saagavaram

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

saagavaram

None

4.12/5 · 92 ratings

N/A

Reviews

user_18959

★ 5/5
How open book not open

user_18958

★ 5/5
This is a wonderful work from Dr.V.Iraianbu where he emphasizes on the nature of fear in humans, especially the fear of death that drives one to seek self preservation, and to somehow deceive from accepting the reality and the law of nature. This he conveys through the journey of a man who seeks immortality and it is a very good blend of philosophy and nature of emotions of human beings. A book that is bound to stir the hearts of the readers to transform oneself from fear to fearlessness.

user_18957

★ 5/5
அடுத்தடுத்த நெருக்கமானவர்களின் தொடர் மரணங்கள் தரும் மீளா துயர், அயர்ச்சி.... மரணமில்லா வாழ்விற்கான நீண்ட தேடல்.... மரணமே வாழ்வின் பெருவிடுதலை என அறிதல்.... எண்ணற்ற தத்துவார்த்த வரிகளுடன் எளிய நடையில் சொல்லப்பட்ட சாகாவரம். 07022022.

user_18956

★ 5/5
ஒருவனுக்கு சாவை பற்றிய அறிவும் பக்குவமும் வராமல் மாறாக பயம் வந்தால் அதிலிருந்து தப்பிக்க என்னென்ன வழிகளில் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் காத்துக் கொள்ள எண்ணி செய்யும் விஷயங்கள் மூலம் அவன் பெறும் அனுபவங்கள்... இறுதியில் மரணத்தை பற்றிய உண்மையான அறிவை அவன் பெற்ற நேரம் அனைத்தும் கை மீறி சென்றுவிட்டது என்பதை அவன் உணர்ந்து கொள்வதே இந்த சாகாவரம்.....

user_18955

★ 5/5
சாகாவரம் நூல், மரணம், வாழ்க்கை, அச்சம், ஆன்மிகம் போன்ற ஆழமான உணர்வுகளைப் பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு முக்கியமான படைப்பு. தன் நெருங்கிய நண்பர்களின் இழப்பால், மரணத்தின் மீதான கேள்விகளும் அச்சமும் கொண்டு, மரணமில்லா வாழ்க்கையை தேடிய பயணத்தை தொடர்கிறான் கதையின் நாயகன் நசிகேதன். அப்பயணத்தில் சந்திக்கம் மனிதர்களையும், பயணத்தின் இறுதியில் கிடைத்த "வரம்" பற்றிய கற்பனை கதையே சாகாவரம். இந்ந நூலின் சிறப்பம்சம், இதுவரை பிறமொழிகளில் மட்டுமே நாம் கண்ட "Magical Realism" கதையம்சம்/வகை(genre) -ல் இந்நூல் அமைந்துள்ளதுதான். மற்றும் "Depression" (மனச்சோர்வு) பற்றி தமிழில் நான் வாசித்த நூல் இதுவே. மரணம், மரண பயம் என்பது வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதி , மற்றும மரண பயம் நம்மை வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க விடாது என்பதை நாவல் வலியுறுத்துகிறது. புத்தகத்திலிருந்து சில வரிகள்: “முதல் கடிதம், முதல் குழந்தை, முதல் பணி, முதல் பள்ளியைப்போல முதல் மரணமும் மறக்க முடியாதது. வேண்டியவர்களின் மரணம் நமக்கும் ஆழமான காயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஞாபகங்கள் நம்மைத் தடவும் போதெல் லாம், அது தழும்பாகத் தட்டுப்படுகிறது. மரணம் வருகிற வயதில் வந்தால் யார் கவலைப்படப் போகிறார்கள்." "இயற்கையின் படைப்பில் தன்னை அசிங்கமாக்கிக் கொண்டவன் மனிதன் மட்டுமே." "வரவேண்டிய நேரத்தில், வரவேண்டிய வடிவத்தில் வருகின்றன மரணம் திருவிழா போல." "எல்லோருமே ஒருவகையில் பிச்சைக்காராகளதான், பிச்சை கேட்கிற நபர்கள் மட்டுமே வேறுபடுகிறார்கள்." இதுபோல முத்துகள் ஒவ்வொரு பக்கத்திலும் நிறைந்துள்ளன. கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் சாகாவரம்.

user_18954

★ 5/5
சாகாவரம் என்பது மிகுந்த கற்பனை நயத்துடனும், ஆழமான தத்துவ சிந்தனையுடனும் எழுதப்பட்ட ஒரு மிகச் சிறந்த நவீன காப்பியம். மரணத்தைப் பற்றிய புரிதலற்ற ஒரு மனிதன், அதற்கான பயத்துடன் தொடங்கும் அவனது பயணம், மரணத்திலிருந்து விடுபடுவதற்கான வழியை தேடி அலையும் பயணமாக மாறுகிறது. அந்த வழியில் அவன் சந்திக்கும் நன்மை-தீமைகள், மனதளவிலான பரிணாமங்கள் அனைத்தும் மிக அழகாக, மிக மென்மையுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த புதினத்தில் வரும் நசிகேதன் எனும் கதாபாத்திரம், தனது வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இருந்து தொடங்கி, முற்றிலும் வேறுபட்ட ஒரு பாதையில் பயணிக்கிறது. அந்த பயணம் நம் மனதை தொடுவதாகவும், ஆழத்தில் சில கேள்விகளை எழுப்புவதுபோலவும் இருக்கிறது. மேலும், கதையின் முடிவு நாம் எதையும் எதிர்பார்க்க முடியாத விதத்தில் நம்மை விரைந்து அடைகிறது — அது ஒரு தாக்கத்தைச் சுமந்து நிற்கிறது. ஐயா இறையன்பு, கதையின் ஓட்டத்தைத் தாண்டியும், வாசகரின் வாழ்க்கைக்கும் தேவைப்படும் தத்துவங்களை இடைவிடாமல் நன்கு சீராக ஊடுருவி கூறுகிறார். ரசாவதி புதினத்திற்கு பிறகு, என்னை இப்படியாக ஆழமாக யோசிக்க வைத்த, மனதைக் கிளறிய மற்றுமொரு படைப்பு சாகாவரம் தான்.

