Reviews for பால காண்டம்
13 reviews total
user_16081
Feb 02, 2026எனக்குப் பிடித்து இருந்தது. வாழ்க்கையில் நம்பிக்கையை உண்டாக்கும் அனுபவம். இந்த புத்தகம் முழுவதுமாக புரிந்து கொண்டேன். நா. முத்துக்குமாரின் எழுத்தால் எப்போதும் கவரப்படுகிறேன்.
user_16080
★ 5/5 Feb 02, 2026தன் பால்ய வயதில் சந்தித்த நபர்கள் பாதித்த விஷயங்களை விரிவாக எழுதியுள்ளார் நா. முத்துக்குமார். கல்லூரி படிக்கும் போது தாஜ்மஹால்தாசன், மாணவர்களுக்குக் கவிதை எழுதிக் கொடுத்தவர், கடைசியில் காதல் வலையில் சிக்கவில்லை. தனது தந்தையை மதுவால் இழந்த ஒருவர், நாகரிக வாழ்க்கை என்ற பெயரில் மதுவுக்கு அடிமையாகி விடுகிறார். ஒவ்வொரு கட்டுரையும் மனதைத் தொட்டுச் செல்கிறது.
user_16079
★ 5/5 Feb 02, 2026பால காண்டம் ஒரு நதியைப் போன்றது. தண்ணீர் வற்றிவிட்டாலும் மணலுக்கடியில் அந்த நதி ஓடிக்கொண்டுதான் இருக்கும்!