One of the Important Evidence in 20th Century Tamil Literature.
This is One of the Important Evidence in 20th Century Tamil Literature penned by Na. Parthasarathy. Though I read the Novel when I was College Student about 40 Years Back, extremely happy to read again in Amazon Kindle.
But there are plenty of Proof Mistake in Kindle Edition. Kindly rectify the same.
One of the big book I read recently. Very nice writing. It was written in 1960s. But the Protagonist's feeling are still relevant. Some descriptions were too extensive may not upto date :) like Sathyam's friend is thinking about his feet and comparing with lotus.. otherwise it was very good like sathyamoorthy's explanation of kurunthogai poem ...
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
Except climax everything is great...
Usual love triangle but very well written
பொன் விலங்கு
படித்ததில் பிடித்தது
இந்த கதையை ஒரு கற்பனை கதையாக என்னால் எண்ணமுடியவில்லை, மிக அருமையான நாவல்.
Finished the great book. The author Na Pa has greatly touched the human emotions, politics, wit and arts gently and vigorously. His wisdom of world literature is splendid. Tho it’s a lengthy book not a single page was unnecessary or boring. Can’t wait to explore more books from the author.
பொன் விலங்கு- ஆசிரியர் நா.பார்த்தசாரதியின் அற்புதமான படைப்பு.இவர் படைப்பில் இயற்கை பண்புகள் ஆகவே தோன்றும் கதாபாத்திரங்கள் குணம் சற்றே எல்லா மனிதர்களிடமும் இருந்து மாறுபட்டதாகவே கூறவேண்டும் எனினும் அவை நேர்மையும் நீதி தவறாது நிற்கும் மாண்பை எடுத்துரைக்கும் வகையில் இருப்பது சிறப்பு.கதையின் இடையிடையே இவர் கூறும் பொன்மொழிகள் சமூகம் சார���ந்தும், மனிதர்களின் குண நலன்களையும் பற்றி எடுத்துரைத்தாலும் அவைகளை கதையில் பொருத்திய இடங்கள் அனைத்தும் மிகச்சிறப்பு.
இதுவரை நான் வ���சித்த எந்தப் படைப்பும் ஏற்படுத்திய பாதிப்பை இந்நூல் என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது.
*ஆளப்படுகின்ற அன்பை விட ஆட்படுகின்ற அன்பே உயரியது.
*நிறைய அன்பு செய்பவருற்கு நிறைய துயரங்கள் நேரும் ஏனெனில் அன்பு எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றதோ அவ்வளவு தூரம் துயரங்களும் நேரும்.
என்ற கருத்துக்கள் கதைக்கு பொருத்தமா இருந்தாலும் மனித வாழ்க்கைக்கு உகந்த கருத்துக்களில் ஒன்றாகும்.
ஒரு பெண் தற்கொலை செய்யும் போது அவளுடைய மனம் என்னவெல்லாம் சிந்தித்து இருக்கும் என்பதையும் ஒரு மன உறுதி மற்றும் திடம் கொண்ட ஒருவர் தன் வாழ்க்கையில் இதுவரை கண்டிராத ஒரு மகிழ்ச்சியை கண்ட ஒருவரது இழப்பை எதிர்கொள்ள முடியாமல் உடைந்து போவதை எடுத்துரைக்கும் போது கண்ணீரை எளிதாக அவர்தம் எழுத்துக்களால் வரவழைக்கிறார்.
"கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் அல்லவா"
பொன் விலங்கு...
இந்த நாவல் திரு நா. பார்த்தசாரதியால் புனையப்பட்டது. நாவலைப் படிக்கும் போது ஆசிரியர் படிப்பவரின் மனதைத் தொடும் படி அவரது எழுத்துக்கள் பின்னிப் பிணைந்து நேர்த்தியாகக் கதைக் கலத்தைக் கையாண்டிருப்பார் எழுத்தாளர். இந்தக் கதை ஓர் அழகிய முக்கோணக் காதல் கதை. படிப்பவர் மனம் கோணாதவாறு எழுத்தாளர்க் கதையை நகர்த்திச் சென்றிருப்பார்.
