இலங்கை வரலாறு: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இலங்கை வரலாறு: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்

None

3.36/5 · 11 ratings

இலங்கை வரலாறு மயிலை சீனி. வேங்கடசாமி 1. இராவணன் இலங்கை 2. இலங்கைத் தீவில் தமிழ் நாட்டுத் தெய்வங்கள் 3.இலங்கைத் தீவில் வருணன் வணக்கம் 4. சங்ககாலத் தமிழரின் கடல் செலவும் தரைச் செலவும் 5. இலங்கையில் தமிழர் ]

Reviews

user_17722

★ 5/5
ஒவ்வொரு முறை மயிலையாரின் புத்தகத்தை கையில் எடுக்கையிலும் சலிப்போடுதான் எடுக்கிறேன். ஆனால் வாசித்து முடிக்கையில் வியப்போடுதான் வைக்கிறேன். ஏற்கனவே பவுத்தம் குறித்து கதைகளாகவும் கட்டுரைகளாகவும் நிரம்ப சொல்லிவிட்டார். இலங்கை குறித்து புதிதாக என்ன சொல்லவிருக்கிறார் என்ற கேள்வியோடுதான் துவங்கினேன். முதலில் #இராவணன்_இலங்கை எனற தலைப்பிலான கட்டுரை. இராமாயணத்தில் வரும் இலங்கை ஸ்ரீலங்கா அல்ல, அது வட இந்தியாவில் இருக்கும் ஒரு பகுதிதான். அங்கிருக்கும் ஒரு பெரிய ஏரியைத்தான் கடலாக காட்டியிருக்கிறார்கள் என்று சொல்லவும் நான் கொஞ்சம் தேடிப் பார்த்தேன். அவர் சொன்ன பல தகவல்கள் பிழையாக இருந்தன. உதாரணத்திற்கு சீதையை கழுதையில் அமரவைத்து கடத்தியதாக எங்கும் தகவல் கிட்டவில்லை. இது இன்னும் ஆராய வேண்டியது. அடுத்தது #இலங்கைத்தீவில்_தமிழ்நாட்டுத்_தெய்வங்கள் என்னும் தலைப்பு. இது சுவாரசியமாக இருந்தது. முருகனும் விஷ்ணுவும் எப்படி எப்படியெல்லாம் மாறி வழிபடப் படுகிறார்கள், என்றும் ஏன் காலந்தோறும் மாற்றப்படுகிறார்கள் என்றும் விவரித்தார். ஒரு மதம் புதிதாக தலையெடுக்கையில் முந்தைய மத தெய்வங்களை தின்று செரிக்கிறது அல்லது முற்றிலுமாக அழித்து விடுகிறது. இலங்கையில் பௌத்தமும் அதைத்தான் செய்திருக்கிறது. முருகன் வள்ளி காதல் கதையெல்லாம் அங்கு நடந்தாற்போல் சொல்கிறார்கள். கதிர்காமக் கோவிலுக்கு 4 மைல் தூரத்தில் ஒரு பாறைக் கல்லில் யானையினுடைய கால் அடையாளம் காணப் படுகிறது. அது வள்ளியைத் துரத்திவந்த யானையின் காலடி அடையாளம் என்று கூறப்படுகிறது. கடற்தெய்வமான வருணனை எப்படி மணிமேகலைத் தெய்வம் காணாமல் போகச் செய்தது என விவரித்திருக்கிறார். நம் மணிமேகலை காப்பியத்தில் வரும் மணிமேகலைக்கு இத்தெய்வத்தின் பெயரைத்தான் வைத்திருப்பார்கள். #வருணன்_வணக்கம் மணிமேகலை வணக்கமாக திரிந்தது எப்படி என விவரித்திருக்கிறார். மேலும் முகலாய படையெடுப்பு காரணமாக இலங்கை சென்ற வைதீகம் செய்த விளையாட்டுகளையும் விவரித்திருக்கிறார். #சங்ககாலத் தமிழரின் கடல் செலவும் தரைச் செலவும் என்ற தலைப்பு இலங்கை வரலாற்றோடு சங்கத்தமிழர் வாழ்வியலையும் பேசுகிறார். எவ்வளவுதான் வாசித்தாலும் நுணுக்கமான பார்வையும், முந்தைய ஆய்வுகளை மறுதலிக்கும் ஆற்றம் நமக்கு வருவது சிரமமாகத்தான் இருக்கிறது. மயிலையார் அதெல்லாம் அடித்து நகர்த்துகிறார். மேலும் இத்தலைப்பில் ஹதிகும்பா கல்வெட்டு குறித்து சில செய்திகளை சொல்லியிருக்கிறார். அது குறித்து இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும். இறுதித் தலைப்பாக #இலங்கையில்_தமிழர். இதற்காகவே மனிதர் மகாவம்சம், தீபவம்சத்தை முழுமையாக வாசித்திருப்பார் போல. ஒவ்வொரு மன்னர் குறித்தும் சுருக்கமாக சொல்லிக் கொண்டே வருகிறார். உண்மையில் பல சுவாரசியமான தகவல்கள். எத்தனை எத்தனை கீழ்மைகள்! தன் தாயைக் கூட்டிக் கொடுத்தெல்லாம் ஒருவன் போரில் வெற்றி பெற்றிருக்கிறான். ஒரு இராணி அடுத்தடுத்து மூன்று கணவர்களை அரசனாக்கி இருக்கிறாள். ஒவ்வொருவருக்கும் விஷம் கொடுத்து கொன்றுதான் அடுத்தவனை மணந்திருக்கிறாள். அக்கால cercei lannister போல. இதில் வரும் மன்னர்களின் வீழ்ச்சிகள் கருவைக் கொண்டு சிறுகதைகள் எழுதலாம், சுவாரசியமாக இருந்தன. புத்தமதம் குறித்து அங்கிருக்கும் பல கதைகளை அடித்து நகர்த்தியிருக்கிறார். பூர்வகுடிகளான நாகர்களை எப்படி புத்தர் வெற்றிக் கொண்டார் என்ற கதையை கவனியுங்கள். புத்தர் முதலில் பயங்கர இடியும் மழையும் வரவழைத்து பூர்வகுடிகளை பயமுறுத்துகிறார். பயந்திருப்பவர்களிடன் எனக்கு அமர இடம் கொடுத்தால் காப்பதாக பேரம் பேசுகிறார். ஒத்துக் கொண்ட பின் அவர் அமர்ந்த தோலாசனம் விரிந்துக் கொண்டே செல்ல பூர்வகுடிகள் கடலில் தெரிந்த தீவிற்குள் செல்கிறார்கள். அது புத்தர் தூரத்திலிருந்து வரவழைத்திருந்த தீவு. இவர்கள் அதில் ஏறியதும் திரும்ப அனுப்பி விடுகிறார். எப்படியான ஆக்கிரமிப்பு பாருங்கள். வாமன அவதாரத்தை நினைவூட்டியது. இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். வாசித்து விடுங்கள். ஆனால் அதற்கு பொறுமையும் வேண்டும்.

