இராஜராஜேச்சரம் [Rajarajecharam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இராஜராஜேச்சரம் [Rajarajecharam]

None

4.48/5 · 21 ratings

இராஜராஜேச்சரம் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூலாகும். தஞ்சாவூர் பெரிய கோயிலின் வரலாற்றினை இலக்கியம், கல்வெட்டு உள்ளிட்ட பல ஆதாரங்களைக் கொண்டுள்ள நூல்.

இந்நூல் ஒன்பது பகுதிகளையும், பின்னிணைப்பும் கொண்டு அமைந்துள்ளது.

தஞ்சை இராஜராஜேச்சரம் எனப்படுகின்ற பெரிய கோயிலைப் பற்றிய இந்நூலில் தஞ்சாவூர், இராஜராஜ சோழன், கோயிலின் தத்துவங்கள், சிற்பங்கள், இசை, கட்டடக்கலை போன்றவற்றைப் பற்றி வரலாற்று நோக்கில் இ…

Reviews

user_16244

★ 5/5
தமிழன் பெருமை பரவட்டும்.. இந்த வாய்பை மற்றும் வழியை தந்த Youtube தொலைக்காட்சி - அறம் பழகிக்குபார் க்கு நன்றி!!!

user_16243

★ 5/5
தஞ்சைப் பெருங்கோவிலின்பால் விருப்பமுள்ளவர்களுக்கு இந்நூல் ஒரு பெரும் புதையல் என கூறினால் அது மிகையல்ல. கோவிலின் கட்டுமானம் மற்றும் அது கூறும் தத்துவங்களும், சிற்பங்களின் எழிலும் அவை கூறும் கதைகளும், ஸ்ரீவிமானத்தின் உள்ளிருக்கும் ஓவியங்களும் அவற்றின் வரலாறும், கோவில் கட்டப்பட்ட காலந்தொட்டு இன்று வரை அது பெற்ற மாற்றங்களும் அவற்றைச் சுற்றி நடந்த நிகழ்வுகளும் என நாம் வளரும் நந்தி நிழல் சாயாத கோபுரம் எனப் பகிர்ந்து கொள்ளும் கற்பனைக் கதைகள் வரை இதில் இல்லாத தகவலே இல்லை. ஆசிரியர் தன் பெரும்பாலான விளக்கங்களுக்கு கல்வெட்டு அல்லது செப்பேட்டு ஆதாரங்களை மேற்கோள் காட்டுவது சிறப்பு. நூலில் நம் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ள நிழற்படங்கள் அனைத்தும் வண்ணப்படங்களாக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

