நாக தீபம்-1

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நாக தீபம்-1

Naga Deepam

3.62/5 · 45 ratings

வரலாற்றுப் புதினங்களின் மன்னன் படைப்பில் உருவான இந்த நாவல், முகலாயப் பேரரசுக்கும் ராஜபுத்திரர்களுக்கும் இடையிலான அரசியல் சூழலை மையமாகக் கொண்டது. ஜஹாங்கீர் மன்னரின் ஆட்சிக்காலத்தில் நடைபெறும் இக்கதை, வீரமும் காதலும் இழைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தை வாசகர்களுக்கு கண்முன் நிறுத்துகிறது. பாலைவனச் சுனையின் பின்னணியில் தொடங்கும் இந்த முதல் பாகம், அழகிய வர்ணனைகளோடும் விறுவிறுப்பான திருப்பங்களோடும் வாசகர்கள…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_17292

★ 4/5
"நாக தீபம்" - சாண்டில்யன் ************************ வரலாற்று காலத்தை கொண்ட புனைவு நாவல்களில், சாண்டில்யன் அவர்களின் படைப்புகள் தலைசிறந்தவை எனலாம். அந்த வகையில், இந்திய வடமேற்கு பகுதியான ராஜபுதன பாலைவனங்களில், அதனை ஒட்டிய முகலாயர் படையெடுப்புக்குள்ளான பகுதிகளில்தான் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. முகலாயர் காலம் என்பதால் 13ம் நூற்றாண்டில் இக்கதை நடைபெற்றதாக கொள்ளலலாம். முகலாயர் சிறையில் அடைபட்ட ராஜபுதனத்தின் படைத்தளபதிகள் ஒருவனான "ஹரிதாஸ் ஜாலா"தான் கதையின் பிரதான பாத்திரம். தன் நாட்டின் மீது மிகுந்த பற்றுள்ளவனை, "நாகதீபம்" எனும் ராஜபுதனத்தின் பொக்கிஷத்தை கொணர, விடுதலை செய்யப்படுவதாக ஆரம்பிக்கிறது.கதை. அப்பயணத்தில் ஹரிதாஸ் ஜாலா சந்திக்கும் ராஜபுத்திரியுடனான சந்திப்பு, விரோத மொழியில் ஆரம்பித்து, மூத்த படைத்தளபதியான பிதாமகர் மூலம், அவர்களுக்குள் காதல் மொழியாக தொடர்கிறது. மேலும், சுந்தரதாஸ், ராஜ்புத்தின மன்னர் அமரசிம்மன் ராணா என பல்வேறு கதைமாந்தர்களும் இடம்பெறுகிறார்கள். அந்த "நாகதீபம்" எப்படி ஹரிதாஸ் ஜாலா கைக்கொள்கிறான், ராஜபுத்திரி-ஹரிதாஸ் காதலை பிரிக்க சுந்தரதாஸ் செய்யும் சூழ்ச்சிகள், முகலாய ஜஹாங்கீரிடம் நாகதீபத்தை ஒப்படைகிறானா, முகலாயருடன் போரில் ஈடுபடுகிறானா? என்பதெல்லாம் மீதி கதையாக செல்கிறது. நாட்டுப்பற்று, காதல், துரோகம், சூழ்ச்சி போன்ற பல, கதைமாந்தர்களின் உணர்வுகளை, வாசிப்பவருக்கு கடத்தப்படுகிறது. தொடராக வெளிவந்ததால், ஒவ்வொரு அத்தியாயத்திலும் 'முன்கதை சுருக்கம்' போல, ஓரிரு பத்திகள் அடுத்த அத்தியாயத்திலும் எழுதப்பட்டுள்ளது, சற்றே அயர்வை தருகிறது. ஹரிதாஸ் ஜாலா'வின் பாலைவன குதிரைப்பயணம், 'பொன்னியின் செல்வன்'-ன் வந்தியத்தேவனை ஞாபகடுத்துகிறது. சுவாரசிய வாசிப்புக்கு ஏற்ற நாவல்!

user_17291

★ 4/5
Fantastic novel by Sandilyan Sir talking about Rajputs & their cold battle with Kurram aka Shajahan & his Father Jahangir

user_17290

★ 3/5
Not so impressed …very ordinary novel on Rajputs

user_17289

★ 5/5
சாண்டில்யன் வீரம் காதல் மற்றும் துரோகம் என ஒரு சரித்திர கதைக்கு என்ன தேவையோ அதை கலந்து எழுதிய கதை நாக தீபம் இது மிகவும் சுவாரசியமானவை படிக்க படிக்க எதோ நாமும் ஹரிதாஸ் ஜாலா உடனே ராஜபுதினத்தில் பயணிப்பது போல் இருக்கும். அமர சிம்மன் ஜஹாங்கீர் உடன் சமாதானம் செய்து கொள்ளும் போது இந்த நாக தீபத்தை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது என்று கூறி கதையை தொடங்குகிறார் சாண்டில்யன் இறுதி வரை மிகவும் சுவையுடன் கதையை ஓட்டி சென்று இருக்கிறார் படித்து பாருங்கள் மிகவும் அருமையான கதை

