அடி [Adi]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அடி [Adi]

None

3.74/5 · 70 ratings

ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை வசீகரமான அபாயத்துடன் பேசுகிறார்.அனேகமாக மனதை உடல் வெற்றிகொள்வதாகவே பல படைப்புகளின் கதையோட்டமும் அமைந்திருக்கிறது.இந்த மீறலை இயல்பானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் குற்ற உணர்வின் பரவசத்தைக் கிளர்த்துவதாகவும் அவரது பாத்திரங்கள் காணுகி…

Reviews

user_15938

★ 3/5
சபலத்தின் காரணமாக மனிதப் புத்தி தடுமாற்றம் அடைகிறது, அதற்கு தண்டனையாக "அடி" மங்களத்திற்க்கு விழுகிறது.

user_15937

★ 3/5
செல்லப்பா - மங்களம், பட்டு-சிவசாமி . செல்லப்பா-பட்டு சபலம் கொண்டு கூடி விடுகிறார்கள். இறுதியில் யார் யாருக்கு என்ன அடி கிடைத்தது என்பதே அடி நாவலின் அடிநாதம்.

user_15936

★ 3/5
Finished reading it a week ago. And I am still not been able to comprehend the author views. Didn't he try to justify Chellappa's actions? Throughout the book, he amplified how Paattu looks and at the end, he pleases us by saying its only lust and nature's beauty is supreme. Also, I couldn't fully understand this whole saga involving the godman. Otherwise, the book gave me a good visual imagination of this world would have looked.

user_15935

★ 3/5
#3rdBook #Madhureadingchallenge2025 Title : அடி Author : தி. ஜானகிராமன் Genere : நாவல Book Type : Paperback Start Date : 21-Jan-25 End Date : 23-Jan-25 Rating : 4/5 Number of Page : 120 வெறும் 120 பக்கங்கள் கொண்ட மிகச்சிறிய நாவல். தி ஜா அவர்களது இறுதி காலத்தில் எழுதி முடிக்கப்பட்ட புத்தகம். புத்தகம் முழுவதும் தி. ஜா அவர்களுக்கே உரியது எழுத்து நடை. செல்லப்பா, தையும்மா, பட்டு, சிவசாமி, மங்களத்தம்மாள் இவர்களை சுற்றி நடக்கும் கதை. ராணுவத்தில் வேலை செய்யும் செல்லப்பா, அவரது துரத்து உறவினர் பட்டுவும் ஒருவர் மீது ஒருவர் சபலம் கொள்கின்றனர். பந்தமும் சபலம் ஒன்று தான். திருமணத்திற்கு பின்பு வரும் பந்தத்தை என்னதான் புனிதம், தெய்வீகம் என்று கூறினாலும் அது சபலமாகவே பார்க்கப்படும் என்ற எதார்த்தத்தை நெத்தி ' அடி ' யாக கூறுகிறார். இறுதியில் செல்லப்பாவை தன் மகனிடம் தான் செய்ததை சொல்ல வைக்கும் இடத்தில் தி.ஜா வின் final touch தெறிக்கும்

user_15934

★ 4/5
தி.ஜாவின் படைப்புகளில் இருந்து சிறிதும் மாறுபட்டது, சபலத்தில் தொடங்கி சமூக நிர்ப்பந்தத்தில் முடியும் உறவு, உடலும் மனமும் ஒன்று சேர்ந்து கடவுளை காரணம் சொல்ல...அதே கடவுள் திருப்பி கொடுத்த "அடி"

user_15933

★ 2/5
அடியின் அடி நாதம் பிடிபடவில்லை.