user_16242

★ 5/5
சரித்திரம் என்பது கடந்தகால நிகழ்வுகளின் தொகுப்பு. இந்திய வரலாறு என்னும் காலப் பெட்டகத்தில் "தமிழக வரலாறு" ஒரு முக்கிய பொக்கிஷம். சங்ககாலம், களப்பிரர் காலம், பல்லவர், சேரர், சோழர், பாண்டியர், விஜயநகர நாயக்கர்கள், மராத்தியர்கள், பிரெஞ்சு, நவாப், இஸ்லாமியர்கள், பிரிட்டிஷ் ஆட்சி என்று நீண்ட நெடிய கலவரிசை கொண்டது நம் தமிழ்நாடு. ஆனால் சோழர் ஆட்சிக்காலத்தை சுட்டிக்காட்டாமல் தமிழக வரலாறு முழுமை அடையாது. பல்லவர் காலத்தில் ஆரம்பித்த கற்கோயில்கள் சோழர்கள் காலத்தில் மேலோங்கியது. கலை, சிற்பம், ஓவியம், கட்டுமான பிரம்மாண்டம் என்று படிக்க படிக்க என்னை பிரமிக்க வைத்த புத்தகம் தான் ஐயா திரு.குடவாயில் பாலசுப்ரமணியம் எழுதிய "ராஜராஜேச்சுரம்". கிபி 850ல் விஜயாலய சோழன் முத்தரைய மன்னனை வென்று தஞ்சையை கைப்பற்றி, அதை தலைநகரமாக ஆக்கினார். நிசும்பசூதனி எனும் தேவியே குலதெய்வமாக தோற்றுவித்தார். விஜயாலய சோழன் தொடங்கி ஆதித்தன், பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், மதுராந்தகா உத்தம சோழன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்று 175 ஆண்டுகள் மாபெரும் சாம்ராஜ்யம் அமைத்தது சோழ பேரரசு. இதில் ராஜராஜ சோழன் தனிச் சிறப்பிற்கு உரியவன். பல்லவர் ஆட்சியில் போர்கள் காரணமாக தமிழகத்தின் செல்வ வளங்கள் சீரழிந்ததை உணர்ந்து, போர்க்களம் காணாமல் இருக்க எல்லா எதிரிநாடுகளுக்கும் தூது அனுப்பி நட்புக்கரம் நீட்டினான். எதிர்த்தவர்களை அடக்கியும், படைகளையும் தலைவர்களையும் அனுப்பி நிலையான ஆட்சி செய்தவன் ராஜராஜன். காஞ்சிபுரத்தில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கயிலாசநாதர் கோவிலால் மயங்கிய ராஜராஜனுக்கு ஓர் எழுச்சி தூண்டியது. அதன் விளைவாக உருவானதே, 1000 ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக காட்சியளிக்கும் தஞ்சை பெருவுடையார் கோவில். ராஜராஜன் பாராட்டுக்குரியவன் என்றாலும், கோவிலை உருவாக்கிய கட்டிடக்கலைஞன் "வீரசோழன் குஞ்சரமல்லன் எனும் ராஜராஜ பெருந்தச்சன்" இல்லாமல் இந்த கோவில் சாத்தியமில்லை. இப்பெருங்கோவிலின் கட்டடக்கலை, விமானத்தின் சிறப்பு, வரலாற்றை கூறும் கல்வெட்டுகள், கவின்மிகு கலை, அரசியல், சமயம், பொருளாதார நிலை, இறையாண்மை என்று திகட்ட திகட்ட தேன் அமுதை உண்டது போல ஒரு திருப்தி இந்த புத்தகத்தை படித்தபோது எனக்கு கிடைத்தது. கோவில் கட்டுவதற்கு எங்கிருந்து கற்கள் எடுக்கப்பட்டது? கோவில் எந்த ஆகம விதிப்படி எழுப்பப்பட்டது? ஒவ்வொரு சிற்பங்களும், ஓவியங்களும் சொல்லும் கதைகள் என்னென்ன? பிற்காலத்தில் மராத்தியர்களும், நாயக்கர்களும் கோவிலை எப்படி புதுப்பித்தனர்? இஸ்லாமியர் / ஆங்கிலேயர் காலத்தில் கோவில் எப்படி சிதைவுக்குள்ளானது? அனைத்திற்குமான பதில் இந்த புத்தகத்தில் உள்ளது. ஒவ்வொரு கலாரசிகரும் வீட்டில் பொக்கிஷமாக வைத்துக்கொள்ளவேண்டிய புத்தகம்.
Genres
Shelves
Kudavayil Balasubramanian book History

More like this


கி.மு கி.பி [Ki.Mu Ki.Pi]

குமுதம் இதழில் ஒரு வரலாற்று தொடராக வெளிவந்து பெரும் பாராட்டை பெற்றது. மொத்தத்தில் உலக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு தமிழில் ஒரு நல்ல புத்தகம்.

4.48/5 · 21 ratings

ஆரிய மாயை

ஆரிய மாயை என்னும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளின் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் பல ஆற்றல் அறிஞர்களின் ஆராய்ச்சி உரைகளை திரட்டியும் வெளியிட…

4.48/5 · 21 ratings

பெண் ஏன் அடிமையானாள்?

Author: Periyar

"ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மத…

4.48/5 · 21 ratings

கங்கை கொண்ட சோழன் (பாகம் 1) [Gangai Konda Cholan #1]

With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…

4.48/5 · 21 ratings

ಯಾದ್ ವಶೇಮ್ | Yad Vashem

ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம், பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது …

4.48/5 · 21 ratings

Buddha

King Suddhodana was at his wit's end. He had surrounded his handsome young heir with comfort and riches, love and respect, but Prince Siddhartha w…

4.48/5 · 21 ratings

Tamil Tigress

Two days before Christmas in 1987, at the age of 17, Niromi de Soyza found herself in an ambush as part of a small platoon of militant Tamil Tiger…

4.48/5 · 21 ratings

Smoke and Mirrors : An Experience of China

Winner of the Vodaphone Crossword Readers Choice Award 2008 by far the most well-informed and entertaining account of life in the Middle Kingdom b…

4.48/5 · 21 ratings

பெண்ணின் மறுபக்கம் [Pennin Marupakkam]

Author: N. Shalini

உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆண்…

4.48/5 · 21 ratings

The Great Hedge of India: The Search for the Living Barrier that Divided a People

Author: Roy Moxham

Remarkable and "astonishing," says Jan Morris of Roy Moxham's account of his search for "one of the least-known wonders of Queen Victoria's India,…

4.48/5 · 21 ratings

பண்பாட்டு அசைவுகள் [Panpattu Asaivugal]

'அறியப்படாத தமிழகம்', 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைக…

4.48/5 · 21 ratings

The Image Trap: M G Ramachandran in Film and Politics

This book examines the fascinating career of the late M G Ramachandran (or `MGR′), the film-actor-turned-politician of Tamilnadu. The autho…

4.48/5 · 21 ratings