அக்கினி பிரவேசம் [Akkini Pravesham]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அக்கினி பிரவேசம் [Akkini Pravesham]

None

4.21/5 · 39 ratings

Akkini Pravesham | அக்கினி பிரவேசம் Tamil Novels

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_20318

★ 5/5
**Spoiler Alert**Book - அக்கினி பிரவேசம் Author - ஜெயகாந்தன் அக்கினி பிரவேசத்தில் வரும் எந்த கதாபாத்திரங்களுக்கும் பெயர் இல்லை...கதையின் தொடக்கம் மழை பொழியும் ஒரு மதிய வேளையில் தொடங்குகிறது...பெண் கல்லூரியின் முன் பேருத்திற்காக சில மாணவிகள் காத்திருக்கிறார்கள்... அதில் மாலை 5:30 மணிக்கெல்லாம்  மற்றவர்கள் அனைவரும் கிளம்பிவிட்டனர்...மாலை 6 மணி ஆகியும் பேருந்து வராததால் சிறியவள் ஒருவள் மழையில் மாட்டிக்கொள்கிறாள்... அவள் தான் இக்கதையின் நாயகி... அப்போது அவள் முன் ஒரு கார் வருகிறது... இவளும் தனக்கு உதவி கரம் நீட்டுவதை தவிர்க்க இயலாமல் அக்காரில் பயணிக்கிறாள்...நாயகியின் குடும்பம் பொருளாதார பின்புலமற்றவர்களாவும்... அவள் குழந்தை குணம் கொண்டவளாகவும் இருப்பதால்... அந்த கார் அவளுக்கு அதிசயத்தின் ஒரு அங்கமாய் தோன்றுகிறது... அந்த கார் பயணம் அவளுக்கு ஒரு புதிய அனுபவமாக தோன்றினாலும்... முன்பின் தெரியாத ஒருவருடன் காரில் பயணிப்பது அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியது...அவள் பயந்தது போல அந்த கார்க்காரன் அவளிடம் நெருங்குகிறான்...  அப்போது பலமாக ஒரு இடி இடிக்கிறது... "என்னை என் வீட்டில் விட்டுவிடுங்கள்..." என அவள் கெஞ்சுகிறாள்... "என் அழகான மாலை பொழுதை கெடுத்து விட்டாய்..." என கோபமுறுகிறான் அவன்.அவன் வேகமாக வெளிய இறங்கி முன் சீட்டிற்கு செல்ல திறந்த கதவின் வழியாக அவள் மீது சேறு தெறிக்கிறது... இந்த உவமையின் மூலம் அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதை ஒப்பிட்டுக் காட்டுகிறார் ஜெயகாந்தன்...ஒரு கட்டத்தில் அவன் குற்ற உணர்ச்சி கொண்டு அவளிடம் மன்னிப்பு கேட்டு அவளை வீட்டில் இறக்கி விட்டு செல்கிறான்.வீட்டிற்கு வந்ததும் நடந்ததை எல்லாம் அவள் அம்மாவிடம் சொல்லி அழுகிறாள்... அவள் அம்மா ஆத்திரம் தீர அவளை அடித்து விட்டு இனி அவளை தண்டிப்பதாலோ குறைக் கூறுவதாலோ எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து...அவளை குளியல் அறை அழைத்து சென்று "நீ சுத்தமாயிட்ட டி கொழந்த..." என அவள் மீது படிந்த கறை போகும் அளவிற்கு அழுத்தி தேய்த்து குளிப்பாட்டுகிறார்... பிறகு பூஜை அறை அழைத்து சென்று "இந்த விஷயம் வெளியே யாருக்கும் தெரியா கூடாது..." என சத்தியம் வாங்குகிறார்..இப்போது அவள் தெளிவு பெற்று "இனி என் முன் எந்த காரும் வரக்கூடாது... நான் எந்த காரின் முன் விழுந்து விடக் கூடாது..." என ஜாக்கிரதையாக இருக்கிறாள்.இக்கதையில் மேலோட்டமாக சிலருக்கு முரண்பாடுகள் தோன்றினாலும்... இக்கதையில் கதைக்கரு மிக ஆழமனது...கற்பு என்பது உடலை சார்ந்தது இல்லை மனம் சார்ந்தது... பாதிக்கப்பட்ட பெண்ணை குறை கூறுவதிலோ... தண்டிப்பதிலோ எந்த பயனும் இல்லை... அந்நேரத்தில் அந்த பெண்ணிற்கு ஆதரவும்... தன்னம்பிக்கை & தைரியம் அளிக்கும் பேச்சும் தான் தேவை என்பதை ஆழமாய் உணர்த்துகிறது...my favourite lines from this book"தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்... அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக்கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார். எல்லாம் மனசுதாண்டி. மனசு சுத்தமா இருக்கணும்."I read from: Ananda Vikatan website pageTotal pages: 20 pagesஅக்கினி பிரவேசம் - கற்பு என்பது ஒரு மனநிலையே அன்றி உடல் சார்ந்தது அல்ல Rating: ⭐⭐⭐⭐⭐