user_15932

★ 5/5
"அடி" - தி.ஜானகிராமன் =================== 20ம் நூற்றாண்டின் மத்திய வாக்கில், மாயவரத்தை ஒட்டிய கிராமத்திலும், டெல்லியிலும் கதைகளம் அமைந்திருப்பதாக இக்குறுநாவல் எழுதப்பட்டிருக்கிறது. அக்கிராமத்தில் வசிக்கும் தையும்மாள் வீட்டில், அவளது ஒரே மகனான இராணுவத்தில் பணிபுரியும் செல்லப்பா தனது நினைவுகளை அசைபோடுவதாக ஆரம்பிக்கிறது கதை. இதில்மேலும் செல்லப்பாவின் மனைவி மங்களத்தம்மாள், தையும்மாளின் தூரத்து உறவுபெண் பட்டு, அவளது கணவன் சிவசாமி அம்பைகடாட்சம் போன்றவர்கள் முக்கிய கதைமாந்தர்களாக படைக்கப்பட்டிருக்கிறார்கள் . இவர்களுக்குள் நடக்கும் உணர்வுக்குவியல்களால் ஆன இக்கதையில், நம்மையும் அவர்களுடன் உள்ளிழுத்து, அந்த உணர்ச்சிகளை நமக்குள் கடத்திவிடுகிறது இக்கதையின் போக்கு. அதாவது, செல்லப்பா எனும் 50வயதினன் பாதை மாறும்போதும், அதை எதிர்கொள்ளும் மங்களம், பட்டு, அதற்கு பரிகாரம் செய்யும் செல்லப்பா இவர்களின் மனவோட்டங்களையும் நம்முள் கடத்திவிடுகிறார்கள். அம்பைகடாட்சம் எனும் ஆன்மீக பெரியவரிடம் மிகுந்த பக்தி கொண்ட மங்களத்தம்மாள், அவரிடம் வாங்கும் 'அடி', செல்லப்பாவை சுற்றியிருக்கும் அக்குடும்பத்தவர்களுக்கு புரியவில்லை என்றாலும், செல்லப்பாவிற்கும், வாசிக்கும் நமக்கும் நல்லொழுக்கத்தினையும் நல்ல படிப்பனையையும் சம்மட்டி அடியாக புரியவைக்கும். இயல்பான நடையில் எழுதுவது திரு தி.ஜானகிராமன் அவர்களின் சிறப்பு.காலங்கடந்து தற்போதும் வாசிக்கும் படியான கதைக்கருவும் எழுத்துநடையும் கொண்ட இக்கதையில் அவரின் முற்போக்கு வீச்சை அறியலாம். அது தற்போதைய சமுதாயத்திற்கும் தேவையாகவும் இருக்கிறது. 'அடி', குறுநாவல் என்றாலும், நமக்கு ஏற்படுத்தும் கனம் அதிகம்!
Shelves
Thi. Janakiraman book

More like this


அன்பே ஆரமுதே

“முப்பது வருஷங்கள் தினம் பத்து தடவையாவது நினைக்கிற ஒருவரிடம் எப்படிச் சொல்லாமலிருப்பது என்று புரியவில்லை. இல்லாவிட்டால் பெண்மனம் ஆறாது.” தி. ஜானகிராமன் நாவல்கள…

3.74/5 · 70 ratings

அம்மா வந்தாள் [Amma Vanthaal]

‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…

3.74/5 · 70 ratings

நளபாகம்

N/A

3.74/5 · 70 ratings

Amma Vanthal (Modern Tamil Classic Novel)

No description added

3.74/5 · 70 ratings

சிலிர்ப்பு

சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிரானம். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். ச…

3.74/5 · 70 ratings

தி. ஜானகிராமன் குறுநாவல்கள்

நல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயங்களும் தனித்தன்மையும் வள…

3.74/5 · 70 ratings

செம்பருத்தி [Semparuthi]

விழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர்பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம், இச்சைக்கும் அடக்கத்துக்கும் நடுவில் நிலைபெறும் உறவு, இவற்றை வெவ்…

3.74/5 · 70 ratings

அபூர்வ மனிதர்கள் [Aboorva Manithargal]

கச்சிதமும் உயிரோட்டமும் கொண்ட தி. ஜானகிராமன் சிறுகதைகளுக்கு கொஞ்சமும் குறைவு படாதவை அவர் தீட்டிய அனுபவச் சித்திரங்கள். கதைகளின் இலக்கிய கோரிக்கைக்கு ஆற்படாமல் மிகச் சுத…

3.74/5 · 70 ratings

உயிர்த்தேன்

வெளிப்படையாக பார்த்தால் கதாபாத்திரங்களை பற்றிய கதையாக இருந்தாலும் உண்மையில் இது எல்லாரையும் இழுத்து அணைத்துக்கொள்ளும் நல்ல மனிதர்களின் கதை. அன்பின் கதை. தோதுபடாத இடத்தில் …

3.74/5 · 70 ratings

மோகமுள் [Moga Mul]

மோகமுள் பற்றிப் பொதுவாக அது நல்லதோர் நாவல், மிகவும் சிறப்பாக அமைந்துவிட்ட ஒரு உன்னதமான சிருஷ்டி, ஜானகிராமனின் மிகச்சிறந்த முயற்சி என்று சொல்வதற்கு மேல் விரிவாக எதுவும்…

3.74/5 · 70 ratings