கதைக் கலம் மதுரையில் ஆரம்பமாகும், கதையின் நாயகன் (சத்தியமூர்த்தி) அவருக்கு இரண்டு தங்கைகள் மூத்தவள் (ஆண்டாள்) இளையவள் (கல்யாணி). தந்தை ஓர் ஆரம்பக்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வும் பெற்று வீட்டில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அதில் வரும் பணத்தை வைத்துக் காலத்தை நகர்த்தினார்கள்
நமது சத்தியமூர்த்தியோ கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு வேலைத் தேடிக் கொண்டியிருக்கும் சமயம், அவன் மிகவும் நேசிக்கும் தமிழ் விரிவுரையாளருக்கான நேர்காணலில் கலந்து கொள்ள வரும்படி மல்லிகைப் பந்தல் கலைக் கல்லூரியில் இருந்து கடிதம் கிடைத்தவுடன் சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் என்னும் இடத்துக்குப் புறப்பட்டான்.
கல்லூரியின் நிர்வாகித் திருப் பூபதி அவர்கள் மற்றும் கல்லூரியின் முதல்வர் நேர்காணலில் கலந்துகொண்டனர். நேர்காணலில் வெகு அழகாகவும் நேர்த்தியுடனும் பதில் சொன்னமையால் நிர்வாகி நேர்காணல் முடிந்தப் பிறகு திருப் பூபதிக்கு அவன் மீது ஒரு நல்ல அபிப்ராயம் மனதில் எழுந்தவுடன். சத்தியமூர்த்தியிடம் நீங்கள் ஊருக்குக்கிளம்புங்கள் செய்தித் தேடி வரும் என்று சொல்லி அவனை அங்கு இருந்து வழி அனுப்பிவைத்தார்.
சத்தியமூர்த்தியின் உரையாடலைக் கேட்டுப் பூபதியின் மகள் (பாரதி) மனம் நெகிழ்ந்து (சத்தியமூர்த்தியே) இந்த விரிவுரையாளருக்கான இடத்துக்கு வரவேண்டும் என்று மனதார நினைத்தாள்.
நேர்காணலை முடித்துவிட்டு மதுரைத் திரும்பும்போது தொடர்வண்டியில் கதையின் நாயகியின் அறிமுகம்.
கதையின் நாயகி(மோகினி) இவள் ஒரு நாட்டிய நங்கை. சத்தியமூர்த்திப் பயணிக்கும் அதே பெட்டியில் கதையின் நாயகி மோகினி மற்றும் அவளது அம்மாவும் பயணித்தார்கள்.
சிறிது நேரம் ஆனவுடன் சத்தியமூர்த்தி உறங்கச் சென்றான். அந்தச் சமயம் பார்த்து அம்மாவுக்கும் மகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது சற்றே முற்றவே மோகினி மனம் உடைந்துத் தற்கொலைக்கு முயலும் போது திடீர் என்று சத்தியமூர்த்தி அவளைக் காப்பாற்றினான். அவனால் முடிந்த மட்டும் அவளுக்கு ஆறுதல் கூறி மனதைத்தேற்றினான்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு சத்தியமூர்த்தியை மானசிகமாகக் காதலிக்க ஆரம்பித்துவிட்டாள் மோகினி.
சத்தியமூர்த்தி மற்றும் அவனது நண்பன் குமரப்பன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் கல்லூரிக் காலத்தல்யிருந்து. தனது சுகத் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நல்ல நண்பர்கள். குமரப்பனோ குத்து விழுக்கு என்னும் பத்திரிக்கையில் பணிபுரிகிறான், படங்கள் உரைதல் புகைப்படம் எடுப்பது போன்ற வேலைகளைச் செய்பவன்.
சத்தியமூர்த்திப் பல நாள் எதிர்பார்த்துக் காத்திருந்தான் மல்லிகைப் பந்தல் கல்லூரியில் இருந்த பணி நிமித்தமாக அவனுக்கு ஒப்பந்த ஆனை வரும் என்று. ஆனால் அவன் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.
இதன் காரணமாகச் சற்று மனம் தளர்ந்துக் காணப்பட்டான். அப்போது ஒரு நாள் மோகினி அவன் வீட்டுக்கு வந்து அவனுடைய பேனாவைக் கொடுத்து என்னை மறந்து விடாதீர்கள் என்று கூறிச் சென்றாள்.