user_20317

★ 5/5
Every one should read

user_20316

★ 5/5
dont judge anyone everything depends upon there part of view jk hatsoff

user_20315

★ 4/5
A book that was way ahead of its time.

user_20314

★ 2/5
Very Regressive

user_20313

★ 5/5
Emotional & Believe & Progressive think

user_20312

★ 4/5
அக்கினி பிரவேசம் சிறுகதை 1966 - களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த கதையில் எனக்கு பிடித்த விடயம் எந்த ஒரு முற்போக்கு நெடி, கருப்பு வெள்ளை கதாபாத்திரங்கள் இல்லாமல் இயல்பாக உள்ளது. ஆதி உணர்வான காமத்திற்கும், நிகழ்கால கலாச்சார மதிப்பீட்டிற்குமான முரண்பாட்டை கலாச்சார விழுமியங்கள் மூலமாகவே கடக்க முயல்கிறது.

user_20311

★ 5/5
படிக்க வேண்டிய புத்தகம். கற்பு உடல் அளவில் இல்லை மனதளவில் என்று உணர்த்தும் சிறுகதை

user_20310

whether we become the ash or become the phoenix is up to us
Shelves
book ஜெயகாந்தன் Jayakanthan

More like this


வாழ்க்கை அழைக்கிறது [Vaazhkai Azhaikkiradhu]

இது என்னுடைய முதல் நாவல் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதில் வரும் பாத்திரங்களிடையே குணமும் உண்டு குறையும் உண்டு. வாழ்க்கை யாரையும் ஓதுக்கி வைத்து விடவில்லை. அவர்களு…

4.21/5 · 39 ratings
Check Price

கருணையினால் அல்ல [Karunaiyinaal Alla]

அமைதியான விஷயங்களை அணுகும் எழுத்தும் அமைதியான ரசனையும் கூட நம்மிடையே வளர வேண்டும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்த முயற்சியில் தான் பல சிறுகதைகளை எழுதியுள்ளதா…

4.21/5 · 39 ratings
Check Price

அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் [Appuvukku Appa Sonna Kathaigal]

வறுமையையும் ஏழ்மையையும் காட்டியபோது நான் அனுதாபப் பிச்சை கேட்டதில்லை. அங்கேயும் வாழ்வின் துடிப்பையும் அதன் மகத்துவத்தையும் நான் காட்டி இருக்கின்றேன். அதன் மகத்துவத்தைக் காட்டவ…

4.21/5 · 39 ratings
Check Price

ஜெயகாந்தன் நாவல்கள் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்)

ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தா…

4.21/5 · 39 ratings
Check Price

ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது

தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன்.சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் ச…

4.21/5 · 39 ratings
Check Price

ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்)

ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெய…

4.21/5 · 39 ratings
Check Price

பிரம்மோபதேசம் [Brammopadhesam]

நமது பழைய பெருமைகளையும் இந்தியாவின் ஆன்மாவையும் கொன்று வரட்டு சீலம்பேசி,வேற்றுமை வளர்த்து, இரட்டை வேடம் போட்டு திரியும் ஜாதிப்பித்திலும் வரட்டு கெளரவத்திலும் தன்னை அழித்…

4.21/5 · 39 ratings
Check Price

காத்திருக்க ஒருத்தி [Kaatthirukka Orutthi]

ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய சிறுகதை, வெயிட்டிங் என்ற தலைப்பிட்ட ஓவியத்தின் பலபாவங்களின் நிழலுருவாய் நிற்கிற அந்தப் பெண் ஆசிரியரின் கதையின் அழகம்மா ஆனாள்.

4.21/5 · 39 ratings
Check Price