பாண்டிமாதேவி [Paandimaadevi]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பாண்டிமாதேவி [Paandimaadevi]

None

3.62/5 · 100+ ratings

‘பாண்டி மாதேவி’ என்னும் இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அற்புதமான காலைப்போதில் கன்னியாகுமரிக் கடற்கரையில் வீற்றிருந்தேன். நீலத்திரைக் கடலின் அடி மூலையில் செஞ்ஞாயிறு கதிர் விரித்து மேலெழும் காட்சியின் மாட்சியில் எனது நெஞ்சும், நினைவும், புலன்களும் ஒன்றிப்போய்த் திளைத்திருந்த நேரம்.

Reviews

user_15088

Another wonderful work from Amarar Na.Parthasarathy sir..!!

user_15087

★ 4/5
It's based on real story.

user_15086

★ 4/5
This is really a good one .... !

user_15085

★ 3/5
Good.

user_15084

★ 3/5
26-11-2022

user_15083

★ 4/5
Another master piece from Na.Paa. Want to read again Mannan Mangal of Sandilyan , which narrates the capturing back of Pandiya,s crown and the sword …

user_15082

★ 3/5
கதையின் முடிவு இன்னும் சிறப்பாக அமைத்து இருக்கலாம்

user_15081

★ 5/5
Nice Story. Very Nice writing by author. But the end I feel could have been changed. Though I am not authorized to say this this is my humble opinion.

user_15080

★ 4/5
Since the novel is based on some true events the ending is not bothering me much. But once u read Ponniyin selvan not every historical fiction is going to satisfy you. But keeping PS aside this story picks up slow and doesn’t give a satisfaction of finishing 3 parts but Na.Paa’s illustrations are subtle I’d give a 4

user_15079

★ 2/5
A good book which can engage you but I really wasn't expecting the ending to be rushed like that especially when there wasn't any clue on any wrong doings of மகாமண்டலேஸ்வரர்! He was portaryed as a perfect administrator who does only things are necessary to keep the administration stay afloat but then suddenly in the last few chapters he considers himself guilty and gets himself killed!!! It was completely baseless.Also,I felt like there is no relevance to the title.In the end,The Queen actually makes her son flee while he was still talking about that last chance to talk with the protestors and settle down matters!

user_15078

★ 4/5
பாண்டியர்களை மையமாக வைத்து (protagonists) எழுதப்பட்டுள்ள பாண்டிமாதேவி அருமையான சரித்திர நாவல். கால ஓட்டத்தில் பொன்னியின் செல்வனுக்கு சற்று முன்பு நடக்கும் கதை. நா. பா. இந்தக் சரித்திரப் புனை கதையை விறுவிறுப்பாக நடையில் எழுதியுள்ளார். பல்வேறு கதாபாத்திரங்கள், பல்வேறு கதை இழைகள் கொண்டுள்ள இந்தக் கதையின் முடிவும், இதில் உள்ள எதிர்பாராத திருப்பங்களும் வாசகர்களுக்கு நிச்சயம் சுவாரசியமாக இருக்கும். பாண்டிமாதேவி, மஹாமண்டலேஸ்வரர், தளபதி வல்லாளத்தேவன், சேந்தன் - இந்த நான்கு கதாபாத்திரங்களையும் நா. பா. அருமையாக உருவாக்கியுள்ளார். இந்தக் கதையில் வரும் சில கதாபாத்திரங்கள் பொன்னியின் செல்வனின் வரும் கதாபாத்திரங்களை நினைவு படுத்தக் கூடும். அப்படி உங்களுக்குத் தோன்றினால் தயவு செய்து கல்கியின் கதாபாத்திரங்களையும் , நா. பாவின் கதாபாத்திரங்களையும் ஒப்பிடுவதை அறவே தவிர்த்து கதையை படித்து மகிழுங்கள். அவ்வாறு செய்யாவிட்டால் உங்க���ுடைய கணிப்பில் அனாவசியமாக குறைந்த மதிப்பெண்கள் பெரும்.