user_17721

★ 3/5
இலங்கை வரலாற்றில் தமிழர்களின் பங்கேற்பை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இந்த நூலை படிக்கலாம். ஆனால் சமகாலத்து இலங்கை வரலாற்றில் தமிழர்களின் பங்கை தெரிந்துகொள்ள இந்த நூல் உதவாது . பண்டையகால , சங்ககால , மற்றும் பெளத்த காலத்து இலங்கையில் தமிழ் மொழி , கலாச்சாரம் மற்றும் தெய்வங்களின் தாக்கம் , மற்றும் வரலாற்றை இந்த நூல் பேசுகிறது. சங்க நூல்களையும் , பெளத்த நூல்களையும் கொண்டு பெரும்பாலும் அரசர்கள் பற்றியும், பெளத்த புராணங்களையும் மட்டுமே மயிலை சீனி .வேங்கடசாமி எழுதியிருக்கிறார்.இது சாமானியர்களை பற்றிய வரலாறு இல்லை. அவர் சொல்லும் பல புத்த விகாரங்களுக்கு சென்றவன் என்ற முறையில் , அப்பகுதியை மட்டுமே மிகவும் ரசிக்கமுடிந்தது . மற்ற பாகங்கள் சற்றே சலிப்பை ஏற்படுத்தியது. சொன்ன விஷயங்களை பலமுறை பல இடங்களில் திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் கட்டுரைகளாக வந்திருக்கவேண்டும் . புத்தர் இலங்கைக்கு மூன்று முறை வந்தார் என்று மஹாவம்சம் கூறுவது ஆச்சர்யமான புனைவு .வருண மற்றும் முருக வழிபாடு ஆச்சர்யம் .இராவணனின் இலங்கை வேறு என்கின்ற வாதம் இதுவரை கேட்டிராத ஒன்று அனால் சுவாரஸ்யமானது.
Genres
Shelves
book மயிலை சீனி. வேங்கடசாமி History

More like this


எனது இந்தியா [Enadhu India]

இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…

3.36/5 · 11 ratings

கங்கை கொண்ட சோழன் (பாகம் 1) [Gangai Konda Cholan #1]

With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…

3.36/5 · 11 ratings

பெண்ணின் மறுபக்கம் [Pennin Marupakkam]

Author: N. Shalini

உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆண்…

3.36/5 · 11 ratings

The Great Hedge of India: The Search for the Living Barrier that Divided a People

Author: Roy Moxham

Remarkable and "astonishing," says Jan Morris of Roy Moxham's account of his search for "one of the least-known wonders of Queen Victoria's India,…

3.36/5 · 11 ratings

ಯಾದ್ ವಶೇಮ್ | Yad Vashem

ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம், பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது …

3.36/5 · 11 ratings

மறைக்கப்பட்ட இந்தியா [Maraikkappatta India]

ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…

3.36/5 · 11 ratings

திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம்

பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முத…

3.36/5 · 11 ratings

உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1]

கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…

3.36/5 · 11 ratings

Kumarikandama Sumeriama?

This ebook is a product of Kizhakku pathippagam, which is a imprint of New Horizon Media Private Limited (NHM).

3.36/5 · 11 ratings

கி.மு கி.பி [Ki.Mu Ki.Pi]

குமுதம் இதழில் ஒரு வரலாற்று தொடராக வெளிவந்து பெரும் பாராட்டை பெற்றது. மொத்தத்தில் உலக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு தமிழில் ஒரு நல்ல புத்தகம்.

3.36/5 · 11 ratings

Genghis Khan

Author: Mugil

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முத…

3.36/5 · 11 ratings