நறுமணம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நறுமணம்

Narumanam

Author: Imaiyam
4.1/5 · 21 ratings

N/A

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_19348

★ 4/5
இதில் இடம்பெற்றுள்ள கதைகளில் என்னை கவர்ந்தது "ஈசனாருல்" மற்றும் "நறுமணம்". ஒரு நேர்காணலில் இயக்குனர் ராம் சொல்லி கேட்டது இது "ஒரு சமூக மாற்றத்தை, கலாச்சார மாற்றத்தை, மற்றும் நடைமுறை வாழ்வியலை ஆண்களை விட பெண்கள் சீக்கரம் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் வாழ கற்றுக்கொள்கின்றனர். ஆண்கள் சற்று தாமதமாகவே இதை உணர்கின்றனர்." இதில் இடம்பெற்றுள்ள பல கதைகள் இதையே தான் உணர்த்துகின்றன. உதாரணத்திற்கு "மணீயார் வீடு". முக்கியமாக தொழில் நுட்பத்தின் வளர்ச்சி குடும்பங்களை எவ்வாறு குலைக்கின்றன எனவும் இமையம் உணர்த்துகிறார். இமயத்தின் எழுத்து ஆச்சர்ய மூட்டுகிறது. "ஐயா" மற்றும் "மணீயார் வீடு" இவ்விரு கதைகளிலும் அந்த கணவன் மனைவியின் உரையாடல்கள் எளிய முறையில், இயல்பான பேச்சுடன் பல பக்கங்கள் செல்கின்றன. அவ்வளவையும் படிக்க சலிப்பு இல்லை. கதாபாத்திரங்கள் இரண்டு தான், ஆனால் அவ்வளவு நேர்த்தியான வடிவமைப்பு. இமையம் -- கோவேறு கழுதைகள் தொடங்கி நறுமணம் வரை நீர் எனக்கு ஒரு நல்ல ஆசிரியராகவே இருந்திருக்கீர். நன்றி.

user_19347

★ 3/5
3.5 சிறிய புத்தகம். 10 சிறுகதைகள். எல்லாமே பெண்களை மையப்படுத்தி, பெண்களை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற கதைகள். ஒரு கதை படிக்கும் போது இது இமையத்தால் எழுதப்பட்டது என்று தெரிந்துவிடும்.

user_19346

★ 3/5
Good collection of short stories with his signature style of writing-Practicality to the core- Engages us with his writing though the plot of the stories is weak .

user_19345

★ 4/5
விளிம்பு நிலை மக்களின் -முக்கியமா பெண்கள் -அன்றாட சமூக சிக்கல் , ஏக்கங்கள் , கஷ்டங்களை சொல்லும் கதை தொகுப்பு.

user_19344

★ 4/5
very good stories written in simple terms.. Excellent collection.

