Reviews for நட்சத்திரவாசிகள்
26 reviews total
user_15860
★ 4/5 Feb 02, 2026ஐடி துறையை அடிப்படையாகக் கொண்ட அரிய தமிழ் நாவல் இது. நேர்கோட்டில் அல்லாத கதைசொல்லல் முறையும், ஏராளமான கதாபாத்திரங்களும் ஐடி துறையின் உணர்வுகள், தனிமை, கடின உழைப்பு, அலுவலக அரசியல் ஆகியவற்றின் பன்முக பார்வையை அளிக்கின்றன.
மது, காமம், கேளிக்கை போன்ற எளிதான சாதனங்களை நாடாமல் யதார்த்தமான சித்தரிப்பை முன்வைக்கிறது இந்நாவல். சமகால சூழலில் எழுதப்பட்ட ஒரு புனைகதை, தீர்ப்பு வழங்காமல், பொதுவான முடிவுகளுக்கு வராமல், கதையைச் சொல்லி, சூழலில் நம்மை மூழ்கடித்து, நாம் வாழ்ந்த உலகைப் பற்றி அமைதியாகச் சிந்திக்க வைக்கும்போது சிறப்பானதாகிறது. கார்த்திக்கின் இந்த முதல் நாவல் அதை அழகாகச் செய்கிறது.
user_15859
★ 4/5 Feb 02, 2026நல்ல நாவல். ஐடி துறையின் யதார்த்தங்களை எளிமையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். படிக்கத் தூண்டும் எழுத்து நடை.
user_15858
★ 4/5 Feb 02, 2026எப்போது ஆரம்பித்து எப்போது முடித்தோம் என்று தெரியவே இல்லை! நான் ஒவ்வொரு நாளும் இப்படித்தான் இருப்பேனா என்ற கேள்வியுடன் வாசித்த நொடிகள் எல்லாம் மனதில் ஓடியது. இந்த ஆண்டுகள் எல்லாம் நானும் இதைத்தான் செய்தேன், ஆனால் கார்த்திக் போல் என்னால் இந்த ஐடி உலகைப் பார்க்க முடியவில்லை!
இங்கே இருக்கும் மனித வலிகள், உழைப்பு சுரண்டல், உறவுச் சிக்கல்களை மிக உயிர்ப்புடன் சொல்லியிருக்கிறார். என்னை மறந்து நான் வாசித்தேன்!
user_15857
★ 4/5 Feb 02, 2026ஐடி துறையில் இருந்துகொண்டே இந்த நாவலைப் படிக்கும்போது மனதில் ஒரு பாரம் கூடுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்தத் துறையின் அழுத்தங்களையும் சிக்கல்களையும் நேரடியாக அனுபவிப்பவர்களுக்கு இந்நாவல் மிகவும் நெருக்கமாக உணரவைக்கும்.
user_15856
★ 5/5 Feb 02, 2026சென்னையின் வாழ்வியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது ஐடி துறை. தமிழகத்தின் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பிறந்து, வளர்ந்து, படித்த இளைஞர்களின் பெரும் இடப்பெயர்வை இந்த நூற்றாண்டில் ஐடி துறை நிகழ்த்திக் காட்டியது.
பொருளாதாரத் தன்னிறைவை எட்டியிருந்தாலும் இந்த துறை சார்ந்த அழுத்தங்களும், எப்போதும் மன நிம்மதியற்ற சூழலையும், அது சார்ந்த அகச்சிக்கல்களையும் தினமும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த வாழ்வியலை பதிவு செய்த சொற்பமான படைப்புகளில் மிக முக்கியமான படைப்பு நட்சத்திரவாசிகள்.
கதை ஐடி அலுவலகத்தை சார்ந்திருந்தாலும், அதில் செக்யூரிட்டியாக பணிபுரியும் ராமசுப்பு கதாபாத்திரத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது. அலுவலக சூழலை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அது சார்ந்து இயங்கக்கூடிய மக்களின் வாழ்வையும் பதிவு செய்திருப்பது எனக்கு கதையுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியது.
பொதுமக்களிடம் ஐடி துறை சார்ந்த பல்வேறு கற்பிதங்கள் இருக்கிறது. "உனக்கு என்னப்பா, நீ ஐடியில வேலை செய்ற, ஜாலிதான், லச்ச லச்சமா சம்பளம், சென்னையில சூப்பரான லைஃப் ஸ்டைல்" என்ற வாக்கியத்தை பெரும்பான்மையான நேரத்தில் எதிர்கொண்டிருப்போம். ஆனால் இங்கு நிலைமை வேறு மாதிரி இருக்கிறது என்பதை நித்திலன், சாஜூ என கதை மாந்தர்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஆன்சைட் செல்வதற்கான சாஜூவின் எதிர்பார்ப்பும், ஆனால் அதற்கு பரிசாக கிடைக்கும் ஏமாற்றமும், அது சார்ந்து நடக்கும் அலுவலக அரசியலையும் பெரும்பான்மையான ஊழியர்கள் கடந்து வந்திருப்போம். இரவில் பணி செய்துவிட்டு காலையில் வீடு திரும்பும் ஊழியர்களின் உடல் நிலையையும், மன நிலையையும் சரியாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
சினிமாவில் காட்சிப்படுத்தப்படும் ஐடி அலுவலக காட்சிகளைப் போல இல்லாமல் அங்கு நடக்கும் யதார்த்தங்களை நாவல் வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
user_15855
★ 5/5 Feb 02, 2026ஐ.டி துறை பல கீழ் நடுத்தர மற்றும் நடுத்தர குடும்பங்களை சமூக மற்றும் வசதியில் மேலே கொண்டுவந்துள்ளது. அந்த துறையிலுள்ள அலுவலக அரசியலை, உழைப்புச் சுரண்டலை, குடும்ப உறவு சிக்கல்களை மிக விரிவாக பதிவுசெய்துள்ளது இந்த நாவல்.
இதில் சொல்லப்பட்டுள்ள பல சம்பவங்கள் எனக்கும் என் சக பணியாளர்களுக்கும் நடந்துள்ளது. ரொம்ப நாள் ஆன பிறகு, படிக்க படிக்க பல இடங்கள் என் அலுவலக அனுபவங்களை அசைபோட்டது போல் உள்ளது.