உடையார் - பாகம் 6
Share:

உடையார் - பாகம் 6

Udaiyar - Part 6

Check Price on Amazon
4.3/5 · 700+ ratings

உடையார் - பாகம் 6

Udaiyar - Part 6

4.3/5 · 700+ ratings
பக்கங்கள்
546
வடிவம்
Paperback
பதிப்பகம்
Thirumagal Nilayam
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DSZNYH5C

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards such as Raja Sir Annamalai Chettiyar Trust Award, the Ilakkiya Sindhanai Award, and the Kalaimamani Award from Government of Tamil Nadu, to name a few. Some of his other works include Kai Veesamma Kai Veesu, Payanigal Kavanikkavum, Pani Vizhum Malar Vanam…

Interested in this book? Check Price on Amazon

user_6703

★ 5/5

பண்டைய தமிழ் வரலாற்றை அறிந்துகொள்ள மிகவும் நல்ல புத்தகம்.

user_6702

★ 3/5

அருமையான படைப்பு!

user_6701

★ 4/5

"திருமகள் போல பெருநில செல்வியும் தமக்கே உரிமை பூண்டுமெனக்கெழு..." என்று அவர் மெய்க்கீர்த்தி எதிரொலிக்க, ஆயிரம் ஆண்டுகள் தாண்டி ராஜராஜரின் மீது அளவு கடந்த காதல் கொள்ள செய்யும் படைப்பு.

சில தொய்வுகளும் சறுக்கல்களும் இருந்தாலும், சில விஷயங்கள் தேவைக்கு மேல் சொல்லப்படும், சில முக்கிய நிகழ்வுகள் சுருக்கமாக சொல்லப்பட்டிருப்பது உண்மையே.

ஆனால் நம் பெரிய கோவிலையும், தமிழையும், தமிழ்நாட்டின் வணிகமும் வளமும் பெருகியதையும், கணித மேன்மையும் இலக்கிய மேன்மையும் — இவை எல்லாம் வளர ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே ஒரு அரசன் தொலைநோக்குப் பார்வையுடன் இயங்கியிருக்கிறான் என்று தெளிவாக பதிவிட்டு சொன்னதால் எல்லா எழுத்துப் பிழையும் மன்னிப்புக்கு உரியதே.

நமக்கு நாம் யார் என்று நினைவூட்ட பெரிய கோவிலை விட அரிய நினைவுச் சின்னம் தேவையே இல்லை. ராஜராஜரையும் ராஜேந்திரரையும் அறிமுகம் காட்டி, அவர்களோடு பழக வாய்ப்பளித்த ஆசிரியர் பாலகுமாரனுக்கு என் பணிவான நன்றிகள்.

user_6700

★ 4/5

பிரம்மாண்டம் — அரசன், கோவில், கதை, கதையாசிரியர் அனைத்துமே. ராஜராஜ சோழனைப் பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில் படித்து, பின் அருண்மொழியாய் பொன்னியின் செல்வனில் கண்டதோடு முடிந்து போனது. மீண்டும் உடையாரில் ராஜராஜ சோழன் உயிர் பெற்றிருக்கிறார்.

கோவில் வடிவமைப்பதைப் பற்றிய கதை அரை பாகம். அந்த நாளில் வாழ்ந்த மக்களைப் பற்றிய கதை கால் பாகம். ராஜராஜனுக்கும் பஞ்சவன் மாதேவிக்கும் இருக்கும் காதலும், ராஜேந்திரனுக்கும் இருக்கும் பாசமும், அனிருத்த பிரம்மராயருக்கும் இருக்கும் நட்பும், அந்தணர்கள், சிற்பிகள், கருமார்களுக்குள் நடக்கும் சண்டையும் மீதி கால் பாகம்.

ராஜராஜனே மீண்டும் எழுந்து வந்து தன் கதையை கூற நினைத்தாலும் இவ்வளவு அருமையாக கூற முடியாது.

குறைகளும் உண்டு. கோவிலின் குடமுழுக்கு மிக சாதாரணமாய் சொல்லப்பட்டிருக்கிறது. பல கதாபாத்திரங்கள் பாதியிலேயே விடப்பட்டிருக்கின்றன. பொன்னியின் செல்வனில் நல்லவராய் இருந்த செம்பியன் மாதேவி இதில் வேறுவிதமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

நிறை இருந்தாலும் குறை இருந்தாலும், பாலகுமாரனின் புத்தகத்தைப் படித்த பின் நல்ல மனிதனாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். உடையாரும் விதிவிலக்கல்ல.

user_6699

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் வாழ்க்கை எப்படி இருந்தது என்ற பிரதிபலிப்பை ரசித்தேன். ஒட்டுமொத்த கதை, கதாபாத்திரங்களின் நிஜத்தன்மை மற்றும் சிக்கலான தன்மை, ஆசிரியரின் இடையிடையே வரும் தத்துவ சிந்தனைகள் அனைத்தும் பிடித்திருந்தன.

ஆனால் கதையில் பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் விடப்பட்டிருக்கின்றன. பல துணைக்கதைகளுக்கு முடிவே இல்லை. விரிவாக அறிமுகப்படுத்தப்பட்ட பல கதாபாத்திரங்கள் பின்னர் மீண்டும் வருவதில்லை.

கோவில் கும்பாபிஷேகம், ராஜேந்திரன் முடிசூட்டு விழா போன்ற முக்கிய நிகழ்வுகள் ஓரிரு வரிகளில் சொல்லப்பட்டிருப்பது ஏமாற்றம். சில சிறிய நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடைசி அத்தியாயமும் அவசரமாக முடிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.

ஒட்டுமொத்தமாக, எல்லா முடிச்சுகளும் சரியாக அவிழ்க்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும் கோவில் கட்டுமானம் பற்றிய விரிவான சிந்தனை செயல்முறையும், தத்துவ உரையாடல்களும் மிகவும் ரசிக்கத்தக்கவை. நல்ல வாசிப்பு அனுபவம்!

Shelves
வரலாற்றுப் புனைகதை Novels நாவல் Historical Fiction பாலகுமாரன் Balakumaran Fiction book புனைகதை

More like this


உடையார் - பாகம் 2

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

4.32/5 · 1K+ ratings
Check Price

உடையார் (பாகம் 3)

உடையார் நாவலின் மூன்றாம் பாகம். பாலகுமாரன் எழுதிய இந்த வரலாற்று நாவல், ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தையும் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டுமானத்தையும் விவரிக்கிறது. ஆதித்த க…

4.28/5 · 1K+ ratings
Check Price

உடையார்

சோழப் பேரரசின் பொற்கால ஆட்சியையும், உலகமே வியந்து போற்றும் தஞ்சை பெரிய கோவில் உருவான வரலாற்றையும் விவரிக்கும் ஒரு உன்னத வரலாற்றுப் புதினம் இதுவாகும். மாமன்னன் ராஜராஜ ச…

4.33/5 · 900+ ratings
Check Price

இரும்பு குதிரைகள்

போக்குவரத்துத் துறையின் பின்னணியில் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் உலகத்தை மிக நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு தத்ரூபமான படைப்பு இது. ஒரு நிறுவனத்தின் கொள்முதல் ப…

4.14/5 · 400+ ratings
Check Price

தாயுமானவன் [Thayumanavan]

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

4.26/5 · 300+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

4.7/5 · 10K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…

4.64/5 · 5K+ ratings
Check Price

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

4.72/5 · 3K+ ratings
Check Price

கடல் புறா 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

4.16/5 · 2K+ ratings
Check Price

யவன ராணி

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

4.17/5 · 1K+ ratings
Check Price