Reviews for கரைந்த நிழல்கள்

30 reviews total

user_6061

★ 4/5 Feb 02, 2026

அசோகமித்திரனின் மறைவுக்குப் பிறகு இந்த அற்புதமான படைப்பை மீண்டும் வாசித்தேன். திரைத்துறையை மையமாக வைத்த சிறந்த நவீனத்துவ நாவல்களில் ஒன்று இது.

திரைத்துறை என்பது அசோகமித்திரன் தன் நிரந்தர கருப்பொருள்களை ஆராயும் கேன்வாஸ் — நவீன வாழ்வின் அபத்தமும் அதன் மீதான அவரது நகைச்சுவையான புன்னகையும். சினிமாத் துறை என்பது எந்த நவீனத் தொழிலின் உருவகமும் ஆகும் — படமெடுப்பது ஒரு கலை என்றாலும், அதோடு தொடர்புடையவர்களின் விதி எழுதப்படுவது பல வழிகளில்.

user_6060

★ 4/5 Feb 02, 2026

நா. முத்துக்குமாரின் "வேடிக்கை பார்ப்பவன்" புத்தகத்தின் மூலம் "கரைந்த நிழல்கள்" எனக்கு அறிமுகமானது. நா.மு. சினிமா இயக்குனர் ஆக சென்னை வர முடிவு செய்தபோது, அவரது தந்தை சிவகுமாரின் "இது ராஜபாட்டை அல்ல" மற்றும் "கரைந்த நிழல்கள்" இரண்டையும் படிக்கச் சொன்னாராம். சினிமாத் துறை பற்றிய தெளிவான முடிவை எடுக்கவே இந்தப் பரிந்துரை. இரண்டையும் படித்த பிறகும் நா.மு. தன் முடிவில் உறுதியாக நின்றார் என்று எழுதியிருக்கிறார்.

அந்த அளவுக்கு சினிமா உலகின் கசப்பான யதார்த்தத்தை வெளிப்படுத்தும் நாவல் இது.

user_6059

★ 5/5 Feb 02, 2026

வண்ணமயமான சினிமா உலகத்தின் வெளிப்புறத் தோற்றம், பார்வையாளனுக்கும் ரசிகனுக்கும் ஒரு கவர்ச்சிகரமான பிம்பத்தை இன்றும் ஏற்படுத்துகிறது. ஆனால், சினிமாத் துறையில் உழலும் ஊழியர்களின் இருளடைந்த வாழ்வும் அவர்களின் வலியும்தான் எதார்த்தமே.

அசோகமித்திரனின் "கரைந்த நிழல்கள்" சினிமாத் துறையில் பல்வேறு மட்டங்களில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய கதை — படத் தயாரிப்பாளர், உதவி இயக்குனர், புரொடக்ஷன் மேனேஜர், குழு நடனப் பெண்கள், ஓட்டுநர்கள், செட் அசிஸ்டன்ட் என பல மனிதர்களின் வாழ்வை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.

user_6058

★ 4/5 Feb 02, 2026

தமிழ் சினிமாத் துறையில் வெற்றிக் கதைகளை நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால் தோல்வியுற்றவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் அரிய புத்தகம் இது. சினிமாவின் கீழ்நிலை தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையை அசோகமித்திரன் சிறப்பாகப் படம்பிடித்துள்ளார்.

user_6057

★ 3/5 Feb 02, 2026

சினிமாவை ஒட்டிய கதைக்களங்கள் மிகவும் குறைவு. அதுவும் சினிமா நட்சத்திரங்களைக் காட்டிலும் திரைக்குப் பின்னால் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றிய கதைக்களம் அதனிலும் குறைவு. அதில் ஒன்றாக இருப்பது அசோகமித்திரனின் இந்தக் கதை.

சந்திரா கிரேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் நொடித்துப்போய் மூடப்படுவதால், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என்ன ஆகிறார்கள் என்பதை விவரித்திருக்கிறார் ஆசிரியர். ரெட்டியார், நடராஜன், ராஜகோபால், ராம்கோபால் ஐயங்கார், சம்பத் ஆகிய கதாபாத்திரங்களின் வாழ்க்கை நிலையற்ற சினிமா உலகின் யதார்த்தத்தைக் காட்டுகிறது.

user_6056

★ 4/5 Feb 02, 2026

60களின் சினிமா படப்பிடிப்பையும் கேமிராவுக்குப் பின்னால் உழைக்கும் மனிதர்களையும் கதைக்களமாக வைத்து எழுதப்பட்ட நாவல்.

ஈர்க்கும் மொழிநடை, புத்திசாலித்தனமாகப் பின்னப்பட்ட சம்பவங்கள்.

user_6055

★ 5/5 Feb 02, 2026

பத்தொன்பது வயது சினிமாக்காரனாகிய நான், என் குறுகிய கால சினிமா அனுபவங்களையும் நான் வரும் காலங்களில் அனுபவிக்கப்போவதையும் இரத்தமும் சதையுமாய் பிண்ணி எழுதிய நாவல்!

user_6054

★ 2/5 Feb 02, 2026

சினிமாவின் பின்புறம் வேலை செய்யும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் பாடுகளை, வீழ்ச்சி எழுச்சியைப் பற்றிப் பேசுவதால் மட்டும் இது நல்ல நூல் என்று ஆகுமா? அல்லது தமிழில் இப்படி ஒரு நாவல் முதல் முறையாக வந்ததால் இவ்வளவு புகழா?

இந்தக் கேள்வி என் மனதில் எஞ்சியது.

user_6053

★ 4/5 Feb 02, 2026

சினிமா உலகின் நிலையற்ற தன்மையை விவரிக்கும் முக்கியமான நாவல். சினிமா தயாரிப்பின் அநீதியான உலகை திறம்பட சித்தரிக்கும் தமிழ் நாவல்களில், இதுவும் சுஜாதாவின் "கனவு தொழிற்சாலை"யும் மட்டுமே குறிப்பிடத்தக்கவை.

user_6052

★ 5/5 Feb 02, 2026

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாசித்த தமிழ் நாவல். சினிமாத்துறை பற்றி எழுதப்பெற்ற மிக முக்கியமான படைப்பு.

எழுதப்பட்டு 45 ஆண்டுகள் கடந்தும், இக்காலத்தில் புகழப்படும் டரண்டினோ பாணி நேரியல் அல்லாத அத்தியாயங்கள், ஒரே நிகழ்வை இருவேறு கதாபாத்திரங்கள் மூலம் சொல்லும் தொலைநோக்கிப் பார்வை, முதல்-உச்சம்-முடிவு என்ற சூத்திரமில்லாத கதாபாத்திர வடிவமைப்பு என இந்நாவல் தொடும் உச்சம் மிக அதிகம்.

கரைந்த நிழல்கள் — உலக நாவல் கதையாடலில் ஒரு மகத்தான மைல்கல்.