து தன் கதையை கூற நினைத்தாலும் இவ்வளவு அருமையாக கூற முடியாது.

குறைகளும் உண்டு. கோவிலின் குடமுழுக்கு மிக சாதாரணமாய் சொல்லப்பட்டிருக்கிறது. பல கதாபாத்திரங்கள் பாதியிலேயே விடப்பட்டிருக்கின்றன. பொன்னியின் செல்வனில் நல்லவராய் இருந்த செம்பியன் மாதேவி இதில் வேறுவிதமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

நிறை இருந்தாலும் குறை இருந்தாலும், பாலகுமாரனின் புத்தகத்தைப் படித்த பின் நல்ல மனிதனாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். உடையாரும் விதிவிலக்கல்ல.

user_6699

Feb 02, 2026

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் வாழ்க்கை எப்படி இருந்தது என்ற பிரதிபலிப்பை ரசித்தேன். ஒட்டுமொத்த கதை, கதாபாத்திரங்களின் நிஜத்தன்மை மற்றும் சிக்கலான தன்மை, ஆசிரியரின் இடையிடையே வரும் தத்துவ சிந்தனைகள் அனைத்தும் பிடித்திருந்தன.

ஆனால் கதையில் பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் விடப்பட்டிருக்கின்றன. பல துணைக்கதைகளுக்கு முடிவே இல்லை. விரிவாக அறிமுகப்படுத்தப்பட்ட பல கதாபாத்திரங்கள் பின்னர் மீண்டும் வருவதில்லை.

கோவில் கும்பாபிஷேகம், ராஜேந்திரன் முடிசூட்டு விழா போன்ற முக்கிய நிகழ்வுகள் ஓரிரு வரிகளில் சொல்லப்பட்டிருப்பது ஏமாற்றம். சில சிறிய நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடைசி அத்தியாயமும் அவசரமாக முடிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.

ஒட்டுமொத்தமாக, எல்லா முடிச்சுகளும் சரியாக அவிழ்க்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும் கோவில் கட்டுமானம் பற்றிய விரிவான சிந்தனை செயல்முறையும், தத்துவ உரையாடல்களும் மிகவும் ரசிக்கத்தக்கவை. நல்ல வாசிப்பு அனுபவம்!