This is good book to read.
.............................. no words
This book is the observation of different people and their feelings
a perfect book of 'understanding humans'
Gopi nath has talked about human values in a well manner in his own way with lot of self experiences... Most of things are well known by the society. But few people only follow.
A book that generally speaks about people and their pschology.Good read to understand our phantom behaviors which we fail to observe.
WoW, searching words to express feelings which i got when finished reading of this book. What an improvement from his previous book:"Please, don't read this book". Not expected his writing be touching like best seller books. Must read, even though you like him or not as an event organizer in television channel[s].
Each points mentioned are clear, well-written.
Some Essays were brilliant.
Gopi has recorded his thoughts about the people he has seen, events he have witnessed and lessons he has learned.
Few were Heart Touching. few were thought provoking.
To the end, some essays were written for the heck of it, without much substance.
But the first half of the book more than makes up for this!
Worth Reading, especially if you are 21-25. It helps you decide what type of life/personality you would like to design.
நான் அதிகமான புத்தகங்கள் படித்ததில்லை ஆனாலும் இந்த புத்தகம் (பாஸ்வோர்ட்) BY கோபிநாத் அவருடைய வாழ்வில் இருந்து அவர் பார்த்த சில மனிதர்களில் வாழ்க்கையும் இவர் வாழ்ந்த வாழ்க்கையும் வைத்து கட்டுரை வடிவத்தில் தொகுத்து எழுதிய இந்த புத்தகத்தில் வரும் ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு விதத்தில் நாம் இந்த உலகத்தையும் இங்கு வாழும் மனிதர்களையும் பார்க்கும் கோணத்தை மாற்றி பார்க்க வைக்கிறது வாழ்க்கையின் மீதான ஒரு (hope) நம்பிக்கையை உணர்த்துகிறது
Express the view of everyone life we have to learn something about the experience go through வாழ்வின் நோக்கம் வாழ்தலே so live our life in a positive way and hope ourselves
Read it
great book ever... thank you.. don't forgot password... easy to understand and after readed the book some changes into my innerself..
Snippets from the life of the author, explaining various situations and the people he met, the learning from them.
Gave me new insights about life....
Good book
One of the Good Book to read. Full of Positive things. Can be read often in life. Thank You sir.!
A reflection about ourself and the people we meet in day to day life... Totally engrossed. Gopinath avargalukku en nenjarndha nandrigal!!!
Exepecting more from gopi
Worth reading but something is missing..
Lot of examples were given, few are very well connected to the topic but few were boring one
It was a very excited to read a book
அருமையான புத்தகம். பேருந்து பயணத்தின் நாம் சந்திக்கும் சகபயனாளி போல கோபிநாத் அவர்கள் தான் சந்தித்த நிகழ்வுகளையும் மனிதர்களையும் நம்மிடம் பகிரும் நேர்த்தியில் இப்புத்தகம் ஈர்க்கிறது. வாசிக்கலாம்.....
அருமை
புத்துணர்வு தருகிறது புத்தகம். அழகான நடை. தெளிவான எழுத்தோட்டம். சரளமான வார்த்தை ஜாலம். அன்றாட வாழ்வில் நாம் காணும் அதே மனிதர்கள் இந்த புத்தகத்தை படித்த பின்பு சுவாரஸ்யமான மனிதர்களாக தெரிகிறார்கள்.
அட்வைஸ் பிடிக்காதவர்களுக்கு இந்த படைப்பு பிடிப்பது மிககுறைவு.கோபிநாத் அவர்கள் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் மூலமாக சில உண்மைகளை உணர்த்துகிறார்.இந்த புதினத்தில்வா எனக்கு பிடித்த பகுதி என்னவென்றால், வாழ்வில் ஏதோ ஒன்றை நோக்கமாக கொண்டு ஓடுவதை நிறுத்திவிட்டு நம் குடும்பத்தையும் சுற்றதையும் கவனிக்க சொல்லி அறிவுறுத்துகிறார்.
அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய எளிய நடையில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
✨ கோபிநாத் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் புத்தகம் #பாஸ்வேர்ட் புத்தகத்தில் இருந்து சில வரிகள் ~~ ✨யார் பேச்சையும் கேட்க மாட்டேங்கிறான். இவன் எங்க உருப்படப்போறான்' என்று விமர்சிக்கப்பட்ட பலர், பின்னாளில் மதிக்கத்தக்க பிரபலமாக உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மனதின் குரலுக்குக் காது கொடுத்தவர்கள்தான். எல்லா நெருக்கடியான நேரங்களிலும், தவறு செய்யும் தருணங்களிலும், அவசரப்படும் பொழுதுகளிலும், துரோகம் செய்யும் சூழ்நிலைகளிலும், மகிழ்வான தருணங்களிலும் மனது சொல்லும் உண்மைக்குக் காது கொடுக்கத் தயாராக இருப்பவனை, காலம் எங்கோ அழைத்துச் சென்றுவிடுகிறது!✨காலத்துக்கு நல்லவன், கெட்டவன், ஏழை, பணக்காரன், வெகுளி, அறிவாளி என்ற பேதமெல்லாம் இல்லை. மனதின் குரலைக் கேட்கும் குணம் உள்ளவருக்கு, அதுவே பல கதவுகளைத் திறந்துவைத்திருக்கிறது. 'நீ அந்த வேலையை எப்படிச் செஞ்சிருக்கணும் தெரியுமா?”, 'அடுத்து என்ன பண்ணப்போற....அதெல்லாம் சரி வராது. இப்படித்தான் என் மாமா பையன் பண்ணி சொதப்பிட்டான்!' என்று நாலாபுறமும் வந்து விழும் இரைச்சல்கள், பல நேரங்களில் மனம் சொல்வதைக் கேட்க விடாமல் தடுத்துவிடுகிறது.நமது வாழ்க்கையை, அதன் எல்லை வரை சரியாகக் கட்டமைத்துத் தருவதற்கான இன்ஜினீயர்கள் இங்கு இல்லை. பைக்கில் வேகமாகச் செல்லும்போது, சட்டென்று குறுக்கே வரும் குழந்தையின் மீது மோதாமல் இருக்க. அனிச்சையாக பிரேக்கில் கால், கை வைக்கிற மாதிரிதான், மனதும் நம்மிடம் பேசும். வாழ்வின் எல்லை வரை காலத்தின் போக்கிலேயே சென்று சரியாகக் கட்டமைத்துத் தரும் சக்தி மனதின் குரலுக்குத்தான் உண்டு. வாழ்க்கையைப் பற்றி வாழ்க்கையைவிட யாராலும் அழகாகச் சொல்லித்தர முடியாது✨ஒரு விஷயத்தை அனுபவித்து உணர்ந்து திருப்தியாகச் செய்வதே முக்கியம். அதீத வேகத்தை நிறுத்தி, மகிழ்வோடு உங்கள் பணிகளைச் செய்யுங்கள். இல்லையென்றால், காலம் முழுக்க ஓடினாலும் திருப்தி இல்லாத படபடப்பான அர்த்தமற்ற வாழ்க்கையையே வாழ முடியும்வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழையாக மனித வாழ்க்கையும் இருந்தால் யாருக்கு என்ன லாபம்?
