Reviews for தன்மீட்சி
19 reviews total
user_15962
★ 4/5 Feb 02, 2026இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான பிரச்சனை — ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கான தனி வாழ்வை அடைய நினைப்பது. சென்ற தலைமுறை தனிப்பட்ட வாழ்வு இல்லாமல் குடும்ப வெற்றி, குடும்பச் சொத்து என்று வாழ்ந்தார்கள். இன்று தனிப்பட்ட வாழ்வை அடைய நினைக்கும் அனைவர் முன் நிற்கும் கேள்விகள் — நான் யார்? மனித வாழ்விற்கு என்ன அர்த்தம்? விலங்குகள் போல வாழ்ந்து மடிவதுதான் மனிதனின் வேலையா?
இது போன்ற வாசகர்களின் கேள்விகளுக்கு ஜெயமோகன் இருபது வருடங்களாகப் பதில் எழுதிக் கொண்டிருக்கிறார். இதை அவர் இந்த நூற்றாண்டின் உள் சிக்கல் என்று கருதுகிறார். மனித இருப்பு குறித்த கேள்வி மனதில் எழும்போது அறம் சார்ந்த குழப்பங்களும் வருகின்றன — அதற்கான பதிலாக இந்த நூல் உள்ளது.
இன்றைய இளைஞர்கள் விருப்பமில்லாத துறைகளில் சமூக, குடும்ப நெருக்கடியால் தங்களைச் செலுத்திக் கொண்டு உழல்கிறார்கள். அவர்கள் தங்கள் அகக் கனவுலகைக் கண்டடைய இந்த நூல் வழிகாட்டும்.
user_15961
★ 4/5 Feb 02, 2026ஜெயமோகன் தனது வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பே தன்மீட்சி. வழக்கமான சுய முன்னேற்றப் புத்தகங்களைப் போல "எப்படி வாழ வேண்டும்" என அறிவுரை கூறாமல், "ஏன் வாழ்கிறோம்?" என்ற ஆழமான கேள்வியை நமக்குள் எழுப்புகிறது.
வெறுமை, வாழ்வின் அர்த்தம், பணியிடச் சிக்கல்கள், தனிமை, சோம்பல், லட்சியமின்மை, வாசிப்பின் அவசியம், இயந்திரமயமான வாழ்க்கை போன்ற பல்வேறு கோணங்களில் எழும் மனித மனத்தின் கேள்விகளுக்கு ஜெயமோகன் தெளிவாகவும் ஆழமாகவும் பதிலளிக்கிறார்.
மனம் துவண்டு போய்விட்டதாகத் தோன்றும் எந்தத் தருணத்திலும், இந்த நூல் ஒரு மறுதொடக்கப் பொத்தான் போல செயல்படும். நீங்கள் தேடும் கேள்விகளுக்கான பதில்கள் கண்டிப்பாக இதில் இருக்கும்.
user_15960
★ 5/5 Feb 02, 2026வாசகர்களின் கேள்விகளுக்கு ஜெயமோகன் அளித்துள்ள கட்டுரைகளின் தொகுப்பே தன்மீட்சி.
நாம் வாழும் சமூகம் இதுதான் வாழ்க்கை என்று கற்றுக்கொடுத்த பல போலியான நம்பிக்கைகள் இக்கட்டுரைகளில் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கட்டுரையும் நம்முள் மூடிக்கிடக்கும் பல கதவுகளைத் திறந்து நம்மை மீள வைக்கிறது.
user_15959
Feb 02, 2026அறிவொளி தரும் நூல். சுய முன்னேற்றப் புத்தகம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
ஜெயமோகனின் கடிதங்களும் அவற்றுக்கான பதில்களும் அடங்கிய தொகுப்பு. கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.
user_15958
★ 5/5 Feb 02, 2026நம் இலக்குகளில் கவனம் செலுத்துவதற்கு எப்படி ஒழுங்குபடுத்திக் கொள்வது என்பது பற்றிய மிகவும் பயனுள்ள நூல். செயல்திறனை மேம்படுத்த விரும்புவோருக்கு அருமையான வழிகாட்டி.
user_15957
★ 5/5 Feb 02, 2026மனம் சோர்வடையும் போதெல்லாம் இந்தப் புத்தகத்தை எடுத்து வாசிப்பேன். ஒவ்வொரு முறையும் புதிய ஊக்கத்தையும் தெளிவையும் தருகிறது.
user_15956
★ 5/5 Feb 02, 2026தன் இலக்கை உணரவும் அடையவும் விரும்புபவர்களுக்கான சிறந்த நூல். மிகவும் பரிந்துரைக்கிறேன்!
user_15955
★ 5/5 Feb 02, 2026தன்னை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அரிய பொக்கிஷம் இந்நூல். ஜெயமோகனின் ஆழமான சிந்தனைகள் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன.
user_15954
★ 3/5 Feb 02, 2026நீண்ட காலமாக வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகம். தன்னை மீட்டெடுத்துக் கொள்வது பற்றியது என்று நினைத்தேன் — தவறும் இல்லை, சரியும் இல்லை.
ஆசிரியருக்கும் வாசகர்களுக்கும் இடையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி-பதில் தொகுப்பு இது. வழிகாட்டுதலும் ஆலோசனையும் தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
user_15953
★ 5/5 Feb 02, 2026வாழ்வின் இலக்கு என்ன? சோம்பலும் ஆணவமும் நம் வாழ்வை எப்படித் திருடுகின்றன? அகம் புறம் இரு நிலையிலும் மகிழ்ச்சியுடன் எப்படி வாழ்வது? நான் யார்? இந்த உலகிற்கு நான் செய்யப்போகும் அர்த்தமுள்ள வேலை என்ன?
இது போன்ற மீள் கேள்விகளுக்கு ஜெயமோகனின் தன்மீட்சி மூலம் நம்மை மீட்டெடுக்கலாம். தன்னறம் நூல் வெளியீடு மற்றும் குக்கூ காட்டுப்பள்ளிக்கு மிகப் பெரிய நன்றிகள் — இவை மிகப்பெரிய சேவை.