user_19343

★ 4/5
எழுத்தாளர் இமையம், உயிர்மை மற்றும் ஆனந்த விகடன் இதழ்களில் எழுதி வெளிவந்த ஒன்பது சிறுகதைகளை தொகுத்து வழங்குவதே "நறுமணம்" என்ற இந்தப் புத்தகம். இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான சிறு கதைகள் பெண்களின் வாழ்வை மையப்படுத்தி எழுதப்பட்டவை. ஒரு சிறு நவீன வளர்ச்சி, சமூக வரையறைகள், குடும்ப அதிகாரங்கள் போன்றவை குறிப்பாக பெண்களை எப்படி பாதிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இவரது எழுத்து படிப்பதற்கு எளிமையாக இருந்தாலும், அது ஏற்படுத்தும் தாக்கம் சற்று காட்டமானதாக உள்ளது. இந்தத் தொகுப்பில் "துபாய்க்காரன் பொண்டாட்டி" என்ற சிறுகதை என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானது. அந்தக் கதையின் தாக்கத்திலிருந்து வெளிவர இரண்டு நாட்களானது. மேலும் என்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் கதையை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க கடினமாக இருந்தது. ஒரு ஆணால் பாதிக்கப்பட்ட பெண் தன் ஏமாற்றத்தை எண்ணி, தன் கருணை குணத்தை எண்ணி வெக்கமுற்று, இனி நிகழவிருக்கும் துக்கங்களுக்கு தானே ஒரு வடிவம் தந்து, சமூகத்தில் தன் வருங்கால நிலையை எண்ணி, மரியாதையா? உயிரா? என்ற கேள்விக்கான விடையுடன் அந்தக் கதை முடிவுரும். "மணியார் வீடு" என்ற சிறுகதை, உபயோகமற்று இருந்தாலும் கூட நாம் வாழ்ந்த இடம் அல்லது வீடு எவ்வாறெல்லாம் நம் மனதுக்கும், சுய அடையாளத்திற்கும் நெருக்கமாக இருக்கிறது என்பதை ஒரு வயதான ஆண் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி பேசுகிறது. 35 ஆண்டுகளாக ஒரே ஊரில், ஒரே வீட்டில் வாழ்ந்த ஒருவர் தன் வயதான காலத்தில் அதை விற்க நேரும்போது, தன்னுள் ஏற்படும் உணர்ச்சிகளை எளிமையாக படம்பிடித்துக் காட்டியுள்ளார் இமையம். சமூகத்தில் ஒரு தனி மனிதனின் நிலையை வெவ்வேறு கோணங்களில் வடிவமளித்து, அவனது பல்வேறு மன ஓட்டங்களை முன்னிறுத்தி, சுற்றத்தாரால் அவனுள் ஏற்படும் தாக்கங்களை எளிமையான எழுத்தில் கையாண்டு, நம்மைச் சிந்தனையில் ஆழ்த்துகிறார் இமையம்!

user_19342

★ 3/5
#11thbook #14Apr4 #Madhu_ReadingChallenge2024 இமையம் அய்யா அவர்களின் மற்றோரு சிறு கதை தொகுப்பு. வழக்கம் போல் இமையம் அய்யா அவர்களின் கதைகளில் வரும் விளிம்பு நிலை மக்களை மையமாக கொண்ட 9சிறு கதைகளை கொண்ட தொகுப்பு 1. நறுமணம் - ஆனந்த விகடன் 04.11.2015 2. ஈசனருள் - உயிர்மை - டிசம்பர் 2015 3.காதில் விழுந்த கதைகள் - அந்தி மழை, ஜனவரி 2015 4.வீடும் கதவும் - ஆனந்த விகடன் 24.02.2016 5.துபாய்க்காரன் பொண்டாட்டி - உயிர்மை, மார்ச் 2016 6.உண்�மைக் கதை - உயிர்மை, மார்ச் 2015 7.ஆஃபர் - ஆனந்த விகடன் 05.08.2016 8.ஐயா - அம்ருதா, பிப்ரவரி 2016 9.மணியார் வீடு பள்ளியில் அட்மிஷன் என்பது எப்படி வியாபாரம் ஆகிவிட்டது, அதை அறியாமல் எப்படி மக்கள் ஏமாறுகிறார்கள் ஒரு அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் பியூனின் மனக்கூமுறல் நகர வாழ்விற்கு இடம் பெயர்வதால் பிறந்த மண் /வீட்டிற்கு இருக்கும் உறவு அந்து போவது ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு கதவு என்பது போல பெரிய பள்ளிக்கூடத்தில் teacher என்றாலும் சரி, ப்ரெசிடெண்ட் ஆனாலும் சரி பெண்ணிற்கு என்று விதிக்கப்பட்ட வேலையில் இருந்து மட்டும் விடுதலை இல்லை துபாயில் இருக்கும் கணவனுக்கு துரோகம் செய்ததாக மனம் உடைந்த பத்மவாதி எடுக்கும் முடிவு தன்னால் தன் மகன் குடும்பத்தில் குழப்பம் வந்து குடும்பம் உடைந்து விடக்கூடாது என்று அனாதை இல்லத்தில் சேர முடிவு எடுக்கும் லீலாவதி நகர விரிவாக்கத்தின் திட்டங்களினால் எப்படி பாமர மக்கள் பாதிக்க படுகின்றனர் என்று இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பெரும்பாலன கதைகள் பெண்களின் வாழ்க்கையை மற்றும் மனபோராட்டத்தை மையப்படுத்திகின்றன. #MadhuReadingChallenge2024 #madhureadingchallenge #MadhuReads #TinkMadhuReads #readingchallenge #readingtime #bookstagram #bookrecommendations #bookdealsforbrokebibliophiles #bibliophiles #booklover #tamilnovels #reading #bookworm #bookstagrammer #read #bookish #bookaddict #booksofinstagram #bibliophile #bookaholic #booklove #tamilbooks #tamilreaders