user_15077

★ 5/5
கிபி 900-ல் இருந்த பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களைகொண்டு கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. கதையின் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அழகாக விளக்கப்பட்டு அவர்களின் உருவங்களை மனக்கண்ணில் நாமே செதுக்கிக்கொள்ள ஆசிரியர் மிகவும் முயற்சித்திருக்கிறார். முக்கியமாக இடையற்று மங்களம் நம்பி ( ராஜா தந்திரியாகவும்), வானவன் மாதேவி, மூன்றாம் ராசசிம்ம பாண்டியன் , தளபதி வள்ளாளதேவன், ஒற்றன் நாராயண சேந்தன், அதங்கோட்டாசியர், பவழகனிவாயர், நம்பியின் மகள் குழல்வாய்மொழி, தளபதியின் தங்கை பகவதி, அதங்கோட்டாசியர் மகள் விலாசினி ஆகிய அனைவரை பற்றியும் தேவையான இடங்களில் தேய்வைக்கேற்ப அவர்களின் குணத்தையும், தோற்றத்தையும் அளந்து கொண்டிருப்பார் ஆசிரியர். கதையானது பராந்தக பாண்டிய மன்னன் மறைவுக்கு பின், அவன் மனைவி பாண்டிமாதேவி அரியணையில் அமர, அவர்களின் ஒரே புதல்வன் மூன்றாம் ராசசிம்மன் அப்போது நடந்த போர் ஒன்றில் சோழர்களிடம் தோற்றுப்போய் பாண்டியநாட்டின் தலைநகர் மதுரையை இழந்து உயிர் தப்பி, இலங்கையில் அவன் நண்பன் மூன்றாம் காசிபு மன்னனுக்குட்பட்ட எல்லையில் இருக்கிறான். இப்படி ஒரு சூழ்நிலையில் ஆரம்பிக்கும் கதை, மெல்ல மெல்ல சோழர்களின் தந்திரங்களால் ஒருபக்கம் முழு பாண்டிய நாட்டையும் அடைய போடும் சதி திட்டங்கள், இதனால் ஏற்படும் சிறு சிறு உள்நாட்டு பிரச்சனைகள், இளவரசன் இல்லாத நாட்டின் தலைவி வானவன் மாதேவிக்கு ஏற்படும் இன்னல்கள், வல்லாளதேவனுக்கும், இடையற்று மங்களம் நம்பிக்கும் ஏற்படும் சந்தேகங்கள் இப்படி எல்லா கோணங்களிலும் விரியும் கதை. இந்நூல் வழியாக கற்று கொண்ட சில விஷயங்கள், நாண்மங்கலம் (மன்னர்குலத்தில் உள்ளவர்களின் பிறந்த நாள் விழா), ஓப்புரவு மொழி மாற ஓலை (தற்போது உள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்), பாண்டியர்கள் காலத்திருந்த சமண குருக்களின் பங்கு, தென்பாண்டியில் முத்தெடுக்கும் திருவிழாவின் சிறப்பு, வந்தவர்க்கெல்லாம் பசிபோக்க பாண்டியர்கள் வைத்திருந்த முன்சிறை அறக்கோட்டம் , கன்னியாகுமரியில் குடிகொண்ட பாண்டியர்களின் குலதெய்வம் குமரியன்னையின் பெருமை, கைமுக்கு தண்டனை, ஏனாதி பட்டமும் அதற்கு வழங்கப்படும் ஏனாதி மோதிரமும், தென்பாண்டி நாட்டின் முக்கிய