user_18953

★ 4/5
Analytical view of several persons... An interesting read... The last part is too imaginative....

user_18952

★ 4/5
இருப்பதை விட்டு அதன் மறுபக்கத்தைத் தேடி அலையும் மனதை திருப்திப்படுத்த ஒருபோதும் இயலாது. தேடியது கிடைத்தாலும் மனம் அதில் லயக்காமல் வேறு ஒன்றை திரும்பவும் நாடத் தொடங்கிவிடும். அழிவின் வழியே புதிய துவக்கம் நடைப்பெறுவதால் அவ்வழிவை வெறுத்து அதை விட்டு விலகி செல்லத் துடிக்கும் கால்களுக்கேற்ப இசைந்தோமானால் வாழ்வின் சுவாரசியம் தடைப்பட்டு நிர்மூலமானவற்றையே காண முடியும். முப்பது வருடங்களுக்கு மேலாக மரணத்தை நேரடியாகச் சந்திக்காத நசிகேதனுக்குத் தொடர்ந்து நான்கு மரணச் செய்தி கிட்டுகிறது.மனிதனை மிகவும் நேசிக்கும் மனதுடையவனுக்குத் தன்னைச் சார்ந்தவர்களின் இழப்பு அவனின் இயல்பை பாதித்துவிடுகிறது.மரணத்தை விடக் கொடியதான மரணப் பயம் அவனை ஆட்கொண்டு தத்தளிக்க விடுகிறது. தனிமையைத் தேடி மலைப்பிரதேசம் சென்று வந்தவனுக்கு வாழ்வின் கோட்டுபாடுகள் தெளிவான அணுகுமுறையை அவனுக்குப் புரிய வைக்கிறது. மரணமில்லா வாழ்வை தேடி அலைபவனுக்குக் கொல்லிமலை செல்ல வழிகாட்டுகிறார் ஒருவர்.அங்கே ஞானி ஒருவரின் துணையுடன் செல்ல வேண்டிய பாதைக்காகத் தன்னை ஆயதப்படுத்தும் நசிகேதனுக்கு ஒலைச்சுவடியை தருகிறார் அவர். முழுவதும் படிக்க வேண்டும் என்ற அவரின் வேண்டுகோளை மறந்துவிட்டுத் தனக்குத் தேவையானது கிடைத்தவுடன் அதை அழித்துவிடுகிறான். ஞானி முக்தியடைந்த பின் மரணமில்லா பெருவெளியை தேடி பயணப்படுபவன் பல இன்னல்களைக் கடந்து அவ்விடத்தை அடைகிறான். ஆனால் அவன் எதிர்பார்த்த சந்தோஷம் அங்கே கிட்டவில்லை. அதற்கு நேர்மாறாக அங்கே மரணத்தை விரும்பு அழைக்கும் சூழல் நிலவுவதை உணர்கிறான்.தான் தேடியதை அடைந்தவுடனே அதற்காகத் தான் இழந்தது அதிகம் என்ற துக்கத்துடன் மரணமில்லா பெருவெளியில் உலாவுகிறான் நசிகேதன்.
Shelves
V. Irai Anbu book

More like this


Aridharam

ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…

4.12/5 · 92 ratings

Veadikai Manithargal

Dr. V. Iraianbu I.A.S, narrates interesting events he had experienced and describes the various interesting personalities he has met in this selec…

4.12/5 · 92 ratings

பத்தாயிரம் மைல் பயணம்

பத்தாயிரம் மைல் பயணம் தமிழில் பயணக் கட்டுரை நூல்கள் நிறையவே வந்திருக்கின்றன. ஆனால் பயணங்களை வரலாற்றுக் கோணத்தில் அணுகுகிற நூல்கள் அநேகமாக இல்லை. அந்த குறை…

4.12/5 · 92 ratings

ezhavadhu arivu part 1

N/A

4.12/5 · 92 ratings

Chinna chinna velichangal

N/A

4.12/5 · 92 ratings

Aathankarai Oram

N/A

4.12/5 · 92 ratings

Naripal

N/A

4.12/5 · 92 ratings

Odum Nadhiyin Osai (32191967)

N/A

4.12/5 · 92 ratings

SIMMASANA SECRET

One of the best Book of Irayanbu I.A.S.

4.12/5 · 92 ratings

Men katril vilai sugamey

N/A

4.12/5 · 92 ratings

porthozhil pazhagu

போரில் வெற்றிபெறத் தேவையான உத்திகளுக்கும் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான உத்திகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. இதனை 23 உத்திகளுடன் மிகவும் எளிமையாகவும் மொழிநடையில் வல…

4.12/5 · 92 ratings