user_19341

★ 5/5
Rating 4.5. பகடியான, உக்கிரமான இயல்புவாத கதைகள் கொண்ட தொகுப்பு. இந்த தொகுப்பு பற்றி சற்று விரிவாக எழுதவேண்டும். "துபாய்காரன் பொண்டாட்டி" கதை என்னை அசைத்துவிட்ட்து. கூர்மையான, தத்துவ விளக்கங்களுடன் கூடிய அலங்காரம் இல்லாத எளிய மொழியில் வாசிப்பவருக்கு கதாபாத்திரங்களில் உளநிலைய கடத்துவது இமையத்தின் நடை . %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% துபாய்காரன் பொண்டாட்டி: ++++++++++++++++++++++++++++++ "ஹலோ , யாரு பேசுறது?" அவளுடைய புருஷன் மதிதான் பேசினான். உடனே உற்சாகமாகி ஆசையோடு கேட்டாள் "நல்ல இருக்கியா?" "ஊருக்கு வந்துக்கிட்டிருக்கன். மெட்ராஸுக்கு வந்திட்டன்" "என்னா திடுதிப்புன்னு சொல்ற? போன வாரம் பேசுனப்பகூட சொல்லலியே." "உன்கிட்ட சொல்லிட்டுதான் நான் ஊருக்கு வரணுமா?" "ஏன்னா சொல்ற? சரியாக கேக்க மாட்டங்குது. இங்க ஒரே மழையா இருக்கு" "போன வை, ஊர்ல வந்து ஒன்னப் பேசிக்கிறன் " "துபாயில் எதாச்சும் பிரச்சனையா? தப்பு ஏதாச்சும் செஞ்சிட்டியா? திருப்பி அனுப்பிட்டாங்களா?" "அதெல்லாம் ஒண்ணுமில்ல. நானாத்தான் வர்றன், நீ போன வை" "எதுக்கு கோவமாப் பேசுற? ஹலோ ,,,,ஹலோ......" மதி போனை நிறுத்திவிட்டான். துபாய்காரன் பொண்டாட்டி கதையின் தொடக்கத்தில் வரும் உரையாடல் இது. இதை தொடர்ந்து பத்மாவதி, எப்போதுமில்லாம மதி, ஏன் கோவமா பேசுறான்? ஊர்ல வந்து உன்னப் பேசிக்கிறன்னு ஏன் சொன்னான் , மாமியாக்காரி ஏதும் சொல்லிருப்பாளோ, செட்டியார் கடை முன் தனக்கும் கண்ணனுக்கும் நடந்த சண்டை அவனுக்கு தெரிந்திருக்குமோ , மேலும் விவரங்களை யார் மூலமாவது தெரிந்திருப்பானோ? என்று பயத்தில் , அவமானத்தில், சுயஇரக்கத்தில் எண்ணத்தை ஓடவிடுகிறாள் பத்மாவதி. யோசிச்சு யோசிச்சு நடந்த நிகழ்வுகளை நினைத்துப்பார்த்து, தெரிந்தால் மதி என்ன செய்யக்கூடும் என்று மனதில் கற்பனைகளை உருவாக்கி நெஞ்சிலும் வயிற்றிலும் தொடையிலும் அடித்துக்கொண்டு அழும் காட்சிகள் உண்மையாகவே நம்மை பரிதவிக்கவைப்பவை. இந்த குழப்பமான சிக்கல் இரவு போன் வந்த நேரத்திலிருந்து அதிகாலை வரை அவளை ஆட்கொள்கிறது , துன்பத்தில், அவமானத்தில், ஏமாற்றத்தில் , தன்னையே அவள் எல்லாத்திசைகளிலும் வீசி எறிகிறாள் . நனவோடை வகை எழுத்து, அசலான உணர்வுக்கடத்தல். வாசிப்பவரை பத்மாவுடன் சேர்ந்து துடித்து அழவைக்கும் வருணனைகள். சிறுகதை தொகுப்பில் எனக்கு மிகப்பிடித்த (?) என்னை அதன் உணர்வு நிலைகளுக்குள் நிறுத்திய கதை. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஐயா - சிறுகதை - நான் சில நாட்களுக்கு முன்பு வாசித்த ஜெயமோகனின் "நூறு நாற்காலிகள்" சிறுகதையை நினைவுபடுத்தியது, முற்றிலும் எதிர்த்தளத்தில் இருக்கும் கதைசொல்லி. ஐயா ஐயா என்று சொல்லுக்கு சொல் குனியும் நாயகன் சாதி அடுக்குகளை சொல்லாமல் சொல்கிறார். ========================================================================== காதில் விழுந்த கதைகள் மற்றும் ஆபர் (offer ) பகடிக்கதைகள் அடுத்து இமையத்தின் கோவேறு கழுதைகள் நாவல் வாசிக்கவுள்ளேன்.
Shelves
Short Stories Imaiyam book

