Reviews for நெடுங்குருதி [Nedum Kuruthi]

13 reviews total

user_17394

★ 4/5 Feb 02, 2026
காவல் கோட்டத்தையும், குற்றப் பரம்பரையையும் படித்த பின் இந்த நாவலும் இது போன்ற ஒரு களத்தில் அமைந்திருந்த காரணத்தின் பெயரால் வாசிக்க ஆரம்பித்தேன். எஸ்.ரா அவர்களின் கதை சொல்லும் விதமும், கதை மாந்தர் கையாடலும் மிகவும் வேறாக இருக்கும் என்பதை மீண்டும் அறிந்து கொண்டேன். ஒரு வேலை அந்த இரண்டு நாவல்களையும் படிக்காமல் படித்தால் வேறு ஒரு வேகத்தை ஆரம்பம் முதல் எடுத்திருக்கும் என்பது போக போக புரிந்தது.

user_17393

★ 3/5 Feb 02, 2026
இந்த புதினத்தை வாங்குவதற்கு முதலில் இரண்டு காரணங்கள். ஒன்று எழுத்தாளர் எஸ்ரா. காவல் கோட்டம் நாவல் வெளியானபோது அதனைப்பற்றி கருத்துக்களை சொன்னவர்களில் முக்கியமானவர் எஸ்ரா. காரணம் இவருடைய காவல் கோட்டம் பற்றிய கருத்து மிக மிக கடுமையாக சு. வெங்கடேசனை சாடுவதாக இருந்தது. குறிப்பாக அவருக்கு எழுத்தாளுமை இல்லை என்றும், ஆயிரம் பக்கங்களுக்கு ஒரு அபத்தம் என்ற தலைப்பில் எஸ்ராவின் இணையத்தில் கடுமையாக சாடியிருந்தார். இன்னொரு காரணம் இந்த புதினம் காவல் கோட்டதோடு ஒப்பிடப்பட்டிருந்தது. குற்றப்பரம்பரை பற்றிய நாவல்களில் கா.கோ விட சிறப்பான நாவல்கள் உள்ளன என்றும் அதற்கு உதாரணமாக இந்த நெடுங்குருதி நாவல் குறிப்பிடப்பட்டது.

user_17392

★ 3/5 Feb 02, 2026
கரிசல் பூமியின் நிலத்தோடும் பருவங்களோடும் குணத்தோடும் பிணைக்கப்பட்ட வாழ்வுகளின் வரலாறாக நெடுங்குருதி நீள்கிறது. நிகழ்வுகள் ஒன்றன் மீது ஒன்றாக நிதானமாக அடுக்கப்பட்டு பெரும்பாலும் நேர்கோட்டில் கதை செல்கிறது. உணர்ச்சி வசம் பெரிதும் இல்லாமல், கிராம வாழ்க்கையின் வறுமையும் வெறுமையும் துயரமும் போராட்டமும் வன்முறையும் கனவுகள் கை கூடாத வெறித்த மனநிலையும் இங்கு இயல்பாகப் பிரதிபலிக்கின்றன. பருவநிலைகள் நம் வாழ்வின் மீது செலுத்தும் ஆதிக்கம் இங்கு நேர்த்தியான விவரிப்பில் வெளிக்கொணரப்படுகிறது. குறிப்பாக வெயிலைப் பற்றிய விவரனைகள் அபாரம். நாட்டாரியல் கதைகளும் நம்பிக்கைகளும் கலாச்சாரமும் கதையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மாய யதார்த்தம் அவ்வப்போது கதைக்கு ஒரு கூடுதல் பரிமாணத்தை ஏற்றுகிறது. பல திசைகளில் கதை செல்வதால் வாசிப்பனுபவம் நிலையற்றதாக அமைகிறது. குறிப்பாக நடுப்பகுதி சுவாரஸ்யம் இன்றி அயர்ச்சி அடையச் செய்கிறது. கரிசல் வாழ்வில் காலத்தின் பாய்ச்சலை அறிய, தோரணங்கள் பெரிதும் இல்லாத அலட்டிக் கொள்ளாத ஒரு எதார்த்த அனுபவம் நெடுங்குருதி.