அதற்குப் பிறகு கதையின் நாயகன் மற்றும் நாயகிக்கு நடக்கும் உரையாடலை அனைத்தையும் அற்புதமாக எழுத்தாளர்த் தனக்கே உரித்தான பாணியில் எடுத்துக் கூறியிருப்பார்.
ஒரு வழியாகப் பணி நிமித்தமாக ஒப்பந்த நகல் அவனுக்கு வந்தவுடன் மல்லிகைப் பந்தல் கல்லூரிக்குப் புறப்பட்டான்.
மல்லிகைப் பந்தல் கல்லூரியின் நிர்வாகியின் மகள் பாரதி அவன் வருவதர்க்காக காத்திருந்தாள். அவள் அவன் மீது ஒருதலையாகக் காதல் வயப்பட்டாள். ஆனால் சத்தியமூர்த்தியின் மனமோ மோகினி நினைப்பில் இருக்கப் பாரதி அவனிடம் நெருங்கிப் பேசவரும் போதெல்லாம் அவளை எப்படித் தவிர்ப்பது என்று சிந்தித்துப் பேசுவான்.
முதல் நாளில் இருந்தே சத்தியமூர்த்திக்குச் செறியான வரவேர்ப்பு மற்ற ஆசிரியர்களிடம் இருந்தும் மற்றும் முதல்வர் துணை முதல்வர் இடம் இருந்தும் கிடைக்கவில்லை. இருவருமே சத்தியமூர்த்தியிடம் பாரபட்சமாக நடந்தார்கள்.
சத்தியமூர்த்தி எப்படி இந்தக் கல்லூரியில் பணியாற்றினான்? அவன் மோகினியுடன் சேர்ந்தானா? பூபதிக் கல்லூரி நிர்வாகி என்னவானார். பாரதியின் ஒரு தலைக் காதல் என்னவாயிற்று? போன்ற பல கேள்விகளுக்குப் பதிலை நாவலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
பாலமுருகன். லோ
இந்த கதையை விரும்பி படித்த அளவிற்கு வேறு எந்த கதையையும் படித்தில்லை.
மரணத்தை (மோகினி)கூட இவ்ளொ அழகா யாராலும் சொல்ல முடியாது...😢😢
இந்த கதை படித்து முடித்திலிருந்து கதையின் ஒவ்வொரு நிகழ்வும் என்னுள் தோன்றிக்கொண்டே உள்ளது.
ஒரு ஆணும் பெண்ணும் செய்கின்ற காவியக்காதலில் காதல் தோற்றால் முடிவில் இருவரில் ஒருவர் அழுதுக்கொண்டே இருப்பர்(இதை சத்தியம் தான் மோகினியிடம் கூறுவார்...முடிவில் சத்தியமூர்த்திக்கே அப்படி அமைந்துவிட்டது).
சத்தியம் போன்ற நேர்மையான ஆசிரியர்கள் இந்த சமுகத்திர்க்கு மென்மேலும் தேவை☺💐
It is a great love based novel. Its has all the ingredients of a masala movie - triangle love (Bharathi - Sathyamoorthy - Mogini), great hero (Sathyamoorthy), villan (Jamindar). It a good feeling to read a great love story in tamil. Mogini's character will almost make us to cry. One of the best novel I have read till date.
Read it and feel it.
நா.பார்த்தசாரதி இந்த கதையில் கூறுவது போல - "சொல்லுக்கும் நினைப்புக்கும் எந்த இடத்தில பொருள் முடிகிறதோ அங்கேதான் உணர்ச்சி பிறக்கிறது. அந்த உணர்ச்சியை சொல்வதற்கு சரியான பாஷை எதுவும் இல்லை."
இந்த கதை படித்து முடிக்கும் போது இது எவ்வளவு உண்மை என்று தெரியும்.
More like 2.5 stars, maybe due to the time it has been written i didnt like the story. But liked the ending and few parts. It kept me hooked good writing style but i dont agree with so many points and i need a strong female character. Not a weak, cry baby fmc. And i did like some characteristics of mmc bt i hate it though process and his jealousy.