More like this


தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி) [Therntheduththa Sirukathaigal Part 2]

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜ…

4.1/5 · 21 ratings
Check Price

ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள்

ஆன்டன் செக்காவைக் கொண்டாடுவோம் புத்தக ஆர்வலரான நண்பருக்குப் பரிசளிக்கச் சிறுகதைத் தொகுப்பினைத் தேடுபவரா நீங்கள் ? எவ்விதத் தயக்கமுமின்றிச் செக்காவின் கதைகளை நான் பரிந்துரைப்ப…

4.1/5 · 21 ratings
Check Price

Where Are You Going, You Monkeys?

This is a collection of fun, imaginative, and sometimes quite racy folktales from South India. Ki. Rajanarayanan has spent three-quarters of a cen…

4.1/5 · 21 ratings
Check Price

செல்லாத பணம்

Author: Imaiyam

நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை. இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது. அங்கே இருப்பது ஒரு…

4.1/5 · 21 ratings
Check Price

Pethavan: The Begetter

Author: Imaiyam Translator: Gita Subramanian

When Bhakkiyam falls in love with a Dalit sub-inspector, death is the only punishment that will satisfy her village panchayat. Pazhani, her father…

4.1/5 · 21 ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 2

தமிழ் இலக்கிய உலகின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலையும், சமூக முரண்பாடுகளையும் ஆழமாகப் பிரதிபலிக்கும் சிறந்த படைப்புகளின் தொகுப்பு இது. 1950-களின் இறுதியிலிருந்த…

4.1/5 · 21 ratings
Check Price

Women Dreaming

Author: Salma Translator: Meena Kandasamy

What a life! She didn’t like being here, and she didn’t like going there. Mehar dreams of freedom and a life with her children. Asiya dream…

4.1/5 · 21 ratings
Check Price

ஸ்ரீரங்கத்துக் கதைகள் [Srirangatthu Kathaigal]

ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்க…

4.1/5 · 21 ratings
Check Price

The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. II

A TERRIFYING MONSTER HOLDS A KEY TO A HIDDEN TOMB! A FAMILY OF DEBAUCHED MAHARAJAS FALLS PREY TO AN EVIL CURSE! A YOUNG WOMEN'S OBSESSION WITH BLU…

4.1/5 · 21 ratings
Check Price

எங் கதெ

Author: Imaiyam

இமையத்தின் இந்த நெடுங்கதையில் ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது. இமையத்தின் படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபட்ட களம்; வேறு…

4.1/5 · 21 ratings
Check Price

சுஜாதாவின் சிறுகதைகள் [Sujathavin sirukathaigal

சுஜாதாவின் சிறுகதைகள் - கதைகளின் தொகுப்பு.

4.1/5 · 21 ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1 [Jayakanthan Sirukathaigal, Part 1]

ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு 1 யுக சந்தி இல்லாதது எது இரண்டு குழந்தைகள் நான் இருக்கிறேன் பொம்மை தேவன் வருவாரா? துறவு பூ உதிரும் குறைப் பிறவி யந்திரம். …

4.1/5 · 21 ratings
Check Price