user_17288

★ 4/5
வீரத்தால் வீழ்த்த முடியாத சமூகத்தைத் துரோகத்தாலும்,குடியான்களின் நலனையும் காரணம்காட்டி அடிபணிய வைக்க முடியும்.மக்களின் நலனை பெரிதும் விரும்பும் மன்னர்கள் போரில் ஏற்படப்போகும் உயிரிழைப்பை தடுத்து நிறுத்தவே சமாதான முயற்சியில் ஈடுபடுகின்றனர் எஞ்சி இருக்கும் வீரர்களின் உயிராவது மிஞ்ச வேண்டும் அது நாட்டிற்குப் பயன்படவேண்டும் என்ற நோக்கமே அடங்கி இருக்கும். ராஜபுத்திரனான ஹரிதாஸ் ஜாலா போரில் மொகலாயப் படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு வருடம் சிறைவாசத்தில் இருந்தவனை அரசர் ஜஹாங்கீர் விடுதலை செய்கிறார்,அதற்காக மேவார் ராணாவிடம் இருக்கும் குடும்ப சொத்தான நாகதீபம் என்றழைக்கப்படும் ரத்தினத்தைத் தன்னிடம் ஒப்படைத்தால் போர் நடவடிக்கைகள் அவர்கள் சாம்ராஜ்ஜியத்தின் மீது தொடுக்கப்படாது என்ற உறுதியையும் அளிக்கிறார். மேவார் ராணாவிடம் படைத் தளபதியாக இருந்த ஹரிதாஸ் ஜாலா தற்போது மொகலாயத் தூதுவனாக மாறி நாகதீபத்தைக் கைப்பற்ற ராஜபுதனத்திற்குச் செல்கிறான்,அவர்களின் பிதாமகரான ஜயன் சந்தாவத்தின் மூலம் சிறுவயதில் அவரின் பேத்தியை தான் திருமணம் செய்து கொண்டது விவரம் அறிய நேர்கிறது. ராஜாபுதனப் பெண்ணான பிதாமகரனின் பேத்தி மொகலாயத் தூதுவனாக மாறிய ஹரிதாஸ் ஜாலாவை கணவனாக ஏற்க மறுப்பவள் அவனின் உள்ளத்தில் புதைந்து கிடந்த துன்பத்தைத் தெரிந்த பின்பு அவனுடன் வாழ விரும்பினாலும் ஹரிதாஸ் ஜாலாவால் தான் செய்து கொண்டிருக்கும் தூதுவனான தவறை நினைத்து எதிலும் விருப்பத்துடன் ஒன்ற முடியாமல் போகிறது. எதற்காகத் தூதுவனாக வந்தானோ அந்த நாகதீபத்திற்குப் பதினைந்து நாள் காவலாக இருக்கும் பொருட்டு மேவார் ராணா ஹரிதாஸ் ஜாலாவிடமே அதை ஒப்படைக்கிறார்.அதன் முடிவில் ஜஹாங்கீர் மகனிடம் அதைக் கொடுத்து தன் ஆணையை முடித்துக் கொண்டவன் மொகலாயர்களை எதிர்த்து போரிட விரும்பியதை அவனின் ராணாவாலே தடுத்து நிறுத்தப்படுகிறது. பிதாமகரையும் போரில் இழந்தபிறகு நாட்டில் இருக்கும் எஞ்சிய உயிர்களுக்காகச் சமாதானத்திற்கு மேவார் ராணா உடன்படுகிறார் அதை முன்னின்று ஹரிதாஸ் ஜாலா செயல்படுத்துகிறான்.
Shelves
book Historical Fiction சண்டில்யன் Sandilyan

More like this


பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

3.62/5 · 45 ratings
Check Price

சிவகாமியின் சபதம் [Sivagamiyin Sabadham] (Paranjothi's Journey & The Siege of Kanchi) Vol-1, 2

Sivakamiyin Sabadham’ is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikes…

3.62/5 · 45 ratings
Check Price

மோகனச் சிலை [Mohana Silai]

செண்பக மலரைக் குழலில் சூடி சிறிதே இடை ஒடித்து, சீற்றம் நிரம்பிய கருவிழிகளைக் கனல் விழிகளாக்கி தன்னைச் சிறை செய்யும்படி ஆணையிட்ட அந்த சித்தினியின் உத்தரவையோ, அதை அடுத்…

3.62/5 · 45 ratings
Check Price

நந்திபுரத்து நாயகி [Nandhipurathu Nayagi]

கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையு…

3.62/5 · 45 ratings
Check Price

காவல் கோட்டம்

2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இந்த புதினம் …

3.62/5 · 45 ratings
Check Price

பார்த்திபன் கனவு - பாகம் 1

Author: Kalki

This novel deals with the attempts of the son of (fictional) Chola king Parthiban, Vikraman, to attain independence from the Pallavaruler, Narasim…

3.62/5 · 45 ratings
Check Price

Trial by Silence

ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…

3.62/5 · 45 ratings
Check Price

யவன ராணி Part 2

சோழப் பேரரசின் புகழ்மிக்க வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், வாசகர்களைப் பண்டைக்காலத் தமிழகத்திற்கே அழைத்துச் செல்கிறது. இளஞ்சேட் சென்னி மற்றும்…

3.62/5 · 45 ratings
Check Price

குற்றப் பரம்பரை [Kutrap Parambarai]

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

3.62/5 · 45 ratings
Check Price