சூழலும் சாதியும்
Soozhalum Sathiyum
Select a cover image
Searching for images...
Saving cover image...
சூழலும் சாதியும்
Soozhalum Sathiyum
- பக்கங்கள்
- 88
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- காடோடி பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788195147113
- ASIN
- B0DM47N88Z
மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளிகளிலிருந்து மேய்ச்சல் நிலம் தேடி இந்தியத் துணைக்கண்டத்திற்குள் புலம்பெயர்ந்த ஆரியர்கள், இங்கு வேரூன்றியிருந்த தொல்குடி சமூகங்களின் பண்பாட்டை எவ்வாறு சிதைத்தனர் என்ற கேள்வியிலிருந்து தொடங்குகிறது இந்த ஆய்வு. ரிக் வேதத்தில் இடம்பெறும் ஆப்கானிய ஆறுகளும், அதில் குறிப்பிடப்படாத ஆலமரமும் விந்தியமலையும், ஆரியர்கள் இம்மண்ணின் சொந்தக்காரர்கள் அல்ல என்பதை நிரூபிக்கின்றன. வ…
user_18567
★ 4/5சூழலும் சாதியும் — நக்கீரன். சாதியத்தின் சுற்றுச்சூழல் தாக்கங்களை உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கும் நூல். பார்ப்பனீயம் சூழலியலை எவ்வாறு சாதியத்தைப் பரப்புவதற்கான கருவியாகப் பயன்படுத்தியது என்பதை ஆசிரியர் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
ஆரியர்களின் வட இந்தியாவுக்கான இடப்பெயர்ச்சி, தென்னிந்தியா ஆரிய திணிப்பை ஓரளவு எதிர்த்தது எப்படி என்பது உள்ளிட்ட பல விடயங்களை விளக்குகிறது. சாதி மனிதர்களிடம் மட்டும் தான் காணப்படுகிறது, இயற்கையின் வேறு எந்த கூறிலும் இல்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் இயற்கையின் கூறுகளுக்கு சாதி அடையாளம் இல்லாவிட்டாலும், மனிதர்கள் — குறிப்பாக பார்ப்பனீயம் — அவற்றை எவ்வாறு சாதிய நோக்கில் பயன்படுத்தி சுரண்டியது என்பதை ஆசிரியர் விவரிக்கிறார். கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.
user_18566
★ 4/5சாதியமும் சூழலியலும் எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளன என்பதை ஆதாரங்களுடன் விளக்கும் அவசியமான நூல். ஒவ்வொரு தமிழ் வாசகரும் கட்டாயம் படிக்க வேண்டிய படைப்பு.
user_18565
★ 5/5மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். சூழலியல் என்ற கோணத்தில் சாதியத்தின் வேர்களை அம்பலப்படுத்தும் இந்நூல், நம் அன்றாட வாழ்வில் நாம் கவனிக்காமல் கடந்து செல்லும் சாதிய அடையாளங்களை கண்முன் நிறுத்துகிறது. கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
user_18564
★ 4/5சூழலுக்கும் சாதிக்குமான பின்னிப்பிணைந்த உறவை வெளிச்சம் போட்டுக் காட்ட முயற்சிக்கிறது இந்நூல், அதற்கு நியாயமும் செய்திருக்கிறது. நூல் சூழலியல் மற்றும் சாதியம் இரண்டையும் பேசினாலும், சாதியம் குறித்த விவாதமே அதிகம் இடம்பெற்றிருக்கிறது. ஒருவேளை "சாதியும் சூழலும்" என்பதே பொருத்தமான தலைப்பாக இருக்கலாம்.
user_18563
★ 4/5இப்புத்தகத்தில் சாதி மற்றும் ஆரியத்தை மையமாக கொண்டு பேசுகிறது. இவ்விரண்டும் எவ்வாறு கொண்டு வரப்பட்டது? யாரால் கொண்டு வரப்பட்டது? எதன் அடிப்படையில் மக்களை பிரிவினைக்குள் கொண்டு வந்தார்கள் என்பதை விளக்குகிறது.
மேலும் இந்த சாதி பாகுபாடு மனிதர்களுக்கு மட்டும் தானா இல்லை மற்ற உயிரினங்களுக்கும் பொருந்துமா? இது போன்ற சுவாரசியமான கேள்விகளுக்கான பதில்கள் இப்புத்தகத்தில் கூறப்படுகிறது.
Shelves
More like this
காடோடி
மண் மரித்த கதை... "ஓர் ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதி. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதம"-நக்கீரன் நன்கு பருத்து…
நீர் எழுத்து [Neer ezhuthu]
நம் மூச்சு என்பதும் நீரே! நிலமும் நீரே! நிலத்தில் வாழும் உயிரும் நீரே! தாவரங்கள், விலங்குகள் அனைத்துமே நீராலானது.
பால் அரசியல்
தம் குழந்தைகளுக்கு உண்மையாகவே தாய்ப்பால் கொடுக்க நினைத்தாலும், தமக்குப் பால் சுரப்பதில்லை என்று பல தாய்மார்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அது உண்மை நிலை அல்ல. எந்தவொரு த…
கார்ப்பரேட் கோடரி
சில கார்ப்பரேட் நிறுவனங்களின் முக்கியமான வேலையே இயற்கை வளங்களைச் சுரண்டி, கோடி கோடியாகப் பணம் குவிப்பதுதான். நிலம் கையகப்படுத்தும் சட்டம் கிராம மயமாக்கல்' என்ற கிண…
மோசடி மன்னன் டிஜஜி அலி (old book rare)
No description added