Reviews for பால காண்டம்
13 reviews total
user_16091
★ 4/5 Feb 02, 2026பால காண்டத்தை வாசித்தபோது பால்ய நினைவுகள் அனைத்தும் மீண்டும் வந்தன. நா.முத்துக்குமாரின் எழுத்து மிகவும் உணர்ச்சிபூர்வமானது.
user_16090
★ 4/5 Feb 02, 2026மிக எழிமையான எழுத்துக்களால் சிறுவயது ஞாபகங்களைக் கொண்டு வருகிறார். நா.மு. வாசிக்க ஒரு விருப்பம் ஏற்படும் எழுத்து.
user_16089
★ 3/5 Feb 02, 2026நன்றாக படிக்கக் கூடிய புத்தகம். பால்ய நினைவுகளைக் கொண்டுவருகிறது.
user_16088
★ 4/5 Feb 02, 2026பால காண்டம் ஒரு நிதியைப் போன்றது. தண்ணீர் வற்றிவிட்டாலும் மணலுக்கடியில் அந்த நதி ஓடிக்கொண்டுதான் இருக்கும். வாசிக்கும் போது என்னுடைய பாலிய வயதில் கடந்து வந்த அனுபவம் நினைவுக்கு வருகிறது.
user_16087
★ 4/5 Feb 02, 2026இந்த புத்தகத்தை மிகவும் விரும்புகிறேன். நா.முத்துக்குமாரின் எழுத்து மனதைத் தொடர்ந்து செல்கிறது. பால காண்டம் அவரது சிறந்த படைப்புகளில் ஒன்று.
user_16086
★ 4/5 Feb 02, 2026மிகச் சிறந்த புத்தகம். படிக்கும்போது ஒவ்வொரு கட்டுரையும் மனதைத் தொட்டுச் செல்கிறது. பால்யத்தின் அழகும் நினைவும் இப்புத்தகத்தில் மிகச்சிறப்பாக பதிவாகியுள்ளன.
user_16085
★ 4/5 Feb 02, 2026உறவுகளைத் தம் சின்னஞ்சிறு கதைகளுள் அடக்கி எதார்த்தமாக நமக்குப் புரிய வைப்பதில் நா. முத்துக்குமாரை எவரும் மிஞ்சிட முடியாது. தன் பாலகாண்டத்தில் ஏற்பட்ட நிகழ்வகளை வாழ்க்கை பயணத்தோடு பிணைத்து ஓர் அழகான பாதையைக் காட்டுகிறது இவரது பாலகாண்டம்.
user_16084
★ 4/5 Feb 02, 2026குழந்தைப்பருவத்தில் நம் முழு வாழ்க்கையின் சாரமும் ஒளிந்திருக்கிறது என்பதை ஒரே வரியில் விளக்கிவிடுகிறார் நா. முத்துக்குமார். பதினைந்து கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பின் ஒவ்வொரு கட்டுரையும் மனதைத் தொட்டுச் செல்கிறது. பரிமளா அக்கா, பவழ நாட்டு இளவரசன், அஞ்சு ரூபாய் டாக்டர், கோவிந்தசாமி தாத்தா போன்ற மனிதர்கள் இப்போது என் மனதிலும் படிந்துவிட்டார்கள்.
user_16083
★ 5/5 Feb 02, 202615 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தனது பாலபிராயத்திலிருந்து கல்லூரி, பாடலாசிரியர் ஆனது வரை தான் சந்தித்த நபர்களைப் பற்றி, அவர்களிடமிருந்து பெற்ற அனுபவத்தைப் பற்றி, ஞாபக பெட்டகத்திலிருந்து எடுத்து, கவிதைநடையில் கட்டுரைகளாகத் தீட்டியிருக்கிறார் நா. முத்துக்குமார். ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் நாலைந்து வரிக் கவிதையோ, சொற்றொடரோ மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
user_16082
★ 5/5 Feb 02, 2026சிறுவயதில் கடந்து வந்த அனுபவங்கள் சில நம் மனதில் பசுமரத்தாணி போல் ஆழமாகப் பதிந்து விடுவதுண்டு. வளர்ந்துவிட்ட பின்னும் நமக்கு இருக்கும் சில குணநலன்கள் பல நம் சிறுவயது அனுபவங்களின் தாக்கமாக இருக்கும். நா.மு. அவர்களின் பால்ய கால நாட்களின் அனுபவங்கள், மனிதர்களின் கதையின் தொகுப்புதான் இந்த பால காண்டம்.