Select a cover image
Searching for images...
Saving cover image...
காடோடி
Kaadodi
- பக்கங்கள்
- 340
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- அடையாளம் பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- 1
- ISBN-13
- 9788177202205
- ASIN
- 8177202200
மண் மரித்த கதை...
"ஓர் ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதி. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதம"-நக்கீரன்
நன்கு பருத்து உயர்ந்த நெடுமரம். அதனடியில் நின்று அதன் உயரத்தை அண்ணாந்து பார்க்கிறாள். கண்கள் அதன் பெரும் விரிவை அளக்கின்றன. இரு கைகளையும் அகல விரிக்கிறாள்.
அப்படியே காதலனை அணைப்பதுபோல அம்மரத்தைக் கட்டியணைத்து முத்தமிடுகிறாள். மரவணிகராக இருந்தாலும் இம்மனித…
user_17107
★ 5/5வரலாறோ பூகோளமோ, மேற்கைப் படித்த அல்லது படிக்க வைத்த அளவு நாம் கிழக்கைப் படிக்கவில்லை என்பது நிதர்சனம். பூமத்திய ரேகையை ஒட்டிய தென் கிழக்கு ஆசியாவில் இருந்த அடர்ந்த வெப்ப மண்டல மழைக்காடுகள் காங்கோவையும் அமேசானையும் விட எந்த வகையிலும் சளைத்தவை இல்லை.
பல அரிய ஆதி உயிரினங்கள், ஓரிட வாழ்விகள், தொல்குடி மக்கள் கொண்ட போர்னியோ தீவுகளுக்கு கடவுச்சீட்டில்லாமல் காடோடியோடு ஒரு பயணம். நம்மைப்போல ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டு சுரண்டல்களுக்கும் சூறையாடல்களுக்கும் உள்ளாகி பின்னர் மலேசியா இந்தோனேசியா என பிரிக்கப்பட்ட இயற்கையின் கொடை நிலங்கள் தாம் இவை.
காடு குறித்த தகவல்களையெல்லாம் திரட்டி ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிடாமல், அதில் சில தேர்ந்த பாத்திரங்களை வாழவைத்து உயிரோட்டமுள்ள, சொற்களஞ்சியம் நிறைந்த புனைவாக வழங்கியிருக்கிறார் ஆசிரியர். முடித்து இரண்டு நாட்களாகியும் பிலியவும், ஜோஸும், மூதாய் மரமும் என் தலைக்குள்ளேயே கூடாரம் அடித்து உக்கார்ந்திருக்கிறார்கள். சங்கிலி வாளின் இரைச்சல் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
முழு நீளத் திரைப்படம் எடுக்க அனைத்து அம்சங்களும் கொண்ட கதை. நம் மேற்குத் தொடர்ச்சி மழைக்காடுகளுக்கு என்ன நிலைமை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வெகு சொற்ப காலமே வாழ்ந்துவரும் மனித இனம் உலகுக்கு என்ன செய்து தன்னையும் அழித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர கானகத்தோடு பேசினால் புரியும். இயற்கை ஆர்வலர்கள் தவறாமல் வாசிக்க வேண்டிய காட்டின் ஆன்மா — காடோடி.
user_17106
★ 5/5காடோடி பற்றிய விரிவான மதிப்புரை. சூழலியல் குறித்த ஆழமான புரிதலை அளிக்கும் இந்த நாவல், வாசிக்க வேண்டிய முக்கியமான படைப்பு.
user_17105
★ 5/5காடுகளைப் பற்றிய கவர்ச்சிகரமான கதை. வாசிக்கும்போது காட்சிகளை எளிதாக கற்பனை செய்ய முடிந்தது. அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்!
user_17104
★ 5/5வெப்பமண்டல மழைக்காடுகள், இயற்கை மற்றும் முதனிகள் பற்றி அழகாக எழுதப்பட்ட நூல். மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் படைப்பு.
user_17103
★ 5/5சூழலியல் மற்றும் அதைச் சுற்றியுள்ள வணிகம் குறித்து கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல். இறுதியில் நீங்கள் காடுகளை நேசிப்பவராக மாறியிருப்பீர்கள்.
Shelves
More like this
சூழலும் சாதியும்
மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளிகளிலிருந்து மேய்ச்சல் நிலம் தேடி இந்தியத் துணைக்கண்டத்திற்குள் புலம்பெயர்ந்த ஆரியர்கள், இங்கு வேரூன்றியிருந்த தொல்குடி சமூகங்களின் பண்பாட்டை எ…
நீர் எழுத்து [Neer ezhuthu]
நம் மூச்சு என்பதும் நீரே! நிலமும் நீரே! நிலத்தில் வாழும் உயிரும் நீரே! தாவரங்கள், விலங்குகள் அனைத்துமே நீராலானது.
பால் அரசியல்
தம் குழந்தைகளுக்கு உண்மையாகவே தாய்ப்பால் கொடுக்க நினைத்தாலும், தமக்குப் பால் சுரப்பதில்லை என்று பல தாய்மார்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அது உண்மை நிலை அல்ல. எந்தவொரு த…
கார்ப்பரேட் கோடரி
சில கார்ப்பரேட் நிறுவனங்களின் முக்கியமான வேலையே இயற்கை வளங்களைச் சுரண்டி, கோடி கோடியாகப் பணம் குவிப்பதுதான். நிலம் கையகப்படுத்தும் சட்டம் கிராம மயமாக்கல்' என்ற கிண…
மோசடி மன்னன் டிஜஜி அலி (old book rare)
No description added