இடங்கள் (விழிஞம், பறளியாறு, காந்தளூர், கரவந்தபுரம் உக்கிரன்கோட்டை, சுசீந்திரம் இன்னும் பல), பாண்டிய மன்னர்களின் உள்ளாட்சி நிர்வாகம் கூற்றம், நாடு போன்றவைகள், இலங்கையின் எழில், காசிப மன்னரின் பிறந்தநாள் விழா இது போன்று நிறைய தகவல்களை கொண்ட களஞ்சியமே பாண்டிமாதேவி. வரலாற்று உண்மைகள்: பராந்தக மன்னன் இறந்ததும் சோழர்கள் மதுரையை கைப்பற்றியது, கோப்பரகேசரி சோழன் சேர்த்த கொடும்பாளூர் அரசன், கீழைபழுவூர் பழுவேட்டரையன் கண்டன் அமுதன், அரசூரடையான் சென்னி பேரரையன் மற்றும் பரதூருடையன் ஆகியோர் அடைங்கிய ஐவர் குழு (இடைக்கால பாண்டியர்களிடம் இருந்து முழு பாண்டிய நாட்டை வென்ற கூட்டணி), மூன்றாம் ராசசிம்மன் பாதுகாக்க இலங்கை எடுத்து சென்ற பாண்டியர்களின் சுந்தரமுடி, வாள் (சந்திரஹாசம்) மட்டுறும் குடை, ராசசிம்மனுக்கு உதவிய இலங்கை தளபதி சக்கசேனாதிபதி, இது போன்ற உண்மை நிகழ்வுகள் கதையோடு பின்னிக்கொண்டிருக்கும். செம்பவள தீவு என்று ஊர் இடம் இக்கதையில் வரும், அது எந்த இடம் என்று புலப்படாது போனாலும், அத்தீவின் அழகு சிறப்பாகவே விவரிக்கப்பட்டரிக்கும். கதையின் ஆரம்பத்தில் மஹாமண்டலேஸ்வரர் இடைக்காற்று மங்களம் நம்பி, திறமை மிக்க ராஜா தந்திரியாக விவரிக்கப்பட்டாலும், பின் நமக்கே அவர்மேல் சந்தேகம் உண்டாகும் வண்ணம் கதை நகரும். குழல்வாய்மொழியும் அப்படித்தானே. ஆனால் இருவரும் இறுதியில் நல்ல அழுத்தத்தை கதையில் பதிக்கிறார்கள். மதிவதனி மற்றும் விலாசினி கதையின் இறுதியில் கண்டுகொள்ளாப்படாமல் போனார்கள். கதையின் இறுதியில் பாண்டியர்களின் வாரிசான மூன்றாம் ராசசிம்மன் நம் கவனத்தில் வலுவிழந்து, அதிகம் பெண்களால் லயித்தவனாகவும், நாட்டின் முக்கியமான போர் காலங்களில் பொறுப்பில்லால் இலங்கையில் பதுங்கி இருப்பதாகவும், இறுதியில் மீண்டும் போரில் தோற்று இலங்கை செல்வதும் அவன் மீதுள்ள சிறும்பான்மை எண்ணத்தையே வளர்கின்றன. ஆனால் ஏனைய வரலாறுகள், மூன்றாம் ராசசிம்மன் கிபி 900ல் முடிசூடி, வெள்ளலூர் போரில் சோழர்களிடம் தோற்று தெண்டபாண்டி நாட்டை விட்டு இலங்கை செல்வதாக கூறுகிறது. ஆனால் இக்கதையோ அவனை இளவரசனாகவும், அவன் தாய் அவனுக்கு முடிசூட காத்திருப்பதாகவும் விவரிக்கும். எனவே பாண்டியர்கள் காலத்திற்கு சென்று அங்கு நடந்த வரலாறை நேரில் பார்ததது போன்ற பிரம்மையை இந்நாவல் ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