கோபிநாத் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்களின், தன் நண்பர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், அதன் மூலம் கற்று கொண்ட பாடங்கள் கொண்ட தொகுப்பே இந்த புத்தகம்!
கோபிநாத் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மற்றும் நடந்த சில சம்பவங்களின் வாயிலாக நல்வாழ்வு வாழ ஊக்கம் தரும் வகையில் ஓர் படைப்பைத் தொடராக எழுதியுள்ளார்.. ஊக்கம் தேவைப்படுவோர் படிக்க ஓர் நல்ல தேர்வு..It is a book which contains passwords to unlock some happiness in our timeless life..
“POSITIVE VIBES”
Used words r simple Easy to read for children’s. Good motivative & Self development book. Contains 30 stories. Some of them r boring. But overall it’s worth to read.
ஊக்கம் மட்டுமே தரக்கூடிய புத்தகமாக நான் இதை பார்க்கவில்லை.
ஒரு சில இடங்களில் என் மேலே எனக்கு காழ்ப்பு ஏற்பட்டது. இவ்வளவு நாள் வாழ்க்கையை தவறாக வாழ்ந்து விட்டோமோ என்று.
ஆடம்பரத்திற்காக, சமூகத்தில் கவுரவமாக இருப்பதற்காக என்று பல பொருட்களை வாங்கி குவித்து வருகிறோம். ஆனால் அது நமக்கும் பயன்படாது, உழைத்து சம்பாதிக்கும் பணமும் விரயம், நாளை அதை விற்றாலும் அடி மாட்டு விலைக்கு தான் கொடுக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் அபாய சங்கு என்று தான் நினைத்து கொள்ளவேண்டும்.
நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன், எனது தேவைகள் இவ்வளவு தான் என்று நாமே நினைத்தாலும், சுற்றி இருக்கும் நண்பர்கள், உறவினர்கள், மக்கள் நம் உறுதியை குலைத்துவிடுகிறார்கள் என்பது 100 சதவீதம் உண்மையாக தான் இருக்கிறது. ஆனால் இன்றைய சமுதாயத்தில், நாம் சந்தோஷமாக இருக்கிறோம், நம் தேவைகளை நம்மால் நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது என்று அவரவர் உறுதியாக நினைத்தால் ஒழிய இந்த உற்றார் உறவினர், சமுதாயம் நம்மை பணத்தின் பின்னால் விரட்டி கொண்டே இருக்கும் என்பதே நிதர்சனம்.
நம்மை சுற்றி இவ்வளவு அரசியலா என்று ஒரு பக்கம் அலுப்பாக வந்தாலும், பிறிதொரு பக்கம் நம்மை சுற்றி நல்ல மனிதர்களும் சூழல்களும் நிலவத்தான் செய்கின்றன என்று தான் கோபிநாத் கூறுகிறார். இன்றைய இயந்திர வாழ்வில், வாழ்க்கையை ரசிப்பதற்கு பதிலாக, நம்மை நாமே மின்பொருள்களிடம் நம் வாழ்க்கையை அடகு வைத்து வருகிறோம். எப்படி மீட்டெடுக்க போகிறோம் என்பது அவரவர் கையில் தான் உள்ளது.
மொத்தத்தில், ஒரு நல்ல வாசிப்பு. வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதில் ஓரிரண்டு உருப்படியான விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்று நினைக்கிறேன்.
A book with full of friendly advices...
கோபிநாத் அவர்கள் வாழ்வில் பார்த்த மனிதர்கள், அனுபவங்கள் ஊடாக சுயமுன்னேற்ற வகை கட்டுரைகள் தொகுப்பே இந்நூல். வாசிப்பதற்கு எளிய மொழி எளிய வார்த்தைகள். சில கட்டுரைகள் ரொம்ப நன்றாக இருந்தது, பல கட்டுரைகள் சுமார் தான். அங்கங்கு நிஜ வாழ்க்கை மனிதர்களை உதாரணம் காட்டி நகரும்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திச் செல்லும்.