user_15076

★ 4/5
மீண்டும் மீண்டும் பொன்னியின் செல்வனே களமாடுகிறதா அரசியலில்? பாண்டிமாதேவிக்கு பொன்னியின் செல்வனை போன்ற கதைக்களம். அறிவில் சிறந்த மஹாமண்டலேஸ்வரர்(அநிருத்த பிரம்மராயர்), அவருடைய ஒற்றன் சேந்தன்(ஆழ்வார்க்கடியான் நம்பி), ஆற்றலுக்கு வல்லாளதேவன்(வந்தியத்தேவன்), கழற்காற் மாறனார்(சம்புவரையர்), குழைக்காதன்(கந்தமாறன்), மதிவதனி(பூங்குழலி), குழல்வாய்மொழி(வானதி) மற்றும் குமாரபாண்டியன்(அருள்மொழி) என பாண்டிமாதேவியின் ஒவ்வொரு கதாபாத்திரத்திடமும் ஒரு பொன்னியின் செல்வன் கதாபாத்திரம் நிழலாடுகின்றது. நா.பார்த்தசாரதியின் எழுத்துக்கள் அவ்வப்பொழுது மண்டையில் தட்டி இது பாண்டிமாதேவி என்று உரைத்தாலும் கதாபாத்திரங்களின் குணநலன்கள் அப்பட்டமாக பொன்னியின் செல்வனுக்கு இழுத்து செல்கின்றன. பொன்னியின் செல்வன் படிக்காது முதலில் பாண்டிமாதேவி படித்திருந்தால் தோன்றியிருக்காது போலும். பொன்னியின் செல்வனை நினைவு கூறாது ஒதுக்கி வைத்து படித்தால் பாண்டிய சாம்ராஜ்யத்தை விளக்கும் மிக தொன்மையான புதினம் பாண்டிமாதேவி.
Shelves
book Historical Fiction Na. Parthasarathy

More like this


நந்திபுரத்து நாயகி [Nandhipurathu Nayagi]

கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையு…

3.62/5 · 100+ ratings

மகாபாரதம்: அறத்தின் குரல் [Mahabharatham: Aratthin Kural]

Mahabharatham one of the two epics of great India. In tamil, this great epic is written in form of poems by many great people (Perundevanaar, Vill…

3.62/5 · 100+ ratings

உடையார் - பாகம் 6 [Udaiyar - Part 6]

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…

3.62/5 · 100+ ratings

காவல் கோட்டம்

2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இந்த புதினம் …

3.62/5 · 100+ ratings

Sivakamiyin Sabadham, Volume 1: Paranjyothi's Journey

A masterpiece by Kalki Krishnamurthy, recipient of India's highest literary honour – the Sahitya Akademi Award, 'Sivakamiyin Sabadham' is a…

3.62/5 · 100+ ratings

Trial by Silence

ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…

3.62/5 · 100+ ratings

Sivakamiyin Sabadham, Volume 4: Shattered Dream

"To meditate lifelong At the feet of Our Lord" Kalki's choice of Thirunavukkarasar's words to end his novel is indicative of the shift from…

3.62/5 · 100+ ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

3.62/5 · 100+ ratings

Ponniyin Selvan - The Pinnacle of Sacrifice, Vol. 1

The first volume of the fifth part in the series Ponniyin Selvan, deals with the life of Prince Arulmozhivarmar who is Ponniyin Selvan and the you…

3.62/5 · 100+ ratings

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

One of the greatest books ever written in Tamil by Amarar Kalki - A historical fiction based on the life of Raja Raja Chola - one of the greatest …

3.62/5 · 100+ ratings

மோகினித் தீவு-1

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இரண்டு அற்புதமான குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. கற்பனை வளமும் விறுவிறுப்பும் நிறைந்த 'மோகினித் தீவு' மற்றும் வரலாற்று…

3.62/5 · 100+ ratings

ராஜமுத்திரை I [Rajamuthirai]

Author: Sandilyan

மரங்களின் இருளில் மறைந்து நின்ற கொடியவர்களைப் பற்றியோ, அவர்கள் விளைவிக்கவிருந்த கொடுமையைப் பற்றியோ, கடுகளவும் அறியாமல் நிதான நடை போட்டு வந்து கொண்டிருந்த அந்த வாலிபனுக்…

3.62/5 · 100+ ratings